Tuesday 28 July 2009

கொஞ்சம் தேநீர்- மருமகள்!!

கவிதை எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே! சும்மா மொக்கையா ரெண்டு எழுதியிருக்கேன். மக்கள் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்!!

 

நல்லா உடம்பைப்

பார்த்துக்கொள்ளுங்கள்,

நாங்க அடிக்கடி

வந்து பார்த்துக்கொள்கிறோம்!

உங்களை விட்டு

எப்படி இருக்கப்போறமோ?

கதறி அழுதாள்

புதுக் குடித்தனம்

போகும் மருமகள்!!

 

மாலை அணிவித்து

ஆணியடித்து

சுவரில் மாட்டப்பட்டது

அம்மாவின் படம்,

அலறி மயங்கி

அடித்துக்கொண்டு

அழுதாள் மனைவி

திருப்தியுடன்!!! 

33 comments:

யாரோ ஒருவர் said...

வாழ்க்கையின் எதாற்தம் இது தான்!!!

தேவன் மாயம் said...

Blogger Thirumathi Jaya Seelan said...

வாழ்க்கையின் எதாற்தம் இது தான்!!!///

பெண்ணினமே!! முதல் பின்னூட்டமிட்டது ஆச்சரியம்!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அரசியல்

தேவன் மாயம் said...

Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

அரசியல்//

குடும்ப அரசியல்!

அ.மு.செய்யது said...

ரொம்ப நாளாச்சி நீங்க காலையில டீ ஆத்தி....சாரி டீ போட்டு...

நல்லாருக்குங்க கவிதை..! பெண்ணியல்.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாளுக்கு பிறகு தேநீர்

இனிப்பை விட காரம் ஜாஸ்தி

காலத்திற்கு ஏற்றது தான்.

தேவன் மாயம் said...

Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

அரசியல்//

குடும்ப அரசியல்!

28 July 2009 18:56
Delete
Blogger அ.மு.செய்யது said...

ரொம்ப நாளாச்சி நீங்க காலையில டீ ஆத்தி....சாரி டீ போட்டு...

நல்லாருக்குங்க கவிதை..! பெண்ணியல்.////

கொஞ்சம் டீத்தூள் மிச்சமாக் கெடந்துச்சி ,................

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நாளுக்கு பிறகு தேநீர்

இனிப்பை விட காரம் ஜாஸ்தி

காலத்திற்கு ஏற்றது தான்.///

கொஞ்சம் சுக்கு தட்டிப்போட்டேன்!!

மேவி... said...

yedartham ..... sema natural ah irukku kavithai

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மை..:-((

Anonymous said...

காலம் மாறினாலும் இந்த மனித இயல்புகள் மாறுவதில்லை...ஆம் இதை மாற்றிக் கொள்ள நாம் முயலுவதேயில்லை...

இளைய கவி said...

ஜீப்பரு

நான் said...

சத்தியமா புரியல

பாலராஜன்கீதா said...

மருமகளும் ஒருநாள் மாமியாராகும்போது புரிந்துகொள்வார்களா ?

ஈரோடு கதிர் said...

//சும்மா மொக்கையா ரெண்டு எழுதியிருக்கேன்//
மொக்கை... என்னா ஒரு வில்லத்தனம்

கவிதைகள் அருமை

Vidhoosh said...

ஏன் சார், ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் இப்படி இருக்குன்னு, அதை பதிக்கலாமா??? ரொம்ப சீரியல் பாக்காதீங்க.

மாமியார்களும், மருமகள்களும் இப்போ நிறைய மாறிட்டங்க. சும்மா பழைய கதையே பேசி வருவதை கண்டிக்கிறேன். சில பெண்கள் அப்படி இருக்கிறார்கள் என்றால், ஆண்களுக்கு தன் பெற்ற தாயை விட்டு போகும் அளவுக்கு புத்தி என்ன தேய்ந்தா போய் விட்டது?

எனக்கு பிடிக்கலை சார்.

S.A. நவாஸுதீன் said...

கவிதைகள் நல்லா இருக்கு சார்.

அ.மு.செய்யது said...

ரொம்ப நாளாச்சி நீங்க காலையில டீ ஆத்தி....சாரி டீ போட்டு...

நல்லாருக்குங்க கவிதை..! பெண்ணியல்.

ரிப்பீட்டேய்

சொல்லரசன் said...

//அலறி மயங்கி

அடித்துக்கொண்டு

அழுதாள் மனைவி

திருப்தியுடன்!!!//

பார்த்துங்க டாக்டர்,மருமகள் நலசங்கத்தில் இருந்து கண்டனங்கள் வரப்போகுது

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..
வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது...

cheena (சீனா) said...

இயல்பான யதார்த்தமான செயல் - நடந்து கொண்டிருந்த் செயல் - இப்பொழுது எவ்வளவோ தேவலாம் - குறைந்து விட்டது. மாமியார் மருமகளை நம்பியும் மருமகள் மாமியாரை நம்பியும் - சேர்ந்து கூட்டாக வாழ வேண்டிய கட்டாயம் வந்து விட்டது நண்பரே

கவிதை நல்லாருக்கு - காலையில் எழுந்த உடனே சுகமா சூடா சுக்கு போட்ட டீ குடிக்க கொடுத்து வைக்கணும்

Joe said...

அலறி மயங்கி விழுந்தப்புறம், எப்படி அழுவ முடியும்? ;-)

ஆ.ஞானசேகரன் said...

ரெண்டுமே நல்லாயிருக்கு தேவன் சார்

Suresh Kumar said...

எங்கயோ உதைக்குதே

Menaga Sathia said...

சூப்பர் தேவா!!

அப்துல்மாலிக் said...

இது பாலில்லாத கடும் காஃபி...

காலத்தின் கட்டளை???/

வழிப்போக்கன் said...

திருப்தியுடன்!!!//

இது தான் விஷயமே...
:)))

payapulla said...

நீண்ட நாளிற்கு பிறகு பெய்யும் மழையில் மண்வாசனை இருக்கும் ....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு டாக்டர்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

துபாய் ராஜா said...

இன்றைய குடும்ப முறையில் உறவுகள் நிலையை அழகாக கூறிவிட்டீர்கள்.

இரண்டுமே அருமை.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை.

ஹேமா said...

தேவா தேநீர் இயல்பின் சுவை.

மங்களூர் சிவா said...

/
துபாய் ராஜா said...

இன்றைய குடும்ப முறையில் உறவுகள் நிலையை அழகாக கூறிவிட்டீர்கள்.
/
:((
வழிமொழிகிறேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory