Monday 30 August 2010

சின்னம்மை(CHICKEN POX)-5

சின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ்  நோய்களில் ஒன்று..

ஏற்கெனவே இருந்த SMALL POX  பெரியம்மை  நோய் வைரஸ்  தற்போது உலகின் சில பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சின்னம்மையைப் பற்றிய முக்கிய விபரங்கள் மட்டும் பார்ப்போம்.

1.சிக்கன் பாக்ஸ் எப்படிப்பரவுகிறது?

  1. இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் எச்சில்,சளி நுண் துளிகள் தூவப்படுகின்றன.  இவற்றை சுவாசிப்போருக்கு இந்தத் தொற்று பரவுகிறது.(  தும்மும் போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்துக்கொள்ள வேண்டும்!)
  2. நோயாளியின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் உடைந்து அதில் உள்ள நிண நீர் பரவுவதன் மூலம்.

2.இது எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?

  • 10 வயதுக்குட்பட்டோரையே அதிகம் தாக்குகிறது.- ஆயினும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோயை எதிர்க்கும் திறன் அதிகம்.
  • இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் இந்நோய் தாக்கினால் விளைவுகள் சிறிது கடுமையாகவே இருக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கும்,லுகிமியா போன்ற நோய் உள்ளோரும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதும் உண்டு.
  • இதன் நோய் காப்புக்காலம் (INCUBATION PERIOD)  14-21 நாட்களாகும்.

3.இந்நோயால் உடலில் எற்படும் விளைவுகள் என்ன?

  • தோலில் சிவந்த தடிப்புகள் (RASHES)
  • உடலில் வயிறு, மார்பு போன்ற மையப்பகுதிகளில் இத்தடிப்புகள் நோயின் இரண்டாம் நாளில் தோன்றும்.
  • அதன் பிறகு முகத்திலும் பின்பு கை,கைல் போன்ற பகுதிகளிலும் தடிப்புகள் ஏற்படும்.
  • தோல் கொப்புளங்கள் தோன்றி, பழுத்து, உடலில் அரிப்பும் ஏற்படும். கொப்புளங்களைச் சொறிவதால் தோலில் தழும்புகள் ஏற்படலாம்.
  • இதன் முக்கிய அம்சம் பழுக்காத கொப்புளங்களிலிருந்து, பழுத்த கொப்புளம் வரை உடலில் ஒரே நேரத்தில் காணலாம்.

4.இதன் பிற விளைவுகள் என்ன?

  • நோய் பொதுவாக கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில நேரங்களில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படலாம்.
  • நிமோனியா
  • இதயச் சுவரில் தொற்று (MYOCARDITIS)
  • மேற்கண்ட இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளோருக்கு ஏற்படும்.
  • மூளைத் தொற்று(மூளையழற்சி)
  • சிறு நீரக பாதிப்பு
  • மூட்டுகளில் சலம் பிடித்தல், எலும்பில் சலம்

நிறைய பாதிப்புகள் இருந்தாலும் மேற்சொன்னவையே முக்கியமானவை.

5.சிகிச்சை:

  • பொதுவாக எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
  • நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோருக்கு மருந்துகள் தேவைப்படலாம்.
  • பாக்டீரியா தொற்று தோலில் ஏற்பட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்.

சின்னம்மை பற்றிய மிக அவசிய தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இன்னும் அதிகம் தகவலுக்கும் சந்தேகங்களயும் கேளுங்கள் பின்னூட்டங்களில்.

தமிழ்த்துளி தேவா.

Wednesday 25 August 2010

பெத்திடின்

போதைப்பொருட்கள் பற்றிய என் இடுகைகள்:

1.கொக்கைன்http://abidheva.blogspot.com/2010/02/blog-post_22.html

2.கீட்டமைன்http://abidheva.blogspot.com/2010/01/blog-post_24.html

3.ஜாகசனின் போதைhttp://abidheva.blogspot.com/2009/08/blog-post_24.html

4.குழந்தைகளை போதையிலிருந்து காக்கhttp://abidheva.blogspot.com/2009/07/blog-post_08.html

என் முந்தைய இடுகைகளில் போதைப் பொருட்களைப் பற்றியும் அவற்றின் தீய விளைவுகள் பற்றியும் கூறியுள்ளேன். அந்த வரிசையில் பெத்திடின் பற்றியும் பார்ப்போம்.

பெத்திடின்பற்றி அனைவரும் அறிந்திருப்போம். பெத்திடின் என்றால் போதைப்பொருள் என்றுதான் தோன்றும். உண்மையாக பெத்திடின் எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
1.பெத்திடின் பொதுவாக எந்த வடிவில் கிடைக்கிறது?
பெத்திடின் பொதுவாக ஊசி மருந்தாகக் கிடைக்கிறது.
2.இது எந்த வகையைச் சேர்ந்தது?
ஓப்பியம் அல்லது அபின் வகையைச் சேர்ந்தது.
3.அபின் என்றால் என்ன?
 அபினிச்செடியின் காயைக்கீறினால் ஒரு வித பால் வடியும். இதனைக் காய வைத்தால் கிடைக்கும் தூள் அபின்(OPIUM) எனப்படுகிறது.
4.அபின் காயின் விதைகள் போதைப் பொருளா?
இல்லை. அதற்கு கசகசா என்று பெயர். சமையலில் உபயோகிக்கிறோமே கசகசா அதுதான்.
5.பெத்திடினுக்கும் ஓப்பியத்துக்கும் என்ன தொடர்பு?
பெத்திடின் செயற்கையாக உருவாக்கப்படும் ஓப்பியம்.
6.பெத்திடினின் மருத்துவப்பயன்கள்?

  • பித்தப்பை வலி
  • சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படும் வலி
  • பிரசவகால வலி
  • பெத்திடின் வலி நிவாரணியாக தற்போது குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.
6.பெத்திடினின் பக்க விளைவுகள் என்ன?
  • மயக்கம், கிறுகிறுப்பு, போதை- இதற்காகவே இது போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
7.இதனை போதைப்பொருளாக உபயோகிப்போருக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
  • நடுக்கம்
  • தசைத் துடிப்பு
  • மனக் குழப்பம்
  • வாய் உலர்ந்து போதல்
  • இல்லாத உருவங்கள், சப்தங்களை உணரும் குழப்பமான நிலை.
  • கை, கால் வலிப்பு
8.இந்தியாவில் போதைப் பொருள் உபயோகிபோரின் எண்ணிக்கை எவ்வளவு?
ஏறத்தாழ 5 மில்லியன் இந்தியர்கள் ஹெராயின் என்ற பிரவுன் சுகர் உபயோகிக்கிறார்கள்.(இதும் ஓபியம் வகையைச் சேர்ந்தது.).
9.பள்ளி, கல்லூரி மாணவர்களில் போதைமருந்தை உபயோகிப்போர் எவ்வளவு      பேர்?
ஆந்திராவிலும் வங்காளத்திலும் 60% மாணவர்கள் போதை மருந்தை உபயோகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
போதை மருந்துகள் பற்றிய விபரங்களும் விழிப்புணர்வும் பெற்றோருக்கு அவசியம் தேவை. போதைப் பொருள் உபயோகிப்போர் எச்.அய்.வி, ஹெபடைடிஸ் ஆகிய நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இது தனி மனிதனை மட்டுமல்லாமல் குடும்பத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சீரழிக்கக் கூடியது. 
இந்தக் கட்டுரையின் ஆரமபத்தில் கொடுக்கப் பட்டுள்ள சுட்டிகள் மூலம் போதைப்பொருள்கள் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் இளைஞர்களைக் கண்டறிவதுபற்றியும்  அறியலாம்.

Monday 23 August 2010

ஏன் நீதிபதி விசாரணை?

              


                 சில நேரங்களில் நீதிபதி அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய நோயாளிகளை  இறப்பதற்கு முன் விசாரிப்பதைப் பார்த்து இருப்போம்.
                 அதே போல் சில குறிப்பிட்ட விவகாரங்க்களில் நீதிபதியின் விசாரணை நடக்கும். நீதிபதியின் விசாரணை என்றால் என்ன  என்பதனைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
                  நீதிபதியின் விசாரணை-ஆங்கிலத்தில் Magistrates Inquest எனப்படும்.
Inquest என்றால் பெரிதாக ஒன்றுமில்லை! விசாரணையைத்தான்  Inquiry அல்லது enquiry  என்று கூறுகிறார்கள்.
( இன்க்வெஸ்ட் an inquiry into the cause of an unexpected death
enquiry, inquiry - a systematic investigation of a matter of public interest)
                  சாதாரண குற்றங்க்களை காவல்துறையினர் விசாரிப்பர். சில குறிப்பிட்ட குற்றங்களில் நீதிபதியின் விசாரணை வேண்டப்படுகிறது.

1.எந்த மாதிரியான நிகழ்வுகளில் நீதிபதியின் விசாரணை தேவை?
  • சிறையில் இறப்பு
  • காவல் துறை விசாரணையின் போது காவல் நிலையத்தில்,
  • காவல் துறையால் சுடப்பட்டால்,
  • மனநோய் மருத்துவமனையில் இறந்தால்,
  • வரதட்சணை இறப்பு,
  • சந்தேகமான முறையில் இறந்ததாகக் கருதப்பட்ட சடலத்தை புதைகுழியிலிருந்து தோண்டி விசாரணை மேற்கொள்ள,
இந்த மாதிரியான விசாரணை செய்யும் தகுதி நீதிமன்ற நீதிபதி தவிர மாநில அரசால் வேறு பதவிகளில் உள்ளோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனைக்கீழே பார்ப்போம்.
2. எந்தப் பதவியில் உள்ளோர் இதனை விசாரிக்க நீதிபதிகளாகக் கருதப்படுவார்கள்?
  • மாவட்ட நீதிபதி அவர்கள் 
  • சப் டிவிசனல் நீதிபதி
  • சிறப்பு நீதிபதிகள்
3.சிறப்பு நீதிபதிகள் என்பவர்கள் யார்?
       இவர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுபவர்கள்
  • மாவட்ட ஆட்சியர்
  • மாவட்ட உதவி ஆட்சியர்
  • தாசில்தார்
     நமக்குத் தேவையான எளிய சட்ட விவகாரங்களைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

தமிழ்த்துளி தேவா.

Friday 20 August 2010

வாழ்க்கைப்பயணிகள்-2

        

             ன்னுடைய ஹவுஸ்சர்ஜன் பணிக்காலம் அது. கடைசிவருடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பல்வேறு சிகிச்சைப்பிரிவுகளிலும் பணிபுரிய வேண்டும்.

           பொதுவாக வார்டு வேலைகளில்   நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை  தினமும் கணக்கு எழுதி வாங்க்குவது முதல் வேலை. அது தொல்லையான வேலை.     பெரும்பாலும் பெண் மருந்துவர்களை அந்த வேலைக்கு விட்டுவிடுவோம். அதேபோல் நோயாளிகளுக்கு ஊசி போடும் வேலையையும் பெரும்பான்மை ஆண்கள் பெண் ஹவுஸ் சர்ஜன்களின்  தலையில் கட்டி விடுவார்கள்.

     அதே நேரம்  காயங்களுக்கு மருந்து கட்டுவது, தையல் போடுவது போன்ற வேலைகள் ஆண் மருத்துவர்களின் தலையில் விழும். 

     இப்படிப் பணியில் இருந்தபோது  என் நண்பர் ஒருவரின் அக்காவை தீக்காயப் பகுதியில் சேர்த்திருந்தனர். அவர் தன் கணவருடன் ஏற்பட்ட பிணக்கில் தன் உடலில் மண்ணெண்ணை  ஊற்றி தீக்காயங்க்களுடன் படுக்கையில் இருந்தார்.

           நண்பர் என்னிடம் நீங்கள்தான் அக்காவுக்கு சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் நான் என் நண்பர்களிடம் பேசி அந்த வார்டை நான் பார்த்துக் கொள்வதாகக் கூறி என் பணியை அந்த வார்டுக்கு மாற்றிக்கொண்டேன்.

            நண்பணின் அக்கா  உட்கார்ந்த நிலையில் அவருடைய கால்களிலிருந்து தொடைவரை மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு விட்டார். இதனால் அவருடைய கால்கள் பாதத்திலிருந்து தொடைவரை வெந்திருந்தது, தோல் சிறிது ஆழமாக வெந்திருந்தது.

             நானும் நண்பனின் அக்கா என்பதால் தினமும் தொடைவரை வெந்து இரத்த ஓட்டமில்லாத தோல் பாகங்களை வெட்டி மருந்திட்டு வந்தேன். தோல் பகுதியில் இரத்தம் வரும்வரை வெட்ட வேண்டும். இதற்கு நல்ல கத்தரிக்கோல் தேவை. ஸ்கால்பெல் எனப்படும் பிளேடு மற்றும் தசை வெட்டும் கத்திரிக்கோல் இரண்டும் அவசியம்.

             பெரும்பாலும் வார்டுகளில் நல்ல கத்திரிக்கோல் இருக்காது. அறுவை அரங்கில்தான் அறுவை சிகிச்சைக்கு உபயோகிக்கும் நல்ல கத்திரிகள் இருக்கும். அங்கு சென்று கணக்கில் கையெழுத்திட்டு நல்ல கத்தரிக்கோல் ஒன்றை வாங்க்கிக் கொண்டேன்.

            அப்போதுதான் படிப்பு முடிந்திருந்ததாலும் இளம் வயதின் ஆர்வம் காரணத்தினாலும் நண்பனின் அக்கா என்பதனாலும் மிக ஆர்வத்துடன் அவருக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தேன். தினமும் அந்தப்பெண்ணுக்கு புண்ணை சுத்தம் செய்ய ஒருமணி நேரமாவது ஆகும்.

             எனக்குத் தெரிந்து உலகில் மிக மோசமான வாடை என்ன என்று கேட்டால்  மனித உடல் அழுகும் நாற்றம்தான் என்பேன். இதனை தீக்காய வார்டிலும். போஸ்ட்மார்ட்டம் பிரிவிலும் காணலாம்.இதனாலேயே தீக்காய வார்டை பெரும்பாலும் மருத்துவமனையின் ஏதாவதொரு மூலையில் வைத்திருப்பர். தீக்காய வார்டில் வித விதமான சதவீதங்களில் உடல் வெந்து போன நோயாளிகள் இருப்பார்கள்.

            அவர்களில் பலருடைய நிலை மோசமாக இருக்கும். உடல் முழுவதும் வெந்து போனவர்கள் கத்திக் கொண்டே இருப்பார்கள். இளம் பெண்கள், கண நேரத்தில் முடிவெடுத்து மண்ணெண்ணை ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டவர்கள் “என்னைக் காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க” என்று கத்தும் ஓசையும் அடிக்கடி கேட்கும்.

             இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு அந்த நோயாளிகளுடன் ஆறுதலாகப் பேசி சிகிச்சையளிப்பதற்கு மிகவும் மனத்திடம் வேண்டும். இவர்களில் பலருடைய படுக்கைகள் அடிக்கடி காலியாகிவிடும். ஆம் பலரும் இறந்து போவதும், அந்தப்படுக்கைக்குப் புது நோயாளிகள் வருவதும் சகஜம். உயிர் தப்பிப்பிழைப்பவர்கள் குறைவுதான்.

              இப்படி அடிக்கடி நோயாளிகள் இறப்பது கண்டு நண்பரின் வீட்டிலுள்ளோர் மிகுந்த மனக் கலக்கம் அடைந்தனர். நானும் விடாமல் சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். மருந்துகள் போதாமல் பல வார்டுகளில் மிச்சமாகும் மருந்துகளைக் கொண்டு வந்தும் சிகிச்சை அளித்ததில் அந்தப் பெண்ணின் உடல் நிலை நன்கு தேறி வந்தது. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

               இப்படியிருக்கையில் ஒரு நாள் காலை அந்த நண்பர் என் விடுதி அறைக்கு வந்தார். அக்கா ஒன்றும் பேசவில்லை. எங்களுக்கு பயமாக உள்ளது என்றார். நானோ இரண்டு நாள் விடுப்பு எடுத்திருந்தேன். வேறு ஒருவர் அந்த வார்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி வாருங்கள் என்று போய்ப் பார்த்தேன். அந்தப் பெண் சுய நினைவில்லாமல் கோமாவில் இருந்தார். நான் ஷாக் நிலைக்கான சிகிச்சையைச் செய்ய ஆரம்பித்தேன். சுமார் 4 மணி நேரம் கழித்து அவருக்கு சுய நினைவு வந்தது. சிகிச்சையைத் தொடர்ந்து விடாமல் செய்து கொண்டிருந்தேன். மறுபடியும் 6 மணி நேரத்தில் சுய நினைவு போய்விட்டது.

              மறுபடியும் போட மருந்துகள் இல்லை. பல தெரிந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை விசாரித்து, மருந்துகளை வாங்கி வரச்செய்தேன். அதையும் போட்டோம்.  இந்த சிகிச்சையிலேயே அன்றிரவும் கழிந்தது. மறு நாள் காலையும் அவர் நிலையில் முன்னேற்றமில்லை. நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டே இருந்தது. அதற்கு மருந்துகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மதியம் கழிந்து மாலை 6 மணிபோல் சிகிச்சைகள் பலனின்றி அந்தப் பெண் இறந்து விட்டார். என்னுடைய முயற்சிகள் அனைத்தும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போயின.

. மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். தீக்குளிப்பவர்களும், தற்கொலை முயல்வோரும் மரணத்தை விரும்பி நாடியவர்கள்.

என்  ஹவுஸ்சர்ஜன் வாழ்க்கையில் அவ்வளவு சிரமப்பட்டு வேறு எந்த நோயாளிக்கும் சிகிச்சை செய்ததில்லை

ஆம்! முதல் நாள் காலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தீக்காயப் பிரிவுக்குள் அந்தப் பெண் கோமாவில் இருந்தபோது நுழைந்த நான் மறு நாள் மாலைதான் வெளியில் வந்தேன், அதுவரை வெறும் தண்ணீர் மட்டுமே குடித்திருந்தேன். வேறு எந்த உணவும், நான் சாப்பிடவில்லை.

Wednesday 18 August 2010

இவர்கள் உறவினர்களா?

தெரிந்த ஒரு நண்பரின் கல்யாணத்துக்குச் சென்றிருந்தேன். பொதுவாகவே நமது கல்யாணங்களில் உற்றார்  உறவினர் ஒருவர் விடாமல் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உறவினர்கள் கோபித்துக் கொள்வார்கள். மறுமுறை அவர்களிடம் சமாதானம் சொல்லமுடியாது. அதுபோலவே இங்கும்  நல்ல கூட்டம். முண்டியடித்து உள்ளே செல்லவேண்டியிருந்த்து.மணமக்களை  பார்த்து வாழ்த்திவிட்டு  சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்.

சிறிது நாட்கள கழித்து  ஒரு நாள் காலையில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தேன். தனியார்  மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு இரண்டு பாட்டில்கள் ‘ஓ’ குரூப் இரத்தம் வேண்டும் என்று அந்த நண்பர்  வந்திருந்தார். யாருக்கு இரத்தம் வேண்டும் என்றேன்? என் நெருங்கிய உறவினருக்கு வேண்டும் என்றார்.

 

இரத்த வங்கியில் எங்கள் மருத்துவமனைக்குத் தேவையான் அளவுதான் இரத்தம்  இருப்பில் இருந்தது. சரி உறவினர்கள் யாராவது கொடுங்கள் என்றேன். அவரோ அல்லது அவருடன் வந்த உறவினர்களோ  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். அனால்  ஒருவரும் இரத்த குரூப் பார்க்கக் கூட முன்வரவில்லை. ”என்ன சார் எங்களைத் தரச் சொல்கிறீர்கள்? பணம் தருகிறோம் வாங்கிக் கொடுங்கள், இல்லையென்றால் கல்லூரி மாணவர்களிடம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

அப்புறம் அழகப்பா பல்கலைக்கழக விடுதியில் இருந்த மாணவர்கள் இருவரை வரச்சொல்லி இரத்தம் எடுத்தோம.

ஆபரேசன் முடிந்தது. நோயாளி நலமடைந்த்தாக போனில் ந்ன்றி சொன்னார்.

இது பற்றி சில கேள்விகள் என் மனதில் தோன்றின. அவர்களிடம் அதை நான் கேட்கவில்லை!

1.நெருங்கிய சொந்த்ம், இரத்த உறவு என்றெல்லாம் பேசும் இவர்கள் இரத்தம் மட்டும் தர மறுப்பது ஏன்?

2.எந்த் வகையிலும் தொடர்பில்லாத இரத்தம் கொடுத்த அந்த மாணவர்கள் இரத்த சொந்தமா? இல்லை இவர்கள் இரத்த சொந்த்மா?

1.ஒவ்வொரு கல்யாணத்துக்கும், சடங்குகளுக்கும் கூடி மகிழும் உறவினர் ஏன் ஆபத்துக்காலத்தில் உயிர் காக்க இரத்தம் தருவதில்லை?

2.மாணவர்கள் அரசுக்கல்லூரி விடுதியில் போடும் சாப்பாட்டைச்சாப்பிட்டு பெற்றோரை விட்டு வெகு தொலைவில் படிக்க வந்திருக்கின்றனர். ஒவ்வொரு இரத்த் முகாமிலும் அதிகம் இரத்தம் தருவது அவர்கள்தான். ஒருவேளை பெற்றோர் அருகில் இருந்தால் தர விடமாட்டார்களோ என்னவோ?

இரத்தம் கொடுத்தால் உடல் குறைந்துவிடும், சக்தியெல்லாம் போய்விடும் என்றெல்லாம் மூட நம்பிக்கைகள் இன்னும் படித்தவர்கள் மனதில்கூட இருக்கின்றன. அவை மறையவேண்டும்.

கண் தானம், உடலுறுப்பு தானம் என்று பெரிய விசயமெல்லாம் இருக்கட்டும், முதலில் உயிர் காக்கும் இரத்ததானம் தர முன் வாருங்கள் உறவினர்களே!

Monday 16 August 2010

இலங்கைக் காரனின் அசிங்கம்!

சூரஜ் ரந்தீவ் என்ற சுழல் பந்து வீச்சாளர் நேற்று செய்த அசிங்கம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு அசிங்கமாக அமைந்தது. ஆம் அதிரடி மன்னன் சேவாக் 99 ல் இருக்கும் போது 1 ரன் எடுத்தால் சேவாக் 100 அடிக்கும் நிலை. இந்தியாவும் வெற்றிபெறும்.
பந்தைப் போட வந்த ரந்தீவ் ஒரு இன்ச் கோட்டுக்கு வெளியில் கால் வைத்தால் பரவாயில்லை. ஒரு அடியா காலை கிரீஸை விட்டு வெளியில் வைப்பது?
விளையாட்டில் வெற்றி தோல்வி இயற்கை. எத்தனையோ மாட்ச்சுகளில் இந்தியரின் பெருந்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேற்று ரந்தீவ் செய்தது கிரிக்கெட் உலகுக்கே அசிங்கம்! அவர் கோட்டுக்கு வெளியே கால் வைத்துப் பந்து வீசியதால் நோபால் கொடுக்கப்பட்டது. ஆனால்
சேவாக் ரந்தீவ் முகத்தில் அறைந்தாற்போல் அந்தப் பந்தையும் சிக்ஸர் அடித்தார்.
நான் அம்பயராக நின்றிருந்தால்  நோபாலைக் காணாததுபோல் விட்டிருப்பேன்!
ஜென்டில்மேன் விளையாட்டில் ஒரு ஷேம் ரந்தீவ்!

எழுதக்கூடாதவை!

 என் தெருவில் குழி கண்டு ஒதுங்கிப்போவேன்!
பிச்சையெடுக்கும் கிறுக்கனைக் கண்டு முகம் சுளிப்பேன்,
கொள்ளையடிக்கும் கவுன்சிலா¢டம் சிரித்துப்பேசுவேன்,
அ¡¢மா, ரோட்டரி சங்கத்தில் இருந்து பெருமைப்படுவேன்,
அங்கு வரும் அமைச்சருடன் போட்டோவில் நிற்பேன்,

எல்லோருடைய வரிப்பணத்தில் நான் படிப்பேன்,
ஐ.ஐ.டி என்பேன், எயிம்ஸ் என்பேன்,
நல்ல வேலை தேடிப் பல நாடு செல்வேன்,
அமெரிக்காவில் என்ன சுதந்திரம் என்று பூரித்துப்போவேன்,
சிங்கப்பூரில்  சுத்தம் கண்டு அகமகிழ்வேன்,
என் அறிவை அன்னியருக்கு விற்பேன்,
நீ பெறுவது ஆயிரம்தான்,
என் சம்பளம் லட்சங்களில் என்று எண்ணி மகிழ்வேன்,
பணச்செல்வம் கொணர்ந்து என் கணக்கில் சேர்ப்பேன்,

சின்ன அடிபட்டாலும் மல்டிஸ்பெசாலிட்டியில் நிற்பேன்,
சிகிச்சை பில் கண்டு பகல் கொள்ளை என்பேன்,
பிளைட் ஏறுவேன், ஏசிக் காரில் செல்வேன்,
பெட் ரோல் விலை அதிகம் என்று வருத்தப்படுவேன்,

ஸ்டார் ஓட்டலில் பிஸ்ஸா, பர்கர்,எல்லாம் தின்பேன்,
அறை தங்கி பிளாக் லேபிள், மார்ட்டினி எனக் குடிப்பேன்,
அந்தரங்க ஆசைகளும் தீர்த்துக் கொள்வேன்,

விளை நிலங்கள் வீட்டுமனையாகுதல் கண்டு வருந்துவேன்,
சீப்பாய்க் கிடைத்தால் சில ஏக்கர் பட்டாப் போட்டுக்கொள்வேன்,
அய்யோ வரி அதிகமென்பேன்,பொய்க்கணக்குக் காட்டுவேன்,

முதலாளித்துவம் என்பேன், முடிந்தால் கம்யூனிசமும் பேசுவேன்,
லஞ்சத்தை எதிர்ப்பேன், லஞ்சம் ஒழிந்தால் நாடு உருப்படும் என்பேன்,
காரியம் விரைந்து முடிக்க தெரியாமல் நானே லஞ்சமும் கொடுப்பேன்,

ஜாதி ஒழியவேண்டும் என்பேன், சமத்துவம் பேசுவேன்,
என் ஜாதிப் பெண் பார்த்துத் திருமணம் முடிப்பேன்,

தமிழ் தமிழ் என்பேன்,
என் வீட்டுக்குழந்தைகளை கான்வென்ட் சேர்ப்பேன்,
இந்தியா இன்னும் திருந்தவில்லை என்பேன்,
இன்னும் சுதந்திரம் இல்லை என்று எழுதிக் குவிப்பேன்,

இன்னும் பல செயல்களெல்லாம் மறைவாய்ச் செய்வேன்,
கேட்டால் நான் சாதாரண மனிதன் என்பேன்!

டிஸ்கி! இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல!

Friday 13 August 2010

பாம்பு கடி அறிய வேண்டியவை-பாகம்-2

நச்சுப்பாம்புகளில் நல்ல பாம்பின் விசம் பற்றிப்பார்த்தோம். நல்ல பாம்பின் விசமானது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்பதையும் அதனால் தசைகள் செயலிழப்பு,மூச்சு விட முடியாமல் செயலிழந்து இறப்பு என்பதை அறிவோம். 
நல்ல பாம்பு போலவே நரம்புகளைத் தாக்கும் இன்னொரு வகைப்பாம்பு கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் என்றும் சொல்லுவர். கட்டுவிரியன் உடலில் பொதுவாக வெண்ணிறப்பட்டைகள் காணப்படும்.
1.நல்ல பாம்பு, கட்டுவிரியன்-- நரம்புமண்டலத்தைத் தாக்குபவை.
2.கண்ணாடி விரியன்(RUSSELS VIPER), சுருட்டை விரியன்(SAWSCALED VIPER)-- இரண்டும் இரத்தத்தினை உறையவிடாமல் தடுப்பவை.
கண்ணாடி விரியன்,சுருட்டை விரியன்:

நல்ல பாம்பு போல் இவை அதிகம் ஆபத்துள்ளவை அல்ல.
1.கடிபட்டவர்களில் 50%க்கு சதவீதத்தினரை விசம் தாக்குவதில்லை.
2.25% த்தினருக்கு விசத்தின் அறிகுறிகள் தெரியும். ஆயினும் அனைவரும் இறப்பதில்லை.
3.கடிபட்ட 10 நிமிடத்தில் கடிவாய் சிவந்து வீங்கி விடும்.
15 நிமிடத்தில் கடிவாயில் இருந்து இரத்தம் கலந்த நீர் வடியத் துவங்கும். விசம் குறைவாக இருந்தால் வீக்கம் முழங்கை அல்லது முழங்காலுடன் நின்று விடும்.
4.விசம் குறிப்பிடத்தக்க அளவு உடலில் ஏறியிருப்பின் வலி,வாந்தி,வேர்வை,வயிற்றுவலி ஆகியவை இருக்கும். இரண்டு மணி நேரத்தில்  மயக்கம் ஏற்படும். இவை அடுத்த 2 மணி நேரத்தில் சரியாகிவிடும்.இரு நாளில் வீக்கம் உடலில் பரவும். பொதுவாக நோயாளிகள் இரண்டு நாளில் குணமடைவர்.
5.கடி பலமாக இருந்தால் மயக்கம் அதிகம் இருக்கும். இரத்த சிவப்பணு, பிளேட்லெட்டுகள் குறையும். சிறு நீரில் இரத்தம்,சர்க்கரை, புரதம் வெளிப்படும். இரத்தம் உறையும் தனமை குறையும். பல் ஈறுகள், ஆசனவாய், கடிபட்ட இடம் ஆகியவற்றிலிருவ்து இரத்தக்கசிவு ஏற்படும்.சிறு நீரகம் செயலிழக்க ஆரம்பிக்கும். நுறையீரல் செயலிழத்தல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கடிவாய் புண் பொ¢தாகி, கடிபட்ட பகுதி பெரிதாக வீங்குதல் ஆகியவை இருக்கும். உடலுக்குள் இரத்தக்கசிவாலும், உடலுறுப்புகள் செயலிழப்பாலும் இறப்பு ஏற்படலாம்.


சிகிச்சைகள் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ளன. பாம்பு கடித்தால் என்ன ஏற்படும் என்று எளிமையாகத் தொ¢ந்து கொள்ளவே இந்தப்பதிவு. ஆகையினால் இதன் பயன் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும்.

Monday 9 August 2010

வாழ்க்கைப்பயணிகள்- சயனைடு!

இதற்கு முன்….

போஸ்ட்மார்ட்டம் ஒன்று உள்ளது. எல்லோரும் அவரவர் முறையை முடித்துவிட்டார்கள். இது உங்கள் முறை என்றார் உதவியாளர். ”என்ன கேஸ்?” என்றேன். சயனைடு பாய்ஸன் சார் என்றார். நான் என்னை அறியாமலேயே ஜெய்லானியா? என்றேன். உதவியாளர் முகத்தில் ஆச்சரியம் !! முழுவதும் படிக்க:  வாழ்க்கைப்பயணம்

…………………………………………………………………………………………சார்! ஆளைப்பார்க்காமலேயே  இறந்தவரின் பெயரைச் சொல்லிவிட்டீர்களே, எப்படி சார்? ” என்றார் உதவியாளர்.  ஒரு யூகம்தானப்பா என்று  சொன்னேன். ஜெய்லானி இறந்ததற்கு அளவுக்கு மீறிய குடியினால் கந்துவட்டிக்கடனாளியாகி மனம் உடைந்து சயனைடு சாப்பிட்டுவிட்டான் என்று அவன் உறவினர்கள் சொன்னார்கள். உண்மைக்காரணம் யார் அறிவர்?

ஜெய்லானியின் இறப்பின் காரணம் போலவே அவன் உபயோகித்த விசமும் ரகசியமானது.  ஆம்! சயனைடின் சுவைதான் அது! இதுவரை உலகில் உயிரோடிருப்பவர்கள் எவரும் அறியாதது சயனைடின் சுவை! ஆச்சரியமாக உள்ளதல்லவா?

1.சயனைடு சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும்?

10 வினாடிகளில்!

2. சயனைடின் நிறம்?

வெண்ணிறப் பொடியாக இருக்கும்.

3.சயனைடின் சுவை என்னவாக இருக்கும்?

சயனைடின் மணம் பாதாம் போல் இருக்கும். அதன் சுவையைக்  கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பலரும் முயன்றும் முடியவில்லை. இதன் சுவையைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று முயன்ற ஒரு விஞ்ஞானி மிகவும் எச்சரிக்கையுடன் முன்னேற்பாடுகளைப் பட்டியலிட்டார். பேப்பர்,பேனா, சயனைடு அனைத்தையும் ஒரு மேசையில் வைத்தார். சயனைடை நாக்கில் வைத்தவுடன் பேனாவில் சுவையின் முதல் எழுத்தை பேப்பரில் எழுதிவிட வேண்டும் "S "  என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு,  "T" என்றால் புளிப்பு  என்பது போல்  என்று முடிவு செய்தார்.  இதைக் கண்டுபிடித்துவிட்டால் உலகில் முதன்முதலில் சயனைடின் சுவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையும்,பெயரும் கிடைக்குமல்லவா! ஆனால் உயிர் போய்விடும். அதற்குத் துணிந்த அவர் மருத்துவர்களுக்கும், காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு ஒரு கையில் மிகக் குறைவான சயனைடு தூளையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்துக்கொண்டு நாக்கில் சயனைடை வைத்தார். எல்லோரும் விரைந்து வந்து பார்த்தனர். விஞ்ஞானி தன் சோதனையை மு்டித்துவிட்டார். அவரும் உயிருடன் இல்லை. மேசையிலிருந்த தாளிலும் ஒன்றும் எழுதப்படவில்லை.

4.இந்தியாவில் யாரேனும் இதற்கு முயற்சி செய்துள்ளனரா?

கேரளாவைச் சேர்ந்த M.P.பிரசாத் என்பவர்  நகைத்தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முடிவுசெய்தார். கொஞசம்  மது அருந்த்விட்டு  சயனைடை சாப்பிட்டுவிட்டு அவர் இறப்பதற்கு முன் பேப்பரில்” பொட்டாசியம் சயனைடு நாக்கில் எரிச்சலை உண்டாக்கியதாகவும், கசப்பாக இருந்ததாகவும் கிறுக்கலான எழுத்துகளில் எழுதியுள்ளார். இந்தச் செய்தி தினசரிகளிலும் வந்திருந்தது. ஆயினும் இது அதிகாரபூர்வமாக இன்னும் ஏற்றுகொள்ளப்படவில்லை.

1. http://www.smh.com.au/news/world/suicide-note-reveals-taste-of-cyanide/2006/07/08/1152240534587.html 

2.http://www.indianexpress.com/story/8089.html

3.http://wiki.answers.com/Q/When_a_person_taste_a_cyanide_he_will_enter_into_coma_state_in_10_SEC_n_die_within_a_minute_will_he_be_able_to_experience_anything_when_he_is_in_coma_n_is_their_any_chances_to_save_him

சயனைடின் சுவை ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக, இன்றும் புதிராகவே உள்ளது.

வாழ்க்கைப்பயணிகள்!

 

நெருங்கிய உறவினர் கல்யாணத்துக்குப் போகவேண்டும் என்றால் நமக்கு ஒரு பிரச்சினையுமில்லை. கல்யாணமென்றாலும் சரி வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இஸ்திரி போட்ட ஒரு செட் பேண்டும், சட்டையும் இருந்தால் போதும் கிளம்பிவிடலாம். ஆனால் பெண்களின் கதை அப்படி அல்ல. கல்யாணத்தில் மணப்பெண் என்ன பட்டுப்புடவை, என்ன நகை போட்டிருக்கிறார் என்று கவனிப்பதை விட நாத்தனார் என்ன பட்டுச்சேலை கட்டியிருக்கிறாள், வேறு சொந்தக்காரப் பெண்கள் என்ன புதிய வகை பட்டுக்கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து கழுத்தில் போட்டிருக்கும் செயின், ஆரங்களின் வகை,புதுவகை நெக்லஸ், வைரக்கல் வைத்ததா? எங்கு வாங்கியது? எத்தனை பவுன் என்றெல்லாம் விசாரிப்புகள்தான் வேலையாக இருக்கும். இதில் முடிந்த அளவு நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு அலங்காரத் தேர்களாக பவனி வருவதும், யாராவது “இது நல்லாயிருக்கே! எங்கே வாங்கினீர்கள்?”என்று கேட்டவுடன் நகை,சேலைப் புராணங்களை அள்ளிவிட்டு “ஒரு நட்சத்திரப் பெருமையுடன் அலைவதும் நடுவயது மகளிரின் வாடிக்கை.

இதில் நமக்கென்ன வந்த்து என்கிறீர்களா? எங்கேயோ இடி இடிக்க எங்கெயோ மழை பெய்த மாதிரி

“என்னங்க உங்க பெரியம்மா பொண்ணு போட்டிருந்தாங்களே ஒரு ஆரம் அது ரொம்ப நல்லாயிருந்ததுங்க! மதுரையில்தான் அந்த டிசைன் இருக்காம்! அடுத்த வாரம் போகும் போது வாங்கலாம்னு பார்க்கிறேன், என்ன சொல்றீங்க!!” என்று மெதுவாகப் பேச்சு ஆரம்பிக்கும். அது சரி என்று சொன்னால் நம் ஜி.பி.எஃப் லோனாகவோ அல்லது வேறுவகையிலோ நம் பணத்துக்கு ஆப்பாக முடியும். பணம் கையிலிருந்தாலோ கேட்கவே வேண்டாம், “தங்கம் விலை கூடிக்கிட்டே போகுதுங்க! பணத்தை வீணாகக் கையில் வைத்திருக்க வேண்டாம். நான் என்ன எனக்கா நகை கேட்கிறேன். இப்ப இருந்தே நகை சேர்த்தால்தானே பொண்ணுக்கு கல்யாணத்துக்கு ஆகும்! நீங்க வேற செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் இதை அடகு வச்சு வாங்கிக்கலாம், வட்டி ரொம்பக் குறைவுதான்! ( இதைக் கேட்கும் உங்களுக்கே சொல்வது நியாயம் போலத்தெரியுமே!!) என்று நமக்கு சமாதானம் வேறு! இப்படிப்பட்ட அனுபவங்கள் கல்யாணமான பதிவர்கள் அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

சரி! சொல்ல வந்ததை விட்டுவிட்டேன்! கல்யாணத்துக்குப் போவதற்கு முன் நம்மிடம் உள்ள நகைகளையே புதிது போல் மெருகு போட்டு, அணிந்து செல்வதும் நடக்கும்.

இது வழக்கமாக என் வீட்டில் நடப்பதுதான். அப்படி நான் செல்லும்போது பழக்கமானவன்தான் ஜெய்லானி! ஜெய்லானிதான் பெயர் என்றாலும் நகைக்கடை பஜாரில் லைலா என்றுதான் கூப்பிடுவார்கள்!

ஜெய்லானி ஒல்லியாக சற்றே சிவப்பாக கூரிய மூக்குடன் இருந்தான். அவனுடைய முகம் எப்போதும் சிரிப்புக்குத் தயாரான நிலையில் இருப்பது போல் இருக்கும். அவன் என்னிடம் வந்தது ஒரு சான்றிதழுக்காக. அதுவும் அவனுடைய அண்ணனுடைய சாவுக்கான இறப்புச்சான்றிதழ்!

பொதுவாகத் தங்கநகை மெருகு போடுபவர்கள் சயனைடு உபயோகிப்பது வழக்கம். சயனைடு என்பது மிகக் கொடிய விசம். இதை எப்படி நகைத் தொழிலாளிகள் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த சயனைடைத்தான் அவனுடைய அண்ணன் சாப்பிட்டு விட்டு இறந்து போனார். இறந்து போனவருடைய உடலைப் போஸ்ட்மார்ட்டம் செய்து சயனைடு சாப்பிட்டதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏதோ ஒரு இன்சூரன்ஸில் அவர் போட்ட பணம் இருந்தது. அது அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பாகத்தான் கட்டும் தேதி முடிந்திருந்தது. அதனால் அவர் அந்தக் கட்டும்தேதிக்கு முன்பாக இறந்ததுபோல் ஒரு சான்றிதழ் அரசு மருத்துவரிடம் வாங்கினால் பணத்தை எடுத்துவிடலாம் என்று யாரோ ஒரு வில்லங்கமான ஏஜண்ட் சொன்னதுமட்டுமல்லாமல் ”இன்னாரிடம் போ” என்று என் பெயரை வேறு சொல்லியனுப்பிவிட்டான். உள்ள வில்லங்கங்கள் போதாதென்று இது வேறு வில்லங்கமா? என்று அவர்களிடம் மறுத்துச் சொல்லி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சரி சான்றிதழ்தான் கொடுக்க முடியவில்லை என்று அவனிடம் நகை மெருகு போட அடிக்கடி கொடுப்பது வழக்கம். பேசுவது சுவையாகப் பேசுவான். போகும்போதெல்லாம் நிறைய நகைகளை வைத்து மெருகு போட்டுக் கொண்டிருப்பான். ஏன் உன் அண்ணன் தற்கொலை செய்துகொண்டான் என்றால் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிவிடுவான்.

கொஞ்ச நாள் நான் அவன் கடைக்குச் செல்லவில்லை. ஒரு வாரம் முன்பு காலையில் அரசு மருத்துவமனையில் இருந்தபோது சார்! போஸ்ட்மார்ட்டம் ஒன்று உள்ளது. எல்லோரும் அவரவர் முறையை முடித்துவிட்டார்கள். இது உங்கள் முறை என்றார் உதவியாளர். ”என்ன கேஸ்?” என்றேன். சயனைடு பாய்ஸன் சார் என்றார். நான் என்னை அறியாமலேயே ஜெய்லானியா? என்றேன். உதவியாளர் முகத்தில் ஆச்சரியம் !!

(தொடரும்).

Wednesday 4 August 2010

ஜிடாக்கில் ”அசைவ சாட்”

தேவநாதனைத் தெரியுமா   http://abidheva.blogspot.com/2010/08/blog-post.html    போன இடுகையைப் பதிவில் போட்டவுடன்  ஒரு புதிய சாட் ஆன்லைனில்…

 

புதிய நண்பர் பிரதாப் ஜிடாக்கில் வந்தார். ம்துரை ஓட்டல் முட்டை வடியல் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் முட்டையின் பல்வேறு வகைகளைச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்கள்! உங்க ஊர் முட்டையைப் பற்றிச் சொல்லுங்க!

Prathap: //இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள்//

சில இடங்களில் வழியல் என்பார்கள்

சென்னையில் ஒரு கடையில் ”டிங்டாங்” என்றார்கள்...

என்னடா என வாங்கிப்பார்த்தால் இது...

thevan: முட்டைதானே! எனக்கு சரியாகத்தெரியவில்லை

Prathap: முட்டைதான்...

thevan: வழியல்தான் சரியா?

Prathap: இதில் ஒவ்வோரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள்

இல்லை

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர்

அதான் சொன்னேனே

thevan: ஓ சரிதான்

Prathap: டிங்டாங் என்று கூட கேள்விப்பட்டேன்

thevan: மதுரைக்காரங்க கிட்ட கேட்போம்

Prathap: ஒன் சைடு எனெ தூத்துக்குடி பக்கம் சொல்வார்கள்

அது ஆம்லெட்ட அப்படியே ஒரு பக்கம் மட்டும் வேக வச்சு

மடிச்சு எடுத்துக் குடுப்பாங்க

thevan: அப்படியா

Prathap: athஅது ஒரு வகை

அப்றம்

வெங்காயத்த கல்லுல போட்டு வதக்கு

அப்றம் அத எடுத்து ஆம்லெட் மாதி அடிச்சு போட்டு

திருப்பிப் போடாம அப்படியே எடுத்துக் குடுப்பாங்க

இது சிவகாசில சாப்ட்டது

அடுத்து ஒரு வகை

thevan: ஒரு ஊர்கூட விடலையா?

Prathap: ஆம்லெட் போடுறது மாதிரி டம்லர்ல எல்லாம் போட்டு, அதுல கொஞ்சம் சால்னாவையும் சேத்து ஊத்தி

கல்லுல போட்டு

அப்படியே தேச்சு விட்டு

ஒரு முக்கா வேக்காடா எடுத்துக் குடுப்பாங்க...

அது டாப்பு.

:)

ராம்நாட்டுலயும் இது கிடைக்கும்

அங்க வேற ஏதோ பேரு சொன்னாங்க

சிவகசில இதுக்கு பேரு கலக்கின்னு நினைக்கிறேன்.

என் பதிவைப்பாருங்க!

http://www.yetho.com/2009/08/blog-post_05.html

thevan: பார்க்கிறேன்! மாஸ் பத்தித் தெரியுமா?

Prathap: தெரியாது...

கொஞ்சம் சொல்லுங்க.

thevan: அவிச்ச முட்டையை வெங்கயம்,தக்காளி, கொஞ்சம் சால்னா ஊத்தி தோசைக்கல்லில் வேகப்போட்டு முக்கா வேக்காடாத் தருவாங்க

Prathap: இதுல இருக்கு வழியல்...

ஓஹோ...

எந்த ஊருல?

thevan: புதுக்கோட்டையில் ! சாப்பிட்டீங்க பசி பசி

கப்புன்னு அடங்கி விடும்!

Prathap: அந்த லிங்கப் பாருங்க

இன்னும் பசி எடுக்கும்.

:)

thevan: இதோ பார்க்கிறேன்!

வீட்டில முட்டை இல்லையாம்!

Prathap: இதெல்லாம் நெனச்சு எனக்கு பசிக்க ஆரம்பிச்சுட்டு

சாப்டுட்டு வரேன்.

thevan: எனக்கும்தான்!

சரி! சரி!!

எப்பூடி? நம்ம சாட்டிங்!

உங்க ஊர் முட்டை விசேசமா?

முட்டை,கோழி போன்ற சமுதாய சிந்தனையுள்ள கருத்தாடலுக்கு thevanmayam@gtalk அல்லது 9751299554 ஐ அனுகவும். வேலை நேரம்; 00 to 000 வரை!.

Monday 2 August 2010

தேவநாதனைத் தெரியுமா?

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடி வரை செல்லவேண்டியிருந்தது. மதுரை வந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று ஒரு அசைவ உணவகத்திற்குச் சென்றோம். மதுரையின் பிரபலமான அந்தக்கடை பாதி வெளியில் போடப்பட்ட மேசை நாற்காலிகளில் ’குடி’ மகன்களால் நிரம்பியிருந்தது.

நாங்கள் இடம் தேட கடையின் சிப்பந்தி ராஜ்கிரண் போன்ற தோற்றத்துடன்’ உள்ளே வாங்க’ என்று அன்புடன் மிரட்டல் அழைப்பு விடுத்தார்.
நேரமோ நடு இரவு 12 மணி இருக்கும். உள்ளே சென்று அமர்ந்தோம். அதே சிப்பந்தி சிவந்த கண்களுடன் என்ன வேணும்? என்று கேட்க நண்பர்கள் இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள். சரி! வடியல்,புரோட்டா என்று ஆர்டர் செய்ய அவர்  முட்டையைக் கொழகொழவென்று ஊற்றி சின்ன இலைகளில் கொண்டு வந்தார். கடையின் உள்ளேயும் குடிமக்கள் நால்வர் சத்தமாகக் கத்திப் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது ஆபாச ஜோக்குகளும், சிரிப்புமாக உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.

நாம் கண்சிவந்த சிப்பந்தியிடம்” என்னப்பா ஸ்பெசலா இருக்கு? என்று கேட்க நமக்குப் பின்புறமிருந்து “அண்ணே! மூளை ரோஸ்ட் சாப்பிடுங்க நல்லாயிருக்கும்” என்று ஒரு குரல். பார்த்தால் இரண்டு சிறுவர்கள்! இரவு 12 மணிக்கு இவர்கள் எப்படி? இங்கு என்று விசாரித்தோம்.
இருவரும் பக்கத்தில் கோவில் பூசாரிகளின் மகன்கள் என்றும் சாயங்காலத்துக்கு மேல் இந்தப்பையன்கள்தான் பூசை செய்வார்கள் என்றும் தெரியவந்தது. ”என்னடா இந்த நேரத்தில் இங்கே கடையில் சாப்பிடுகிறீர்கள்?” என்றால்
 ”இது என்னண்ணே! நாங்க இன்னும் லேட்டாக்கூட வருவோம், எங்களுக்கென்ன பயம்?” என்ன லேட்டா வந்தா குடல்கறி, மூளைரோஸ்டெல்லாம் கிடைக்காது” என்று கூறி அதிரவைத்தனர்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர்” ஏண்டா! தேவநாதன் தெரியுமாடா! அவன் சொந்தக்காரனாடா நீங்க?” என்று கேட்க கூட இருந்தவர்கள் அதிரடியாக சிரித்தனர்.

இரண்டு சிறுவர்களும் ஆங்கிலமீடியத்தில் எட்டாவது படிப்பதாகவும் தெரிவித்தனர். பெற்றோர்கள் இப்படி நள்ளிரவில் வெளியில் அனுப்பிவைத்தது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தச் சிறுவர்கள் சாயங்காலத்திலிருந்து கோயில் வேலை பார்த்துவிட்டு சேரும் சில்லரையில் இரவு கடையில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் கோவிலில் படுத்துவிட்டு அதிகாலை வீட்டுக்குப் போய்விடுவார்களாம்.
”உன் அம்மா திட்டமாட்டார்களா?” என்று அப்பாவியாகக் கேட்டேன். திட்டமாட்டங்கண்ணே, சாயங்காலம் சேரும் பணத்தில் பாதி எங்களுக்கு பாதி அம்மாவுக்குக் கொடுத்து விடுவோம்! ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றான்.
சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சுமையாக இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியும் பெற்றோரா என்று வருந்தினேன். மன வருத்தத்துடன் காரில் ஏறிக்கிளம்பினோம் .

(உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லவும்.)

அன்பால் இணைந்த பதிவர்கள்-5

மணற்கேணிக்கு சிங்கை சென்றது ஒரு புதிய உலகின் கதவைத் திறந்துவிட்டது போல் இருந்தது. நிறைய பதிவர்கள் தமிழ் ஆர்வலர்களைச் ச்ந்திக்க முடிந்தது.

பூக்களின் பெயரை அறியாத வண்டு தேன் அருந்தியது போல் நான் சந்தித்த பலரின் பெயரும் எனக்கு நினைவிலில்லை.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க சிரமப்பட வேண்டியதில்லை. முப்பத்தி ஒரு (31)டக் டூர் என்ற பயண பேருந்த்கள் உடல் முழுக்க டக்  டூர் என்ற பெரிய எழுத்துகளையும் படங்களையும் தாங்கி நகர் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அருகில் டக் டூர் பஸ் எஙுகு வரும் என்று கேட்டு ஏறிக்கொள்ளலாம். அதிலேயே டிக்கெட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு பஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் அன்று முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இறங்கி இடங்களைப் பார்த்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் மீண்டும் அவர்களின் எந்த் பஸ்ஸில் வேண்டுமானாலும் ஏறலாம.

Boarding location @ Suntec City (Galleria)

Operating Hours: 10am – 6p

Duration : 60 minutes
Frequency
: Hourly departures
: 31 DUCKies
: S$33/Adult
   S$17/Child (3-12 years)
   S$2/Toddler (Below 3 yrs)
Phone reservation are highly  recommended.
Call us @ 6-33-868-77 (TOURS).

சன்டெக் சிட்டி என்றொரு மாபெரும் மால் உள்ளது. இது நம் ஸ்பென்சர் பிளாசா போல் ஐந்து பிரமாண்டமான மால்கள் ஒரு பெரிய ரவுண்டானாவைச் சுற்றிக் கட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே:சண்டெக் சிட்டியின் 5 பெரிய கட்டிடங்கள்,நீரூற்று!

ஐந்து கட்டிடங்களுக்கும் நடுவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று அமைந்துள்ளது. சண்டெக் சிட்டியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கடைகளும் உள்ளன. அனைத்து வகை உணவுக்கூடங்களும் உள்ளன.

அங்குள்ள வாசகர் வட்டம் பற்றிச்சொல்லியிருந்தேன். அதில் முக்கியப்பங்கு வகிப்போர்  திருமதி.சித்ரா,திருமதி ஜெயந்தி.

 clip_image001[6]

திருமதி.ஜெயந்தி ஏகப்பட்ட சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். சீன மொழியிலும் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ஆனால் வெகு எளிமையாகப் பழகுகிறார். சித்ரா அவரை மேடையேற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. மேடைப்பேச்சுப் பழக்கமில்லையாம்.

அவருக்கு நேரெதிர் நம் சித்ரா அவர்கள். மணற்கேணி அமைப்பின் எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தைத் திறனாய்வு செய்தார். சுமார் அரை மணிநேரம சுவையுடன் அவர் கொடுத்த விமரிசனம்.. சொல்ல முடியாத அளவு சிறப்பாக இருந்த்து. இவரும் கதை, பட்டிமன்றம் என்று சிங்கையைக் கலக்கி வருபவர். நமக்காக வந்திருந்த் சித்ரா, ஜெயந்தி இருவருக்கும் நன்றி!

திருமதி.சித்ரா

clip_image001

மேலே ஜெயந்திசங்கர், சித்ரா, செந்தில்நாதன்,குழலி

clip_image001[4]

டொன்லீ- http://donthelee.blogspot.com/2009/03/blog-post_23.html  சிறப்பாகக் கதைகள் எழுதிக்கொண்டிருந்த சிங்கை மாணவர். படிப்புச்சுமை காரணமாகத் தற்சமயம் கொஞ்சம் எழுத்தைக்குறைத்துவிட்டார். கணினியும் கையுமாக இருந்தார்.

clip_image001[8]

டொன்லீ

பக்கத்து ஊர்க்காரரான( சிங்கம்புணரி) பாண்டித்துரையைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.http://pandiidurai.wordpress.com/ நாம் என்று அவரும் அவர் நண்பர்களும் நடத்தும் இதழினைப் பரிசளித்தார். தமிழ் இலக்கியம் வளர சிங்கையில் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது.

clip_image001[10]

பாண்டித்துரை

மலேசியாவிலிருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கே.பாலமுருகன் வந்திருந்தார். அமைதியுடன் அமர்ந்திருந்த இவர்  இலக்கிய வட்டத்தில்  எல்லோருக்கும் நன்குhttp பரிச்சயமானவர்.://bala-balamurugan.blogspot.com/  இலக்கியம் பற்றிப்பேசுவத்ற்கு சந்த்ர்ப்பமேதும் இல்லாமல் போயிற்று. 

clip_image001[12]

கே.பாலமுருகன்

அநங்கம்  மலேசிய இலக்கிய சிற்றிதழ்

அநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்
அநங்கம் என்ற மலேசிய இலக்கியச் சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் இருக்கிறார்.

சிங்கப்பூர் பிளையர் என்கின்ற ராட்சத ரங்கராட்டினம் சிங்கப்பூரில் சுற்றுலாச் செல்வோர் பார்க்க வேண்டிய ஒன்று. மயக்கம், தலைசுற்றல் வருமோ என்று பயப்படத்தேவையில்லை. ஏனெனில் நகருவதே தெரியாதவண்ணம் மெதுவாக சுற்றுகிறது. 

இரவில் சிங்கையைப் பிளையரில் பார்ப்பது மிக அழகு.

தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory