Monday 21 February 2011

அர்த்தம்!

 

image

வரிசையின் கட்டுக்குள்

அடங்காதிருந்தன

என் சொற்கள்!

சில அர்த்தமற்றும்

சில புரியாமலும்.

 

கோடு போட்ட

தாள்களுடன் உன்

கையேடு,

வரிசை மாறாத

எழுத்துக்களை அதில்

செறுகியிருந்தாய்!

 

என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!

 

எழுத்துகள் அழிந்து

மவுனத்தை மட்டுமே

சுமந்து கொண்டிருந்தது

அந்த இரவு!

 

முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ!

33 comments:

Chitra said...

முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ!


....very nice.

இராஜராஜேஸ்வரி said...

என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!//

மங்களகரமாக இருக்கிற்து.

தேவன் மாயம் said...

சித்ரா! மிக்க நன்றி

தேவன் மாயம் said...

இராஜராஜேஸ்வரி said...

என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!//

மங்களகரமாக இருக்கிற்து.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

சாந்தி மாரியப்பன் said...

//முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ!//

நிறைவான,அழகான கவிதை..

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதையாக்கியிருந்தாய் நீ!//

டச்சிங் டச்சிங் பாஸ்.....

ஜீவன்பென்னி said...

nIcE nA.. அர்த்தம் இல்லாததுக்கு அர்த்தம் கொடுத்துடுச்சே காதல்.

தேவன் மாயம் said...

அமைதிச்சாரல் said...

//முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ!//

நிறைவான,அழகான கவிதை..//


மிக்க நன்றி !

தேவன் மாயம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதையாக்கியிருந்தாய் நீ!//

டச்சிங் டச்சிங் பாஸ்....//


மனோ! கருத்துக்கு நன்றி

தேவன் மாயம் said...

ஜீவன்பென்னி said...

nIcE nA.. அர்த்தம் இல்லாததுக்கு அர்த்தம் கொடுத்துடுச்சே காதல்.//

பின்னூட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கு!

அன்புடன் நான் said...

மருத்துவ கவிஞருக்கு வாழ்த்துகள்.

Jerry Eshananda said...

கொஞ்சமா இருக்கு தேநீர்.

குமரை நிலாவன் said...

கவிதை அருமை தேவா சார்

தேவன் மாயம் said...

சி.கருணாகரசு said...

மருத்துவ கவிஞருக்கு வாழ்த்துகள்.//

கவிதை இனிப்பாகத்தானே உள்ளது!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...

கொஞ்சமா இருக்கு தேநீர்.//

சுவை எப்படி!!

தேவன் மாயம் said...

குமரை நிலாவன் said...

கவிதை அருமை தேவா சார்//

நிலாவன் ! இப்போது எங்கே!

Thenammai Lakshmanan said...

அர்த்தமற்ற கவிதை எல்லாம் அர்த்தமானது இப்போது.. அருமை.. தேவன்

தேவன் மாயம் said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அர்த்தமற்ற கவிதை எல்லாம் அர்த்தமானது இப்போது.. அருமை.. தேவன்
////

தங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது!

priyamudanprabu said...

super...

தேவன் மாயம் said...

Thank you prabhu!

Anonymous said...

அர்த்தமற்ற சொற்கள் கவிதையான விதம் இந்த அழகான கவிதை தொடுத்ததில் புரிகிறது சார்...

குமரை நிலாவன் said...

malaysia

ஆதவா said...

சமீபத்தில் வலையில் படித்த கவிதைகளுள் சிறந்த கவிதை!!!
மீண்டும் ஒருமுறை படிக்கத் தோணுகிறது.

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, இன்று தான் இந்த வலையை கண்டேன். மகிழ்ச்சி, ஒரு புதிய பாணியில் கவிதையைப் பிரசவித்துள்ளீர்கள். அருமையான கவிதை என்பதை விட சொல்லாடல்கள் சொக்க வைக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

கவிஞருக்கு வாழ்த்துகள்.

கண்ணன் said...

அருமையான கவிதை

Praveenkumar said...

கலக்கலான கவிதை மருத்துவர் அய்யா (ராமதாஸ் இல்லீங்கோ... ஹி..ஹி..ஹி...) ரொம்ப நல்லாயிருக்கு.

SASee said...

//என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!

எழுத்துகள் அழிந்து

மவுனத்தை மட்டுமே

சுமந்து கொண்டிருந்தது

அந்த இரவு!//

அழகான வரிகள். வேலைப்பழுவோடு கவிதைகள் வருவதும் அறுபுதம் தான்..! :)

ஹரன் said...

//வரிசையின் கட்டுக்குள்

அடங்காதிருந்தன

என் சொற்கள்!

சில அர்த்தமற்றும்

சில புரியாமலும்.//

காதலில் அவனின் நிலை... பதட்டம்.



//கோடு போட்ட

தாள்களுடன் உன்

கையேடு,

வரிசை மாறாத

எழுத்துக்களை அதில்

செறுகியிருந்தாய்!//

காதலில் அவளின் நிலை... நிதானம்


//என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!//

இருமனமும் இணையும் திருமணம்...



//எழுத்துகள் அழிந்து

மவுனத்தை மட்டுமே

சுமந்து கொண்டிருந்தது

அந்த இரவு!//

இணைந்தது இங்கே மனம் மட்டுமல்ல... கனவுகள், நிஜங்களானதால் நிறைந்தது நிம்மதி.



//முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ//

‘நான்’ ‘நான்’ அழிந்து ‘நாம்’ ஆகி... பின் ‘நாமும்’ அழிந்த ‘சூன்யத்தில்’ அர்த்தமற்றதும் கவிதையாகும் ஆனந்த நிலை....

வெகுநாட்களுக்குப் பிறகு ரசிக்க ஒரு நல்ல கவிதையைத் தந்தமைக்கு ஒரு தமிழ் ரசிகனின் நன்றி...வாழ்த்துக்கள்.

vimalanperali said...

எழுத்துக்கள் அழிந்து மவுனத்தை மட்டுமே சுமந்து கொண்டிருந்த இரவு என்ன சொல்கிறது?

david santos said...

Great posting, my friend!
have a nice week.

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

காதலிக்கும்போது அர்த்தமற்ற சொல் என்று எதுவுமில்லையே....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory