Monday 31 May 2010

…… சிங்கம்டா!!

 

சிங்கப்பூர் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ் மணம் வீசுவதும் ஏதோ நமக்கு பக்கத்தில் உள்ள ஊர் மாதிரித் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் சிங்கம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்!! அப்படியானால் சிங்கத்துக்குத் தமிழில் என்ன பெயர்? அரிமா என்பதுதான் அது. ஏறு என்று ஆண் சிங்கத்தைக் குறிப்பது வழக்கம். ’ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

சிங்கம் என்ற பெயர் வட நாட்டிலிருந்து தமிழகம் வந்ததுபோல் தமிழ் நாட்டிலிருந்து சிங்கைக்கும் சென்று விட்டது.

சிங்கம் என்ற பெயர் சிங்கைக்குப் போனது அல்லாது தமிழ்ச் சிங்கங்கள் (அரிமா)க்கள் பலவும் சிங்கை சென்று விட்டன.( இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இவர்களைப் பார்க்கும் போது வருவதை   என்னால்  தவிர்க்க முடியவில்லை. இந்தச் சிங்கங்கள் வேறு யாருமல்ல, ’மணற்கேணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிங்கையில் வாழும் தமிழ்ப் பதிவர்களை ஒன்றிணைக்கும் ‘ தமிழ்ப் பதிவர்கள்தாம் அவர்கள்.

கடல் கடந்து செல்வது தமிழனுக்குப் புதிதல்ல. கடல் கடந்த தமிழர்களின் திறமையும் யாரும் அறியாததல்ல. அறிய வேண்டிய ஒரே ஒரு விசயம்- தமிழின் பால் அவர்களுக்குள்ள அன்புதான்.

இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ஏதோவொரு புள்ளியியல் மடையன் சொன்னான். அவன் சிங்கை சென்றால் தமிழ், தமிழ் நாட்டில் மட்டுமன்று உலகம் முழுதும் அழியா மொழியாய்த் திகழும் என்பதை உணருவான். இது உணர்ச்சி மிகுதியால் வந்த வார்த்தைகள் அல்ல! உண்மை உணர்வின் வெளிப்பாடு!!

சிங்கைப் பதிவர்கள் மணற்கேணி வெற்றியாளர்களை வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தியதை மறக்க முடியாது. இது வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச கவுரவம், அன்பு என்றே நான் கருதுகிறேன்.

(தொடர்ந்து எழுதுவேன்….)

Wednesday 12 May 2010

சுறா படம் சூப்பர் ஹிட்!! வசூல் சாதனை!!

சுறா படம் ரிலீஸான தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

ஆன் லைனில் டிக்கெட்டுகள் புக்காகி விடுவதால் நேரில் செல்லும் கிராமப்புற மக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

படம் போடப்பட்ட தியேட்டர்களிலெல்லம் நிறைய பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன! இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே சுறாவுக்குத்தான் அதிகமான பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாம்.(முன்னெல்லாம் பிளெக்ஸ் போர்ட் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை என்பதும் ஒரு காரணம்!!).

வெயில் காலமானாலும் காரைக்குடியில் சுறா படம் போட்டுள்ள பாண்டியன் திரையரங்கம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் திருப்தியுடன் படம் பார்த்துச் செல்கின்றனர்.

கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்பதில் கரைக்குடி டி.எஸ்.பி யும் ஜோசப்பும்  சேர்ந்து விவாதித்து முடிவெடுத்துள்ளனர்..

”ஜோசப்!! எழுந்திரு”—ஷோபா சந்திரசேகர் தட்டி எழுப்புவது ஜோசப்பின் காதில் விழுந்தது!!!

டிஸ்கி: ஜோசப்!!! யெஸ் யூ ஆர் கரெக்ட்!!! எப்படி? தாக்கீட்டோமா!!!!  ஹி!! ஹி!! ஹி!!

Monday 10 May 2010

ஆன்டிபாடி! ஆட்டோ ஆன்டிபாடி!!

ஆன்டிபாடி என்று தட்டச்சு செய்தால் ’ஆண்டிபாடி’ என்றுதான் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதுகிறது! கூகிளும் அப்படித்தான்….ஆச்சரியமாக இருந்தால் தட்டிப்பாருங்கள்.
ஆன்டிபாடி என்றால் என்ன என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? பலருக்குத் தெரிந்திருக்கும்…நோய் எதிர்க்கும் சக்திகள், நம் இரத்தத்தில் இருப்பவை. இவை புரதத்தால் ஆனவை!
இவை இரத்தத்தில் பாக்டிரியாக்கள், வைரஸுகள், உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு பிடித்து அதைச் சுற்றிவளைக்கின்றன. பின்னர் இவற்றை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிக்கின்றன.அப்படி அழிக்க முடியாவிட்டால் நாம் அந்தக் கிருமியால் ஏற்படும் நோயால் தாக்கப்படுவோம்.
ஆட்டோ ஆன்டிபாடிகள் என்றால்? - ஆன்டிபாடிகள் எப்படி உடலுக்கு அன்னியமான பொருட்களைக் சரியாகக் கண்டுகொள்கின்றன என்பது ஒரு ஆச்சரியம். பொதுவாக கிருமிகள், ஒவ்வாத பொருட்களின் மேல் ஆன்டிஜென் என்ற பொருள் காணப்படும். இந்த ஆன்டிஜென்களை இவை எதிரிகள் என்று இனம் கண்டு கொள்கின்றன.
ஆனால் சிலருடைய உடலில் உள்ள உறுப்புகளையும், திசுக்களையும் கூட இந்த ஆன்டிபாடிகள் தவறுதலாக எதிரிகளாகக் கணித்து விடுகின்றன. இதனால் இவற்றை அவை தாக்க ஆரம்பித்து விடுகின்றன. இத்தகைய ஆன் டிபாடிகளையே ஆட்டோ ஆன்டிபாடிகள் என்கிறோம்.
இப்படி நம் உடல் ஆன்டிபாடிகளே நம் உடலுக்கு எதிராகச் செயல்படும்போது ஏற்படும் நோய்களுக்கு- ஆட்டோ இம்மியூன் வியாதிகள் என்று பெயர்.
சரி! இதெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? ஆட்டோ இம்மியூன் வியாதிகள் பற்றி அறிந்தால் அரண்டு போவீர்கள்!
  • உலகின் 6 பேரில் ஒருவருக்கு ஏதாவதொரு இந்த வகை வியாதி வருகிறது.
  • இதயநோய், கேன்சர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு அதிகம் துன்பம் ஏற்படுத்துபவை இவ்வகை நோய்கள்தான்.
  • Type 1 சக்கரை நோய்
  • ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்
  • முடக்குவாதம், ஆங்கிலோசிங்க் ஸ்பாண்டிலோசிஸ்
  • குல்லன் பாரி நோய்
  • சில சிறுநீரக வியாதிகள்
  • மயஸ்தீனியா கிரேவிஸ்
  • சொரியாஸிஸ்
  • அல்சரேடிவ் கொலைடிஸ் எனப்படும் குடல் நோய்
  • வாஸ்குலைடிஸ் என்ப்படும் இரத்தக் குழாய் நோய்
  • மல்டிபிள் ஸ்கிளரோசிஸ் என்னும் நரம்பு நோய்
உள்ளிட்ட 40 வகை நோய்கள் இந்த வகைதான். இன்னும் சிக்கலான மனநோய் போன்றவற்றுக்கும் இது காரண்மாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மனிதன் எதிநோக்கும் மிகப்பெரிய பிரச்சினையில் ஆட்டோ இம்மியூன் வியாதிகள் மிக முக்கியமானவை. இவற்றைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆரம்பத்திலேயே அறிந்து அதனால் ஏற்படும் கொடிய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

Thursday 6 May 2010

தூக்கம் போச்சுதே- சமீரா ரெட்டி!!

சமீரா ரெட்டி- அடிக்கடி ”கோடம்பாக்கம் வாடகைக்கு எடுக்கும் வானவில்,வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் தென்றல்”

என்றெல்லாம்  கவிதை கணக்கா எழுதினால் “ என்னைய்யா!! எழுதுகிறாய் நீ?” என்று பின்னூட்டப் பிதாமகர்களின் தாக்குதல் ஒரு பக்கம்; மருத்துவப் பதிவாகப் போட்டால் மருந்துக்கு பிளாக் பக்கம் வருபவர்கள்கூட ”வழக்கம்போல் நல்ல பதிவு” என்ற  டெம்பிளேட் பின்னூட்டம் போட்டு விட்டு ”கொல்றான்யா இவன்” என்று ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்…..  என்ன செய்வது? . சரி நம்ம எழுதுகிறபடி எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்து விட்டேன்.  

நம்ம சமீராரெட்டிக்கு சோம்னாம்புலிசமாம்! கேட்டதிலிருந்த நமக்குத் துக்கமே போச்சுங்க!! சோமனாம்புலிசம்னா என்னன்னு கேட்கிறீர்களா? அதுதாங்க தூக்கத்தில் நடக்கும் வியாதி! அடக் கொடுமையே! என்று அங்கலாய்க்கிறீர்களா? என்ன செய்வது? விதியும் வியாதியும் யாரை விட்டது?

அதுவும் சமீரா கண்ணைத்திறந்து கொண்டே தூக்கத்தில் நடப்பாங்களாம். சமீரா குழந்தையா இருக்கும்பொதே (ஹார்லிக்ஸ்தான் குடிச்சாங்களாம்!!! ஹி! ஹி!!) தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்… பின்னாடியே அம்மாவும் அப்பாவும் தூங்காமல்…..

  • 1-15% பேர் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 4 லிருந்து 8 வயதுவரை இதன் வேகம் அதிகமாக இருக்கும்.
  • இந்த வியாதி வருவதற்கான காரணங்கள் இவைதான் என்று இன்னும் அறியப்படவில்லை.
  • தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளோர் பகலில் எல்லோருடனும் நன்கு கலந்து பழகுவர்.
  • தூக்கத்தில் நடக்கும்போது என்ன செய்கிறோம் என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது.
  • தூக்கத்தில் நடப்பது 30 நொடியிலிருந்து 30 நிமிடம் வரைகூட நீடிக்கும்.
  • நடப்பதுடன் வீடு கூட்டுதல், பாத்ரூம் கழுவுதல், சமையல் செய்தல் ஆகியவைகூடச் செய்வார்கள்.
  • அவர்கள் தற்கொலைகூட செய்துகொள்வர்.
  • தூக்கத்தில் இவர்கள் கொலை செய்தால்கூட அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.

 

சமீராவுக்கு வைத்தியம் பல செய்தும் இன்னும் வியாதி தீரலையாம்.

பேய்ப்படப் படப்பிடிப்பில் இவர் ஒருமுறை நடு இரவில் நடந்து போக மொத்த யூனிட்டும் பயந்து அலறியதாம்- அட உண்மையாத் தாங்க சொல்கிறேன்.

அது போக சமீரா வீடற்ற குழந்தைகளுக்காக இயங்கும் அமைப்பிலும் பங்கு கொள்கிறார். அந்தக் குழந்தைகளுடன் சமீராவின் படங்கள் கீழே!!

Sameera Reddy the Brand Ambassador of Dreams Home NGO at Bandra

http://www.desihits.com/news/view/photos-sameera-reddy-visits-dreams-home-ngo-in-mumbai-20100421

Sameera Reddy at Dreams Home NGO children's event image

Sameera Reddy at Dreams Home NGO children's event image

வியாதி இருந்தாலும் என்ன வாங்க ஜெயிக்கலாம் என்கிறார் சமீரா!! வாங்க நாமும் வெல்லலாம்!

Monday 3 May 2010

த்ரிஷாவின் டாட்டூ- புதிர் விடை!

த்ரிஷவின் டாட்டூவுக்கான பதில்கள்

 

 

சி. கருணாகரசு said...

வியப்பான தகவலுக்கு நன்றிங்க....
திரிசாவின் தோள்பட்டைக்கு சற்றுகீழே (முன் பக்கமாக) மீனோ வண்ணத்து பூச்சியோ டாட்டூ குத்தப்பட்டுள்ளது
1. என் கண் பார்வை மிக தெளிவு....
2. எனக்கு ஞாபக சக்தி மிக அதிகம்...
3.பொது அறிவு மிக மிக அதிகம்......

3 May 2010 04:13

சரியான பதில் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

அண்ணன் கருணாகரசுவின் பதிலைத்தவிர ஒன்றும் சரியாக இல்லாததால் நானே படத்துடன் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. த்ரிஷாவே தைரியமாக டாட்டூ குத்தியிருந்தாலும் அதைச் சொல்ல எனக்கு தைரியம் கம்மிதான்!! இருந்தாலும் உங்களுக்காக …….. ஹி! ஹி! !!

trisha nude upskirt

த்ரிஷாவின் நெஞ்சில் இடம் பிடித்த அந்தச் செல்லக் குட்டி மீன் ’நீமோ’.

ஃபைண்டிங் நீமோ http://www.imdb.com/title/tt0266543/  2003 ல் வந்த படம். கார்ட்டூன் நெட்வொர்க்கில் தொடராகத் தமிழில் வந்தது.

டிஸ்கி: 1.கையில் ஏதோ டாட்டூ குத்தியிருப்பதும் தெரியுது. அது என்ன என்று பதிவுலக ஆராய்ச்சியாளர்கள் சொல்லவும்!!  

2.சரியான பதில் சொன்ன அண்ணன்  கருணாகரசுவுக்கு வாழ்த்துக்கள்!!

சிட்னியில ’சுறா’! த்ரிஷாவின் டாட்டூ!!

”சுறா படம் பார்த்து விட்டீர்களா?  படம் ஹிட்டா? “- இதே கேள்விதான் சுறா படம் ரிலீஸானதிலிருந்து. விஜய் படம் என்றாலே ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் பேனாவுடன் என் நண்பர்கள் தயாராக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்தப் படம் விஜய் மிகவும் எதிர் பார்க்கும் படம். இது கையைக் கடித்துவிட்டால்?

சரி மேட்டருக்கு வருவோம்.1935 ஏப்ரல் 8 ம் தேதி ஆஸ்திரேலியா சிட்னியில் ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் காணாமல் போய் விட்டார். அவர் காணாமல் போன 14 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்ட ஒரு சுறா மீன்  மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டது.  அந்த சுறா கடலில் ஒரு மனித கையை விழுங்கி இருந்தது, பிடிபட்ட பின் அதனை அது மீன் காட்சியகத்தில் கக்கி விட்டது.

அந்தக்கையானது உடலிலிருந்து ஒரு கூரான கத்தியால் அறுக்கப்பட்டது போல் காணப்பட்டது.

காணாமல் போன ஜேம்ஸ் ஸ்மித் ஒரு குத்துச்சண்டை வீரர். அவர்  புஜத்தில் இரு வீரர்கள் குத்துச்சண்டை போடுவது போல் பச்சை குத்தியிருந்தார்.

கையைப் பார்த்த அவர் மனைவியும் தம்பியும் அது ஸ்மித்தின் கைதான் என்பதை உறுதி செய்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டு கடலில் துண்டுகளாக அறுத்து வீசப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கொலை செய்தவன் உடலை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக துண்டங்களாக சுறாக்களுக்கு இரையாக்கினாலும் கடைசியில் கையில் குத்தப்பட்ட பச்சையால் உடல் யாருடையது என்று கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.

  • டிஸ்கி: பதிவுலக யூத்துகளுக்கு: 1.டாட்டூ மோகம் இளைஞர்களைப் பிடித்து ஆட்டுகின்றது என்றும் கண்ட இடங்களில் குத்திக் கொள்கிறார்கள் என்றும் பக்கத்து வீட்டு அம்பி ரொம்ப வருத்தப்பட்டான். அவன் கிடக்கிறான். யூ ராக் ரெமோ!!
  • 2.பொது அறிவுக் கேள்வி:த்ரிஷாவுக்கு எந்த இடத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது?  என்ன படம் பச்சை குத்தப்பட்டுள்ளது?

தேவா…

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory