Wednesday 22 December 2010

எனக்கு வேண்டாம் ஓட்டு!

அன்பு நண்பர்களே!

தமிழ்மணம்  வலைப் பதிவர்களுக்கான போட்டி அறிவித்துள்ளது 

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் எப்படி ஜாலியோ அப்படித்தான் இதையும் லைட்டாக எடுத்துக் கொள்வதே சிறந்தது ( மனதுக்குள் இப்படி 10 முறை சொல்லிப்பாருங்கள்-மனம் லேசாகி விடும்… எப்புடி……………..    ஹி…. ஹி…….}

மேலே சொன்னது போல் அமைதியாக இருந்த என்னை சும்மா விடாமல்,  என் வீட்டு எடிட்டர் ( வேறு யார்.. வீட்டம்மாதான் ) என் இடுகைகளில் மூன்றை என் அனுமதியில்லாமல் { என் லாகின் ஐ.டி,, பாஸ்வேர்ட் எல்லாம் பறிக்கப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டன.. …..}  தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டார்.

அந்த மூன்று இடுகைகள்:

1.   பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

தேவன் மாயம் : கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!

2. பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள

தேவன் மாயம் : நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!

3.பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்

 தேவன் மாயம் : வீட்டில் ஜாலி!

  ஹி  … ஹி..   இவற்றிற்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம். அட  … உண்மைதாங்க!!  

என்னது?  படித்துப்பார்க்கப் போகிறீர்களா?  .. சொன்னாக் கேக்க மாட்டேங்கறீங்களே!  சரி! உங்க இஷ்டம்!   …..

ஓட்டுப் போடுங்க!   நீங்க போடுகிற ஓட்டையெல்லாம் நெகடிவ் ஓட்டாக எடுத்துக் கொள்ளச் சொல்லி தமிழ்மணத்துக்கு ஏற்கெனவே மெயில் பண்ணிவிட்டேனே!!!………………………………………

என்னடா . இவனுக்கு லூசா …. என்று நினைக்கவேண்டாம். 

உண்மையில் நல்ல இடுகைகள் யார் எழுதியிருந்தாலும் அவர்கள்ளுக்கே ஓட்டுப்போடவும்..  அதுதான் சரி…..

என்ன நண்பர்களே! நான் சொல்வது சரியா?

-----------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை……. கவிதை மாதிரி…

 

கேள்விகளுக்கும்

பதில்க்களுக்கும் இடையில்

இருந்தது,

இறந்து கொண்டிருந்த

அழகான

காதல்!

---------------------------------------------------------------

Saturday 18 December 2010

கொஞ்சம் தேநீர்- ….!

image

தேடிய நான்

எதிர்பார்த்த தெருவில்

இல்லை,

வழியில்,

எதைத் தேடினேன்

என்பதும் புரியவில்லை!

 

எதையோ

தேடித் தினமும்

தெருவில் நான்,

என்னைத்

தேடி

கதவுகளின் பின்னால் நீ!

 

-------------------------------------------------------------------------------------

00000000000000000000000000000000000000000000000000000

*************************************************************************************

 

இவற்றையும் படிக்கலாமே!

1.கொஞ்சம் தேநீர்- நான் உறங்க!

2.கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

Thursday 16 December 2010

கொஞ்சம் தேநீர்- முத்தம்!

மவுனமாய்

நீ பேசிய சொற்களையெல்லாம்

திரட்டி

யாருமறியாமல்

கொடுத்தாய் முத்தமாய்!

 

எவ்வளவு அன்பைக்

குழைத்து முத்தமாக்கினாய்?

 

கரையில்லாத

கடல்போல்

விளிம்பில்லாதது

உன் முத்தம்!

 

முடிவுறாத உன்

முத்தங்களில்

மூழ்கிக்கிடக்கிறேன்

நான்!

 

மீண்டெழும்

முத்தங்களின் கரைகளில்

காதலும்

கவிதையுமாய்க்

கிடக்கிறாய் நீ!

Monday 6 December 2010

சின்ன விசயம்!

image

தினமும் காலை எழுந்தவுடன் வேக வேகமாகக் குளித்து உடை அணிந்து வேலைக்குச் செல்லும்போது நம் எல்லோருக்கும்  அன்று அலுவலகத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.  போதாக் குறைக்கு அன்று செய்ய வேண்டிய வேலைகள் வேறு  டென்ஷனைக் கிளப்பிவிட்டிருக்கும்.

இதில் அலுவலக்த்தில் நுழைந்து அவரவர் வெலைகளில் மூழ்கிப்போகும் நாம் எப்படி நம் டென்சனைக் குறைத்துக்கொள்வது.?

இதற்கு வெகு சுலபமான சின்ன செயல்களை என்  கல்லூரி ஆசிரியர் ஒருவரிடமிருந்து  நான் சுட்டு  வைத்துள்ளேன்.. கைவசம் உள்ள அந்த சரக்கு ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆயினும் காலையில் எல்லோருக்கும் இருக்கும் அந்த டென்ஷனை அது மிகவும் குறைக்கிறது. அதனை  இப்போது  உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதலில் உள்ளே நுழையும் போதே அவர் தன்னை விட பணியில் மேலுள்ளவர்களோ, கீழுள்ளவர்களோ யாராக இருந்தாலும் சரி சிரித்து முதல் வணக்கத்தைப் போட்டு விடுவார். சின்னப் பையன்களாக இருந்தால் அவன் கண்டுகொள்ளாமல் போகிறானே என்று எண்ணாமல் “என்னடா தம்பி, எப்படிடா இருக்கிறாய்?” ஒரு சின்ன விசாரிப்பு.

உள்ளே நுழைந்தவுடன் கூட்டம் அதிகமாக இருக்கும். நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே நம்மையும் நோட்டம் விடுவார். கொஞ்சம் கூட்டம் குறைந்தவுடன் அன்று நாம் போட்டிருக்கும் சட்டை, பேண்ட் இவற்றைப் பாராட்டாமல் விட மாட்டார். “ சட்டை பிரமாதமா இருக்கே! பேண்ட் பிட்டிங் அருமையா இருக்குடா தம்பி!”

“தம்பி தலையை ஒரு ஸ்டைலா வாரியிருக்காண்டா! அசத்துடா!” என்று சின்னச் சின்ன சிரிப்புடன் பாராட்டுதல் அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.. நான் வார்டுக்குச் சென்ற சில நாட்களில் அவரின் சிஷ்யனாகிவிட்டேன். மிகவும் ரிசர்வ் டைப்பான மருத்துவ மாணவர்கள்கூட அவருடன் கலந்து சந்தோசமாகப் பேசுவது கண்டு வியந்து போயிருக்கிறேன்.

அவருடன் டீ சாப்பிடச் செல்வதே ஒரு சுகானுபவம்.  வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மாணவர்கள்கூட அவர் வார்டில் நன்றாக வேலை செய்வார்கள்.

சிரித்துக்கொண்டும், பிறரைப் பாரட்டிக்கொண்டும் இருப்பது, கர்வத்துடன் சுயபெருமை கொண்டு இருப்பதைவிடச் சிறந்தது என்பதை அவருடைய செயல்கள் உணர்த்திக்கொண்டே இருக்கும்.

அவருடன் பணிநாள் என்றால் அவரைச் சுற்றி ஒரு குழுவே உட்கார்ந்திருக்கும். பக்கத்து வார்டுகளில் பணியிலிருக்கும் நாங்களும் அவருடன்  சென்று பேசிக்கொண்டிருப்போம்.

இன்றும் நான் அரசு மருத்துவமனைக்குள் நுழையும் போதெல்லாம் அவர்  நினைவு வந்து விடும். யாரைக்கண்டாலும் மறக்காமல் நானே முந்திக்கொண்டு  சிரித்துக்கொண்டே  குட்மார்னிங் சொல்லி விடுகிறேன்.  அதே போல் பிறரின் உடையையோ செயல்களையோ பாராட்டவும் செய்கிறேன்.

எவ்வளவு கூட்டமிருந்தாலும் அவர்களால் சிரித்துக்கொண்டே எளிமையாக மலைப்பில்லாமல் வேலை செய்ய முடிகிறது.

நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!  . என்ன நான் சொல்வது சரியா?

Wednesday 1 December 2010

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-4-தடுப்பு&சிகிச்சை

  image

தட்டுப்ப்பிதுக்கம் பற்றிய முந்தைய இடுகைகள் கீழே!

முதல் இடுகை:

வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)

இரண்டாவது இடுகை:

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2

மூன்றாம் இடுகை

டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-3

இந்த தட்டுப்பிதுக்கம் வராமல் தடுத்துக்கொள்ள முடியுமா?

இது வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிகளைப் பயன்படுத்தலாம்.

  1. முதுகு தசைகள் பலமிழத்தலே முக்கிய காரணம். முதுகுத் தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  2. உடல் எடை அதிகரித்தல்- உடல் எடை அதிகரித்தால் முள்ளெலும்பிடைத் தட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தட்டுப்பிதுக்கம் அதிகரிக்கும்.
  3. நிமிர்ந்த நடையும், நிமிர்ந்து அமருதலும் மிக முக்கியம். இதனால் முதுகெலும்பின் வளைவுகள் சரியான நிலையில் இருப்பதால் தட்டுகளின் மீதான அழுத்தம்  குறையும்.
  4. முதுகை முன்புறம் வளைத்து குனிந்து பொருட்களை எடுப்பதால் தட்டுகளின் முன்புறத்தில் அழுத்தம் அதிகமாகிறது.இதனால் மெதுவாக தட்டு சிதையும் வாய்ப்பு அதிகமாகிறது.
  5. புகை பிடித்தல்- தட்டுப்பிதுக்கம் இதனால் அதிகரிக்கிறது.

பரிசோதனைகள்: கீழ்முதுகு தட்டுப்பிதுக்கத்தைக்க் கண்டுபிடிக்க கீழ்க்கண்ட பரிசோதனைகள் உள்ளன.

  1.   எக்ஸ் கதிர்ப்படம் அல்லது நுண்கதிர்ப்படம்- நுண்கதிர்ப்ப்படத்தில் எலும்புகளுக்கு இடையில் தட்டு உள்ள பகுதி குறைந்து காணப்படும். ஆயினும் இதைக்கொண்டு நாம் தட்டுப்பிதுக்கத்தை உறுதி செய்ய முடியாது.
  2. எம். ஆர்.ஐ- ஸ்கேன் –இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவில் உள்ளது, மற்றும் எந்தப்பகுதியில் உள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சிகிச்சை முறைகள்:

  1. பொதுவாக இவை தன்னாலேயே சுருங்கிவிடும்ம் தன்மை கொண்டவை என்பதால் அறுவைசிகிச்சை 73% நோயாளிகளில் தேவைப்படாது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தட்டு வீக்கத்தைக்குறைக்கும் மருந்துகள், வலி குறைக்கும் மருந்துகள் ஆகிய்யவற்றைக் கொண்டு முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  2. முதுகுப்பட்டைகள் (LUMBOSACRAL BELT) பொதுவாக இந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது ஓரளவே பயன் தரும்.
  3. பயிற்சி முறைகள், இயன்முறை சிகிச்சை: மின் கருவிகள் கொண்டு முதுக்குப்பகுதியில் மசாஜ் போல் சூடேற்றி பிடித்து விடுதல் (Interferential therapy, Electrical stimulation), மின் இழுவைக் கருவி மூலம் எலும்புகளுக்கு இடையில் உள்ள இடை வெளியை அதிகப்படுத்த முயற்சிகள்( traction) போன்ற உப சாந்தியான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
  4. தட்டு பிதுங்கிய இடத்தில் ஸ்டீராய்ட் ஊசி மருந்து செலுத்தி அந்த பிதுக்கத்தின் வீக்கத்தைக் குறைத்தல்

மேற்கண்ட சிகிச்சை முறைகள் மூலம் பலன் இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்.

அறுவை சிகிச்சை என்பது மிகக்குறைந்த நோயாளிகளுக்கே செய்யப்படுகிறது. முதுகுப்புறத்தில் உள்ள பிதுங்கி வெளித்தள்ளியுள்ள தட்டு அறுவை சிகிச்சை செய்து  நீக்கப்படுகிறது..

அறுவை சிகிச்சை:

தற்போதைய நவீன அறுவை சிகிச்சை முறைகளில் பின் விளைவுகள் மிகக் குறைவு.

அறுவை சிகிச்சை செய்வதால் 80 லிருந்து 90% நோயாளிகளில் கால் வலியானது முற்றிலும் நீங்கிவிடுகிறதுகால் மதமதப்பு, தசை பலவீனம் ஆகியவை குறைய 6-12 வாரங்கள் ஆகலாம்.

10-15 சதவீதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டோருக்கு மீண்டும்  அதற்கு மேலுள்ள அல்லது கீழுள்ள எலும்பிடைப்பகுதிகளில் இந்நிலை மறுபடியும் ஏற்படலாம். .

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory