Sunday 30 November 2008

கல்லூரி கனாக்கள்

வாழ்க்கைப் படகேறி
வழிமாறிப் போனாலும்
வாழுகின்ற காலமெல்லாம்
வழித்துணையாய்க் கூடவரும்.....

நிஜங்களின் அழுத்தத்தில்
நெஞ்சிறுகிப் போனாலும்
கல்லுக்குள் ஈரமாய்க்
கசிந்திருக்கும் காலமெல்லாம்.....

ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

தோழியா என் காதலியா!!!

தோழியா என்றாய்?
தோழமையுடன் வந்தேன்
தோழமை கொள்ளவில்லை நீ!
மனைவிதானே என்றாய்|
காதலியா என்றாய்?
காதலுடன் வந்தேன்
காதலும் பண்ணவில்லை நீ!
ம்னைவிதானே என்றாய்‍‍‍‍‍‍‍_சரி
மனைவிதான் என்றேன்
மதிக்கவும் இல்லை நீ!
இஙகே பாருங்கள் 
பூமாதேவி நான்!திருமகள் நான்!
பசிதீர்க்கும் அன்னை நான்! 
மதியூகி நான்!
தாதி நான்! தாசி நான் என்றேன்
இல்லை அது
ராமன்(எம்ஜிஆர்)தேடிய சீதை(ஜெயலலிதா) 
என்றாய்!
சரி!
மனைவி என்றால் என்ன என்றேன் 
மண்ணாங்கட்டி என்றாய்!!!!. 

Saturday 29 November 2008

இலவச பணம்

நான் நேற்று ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வ்ழங்கும் முகாமுக்குச் சென்றிருந்தேன்(காரைக்குடி அருகில் கல்லல் என்ற ஊருக்கு). நிறய கூட்டம். ஊனமுற்றோரைப்பார்க்க மிகவும் க்ஷ்டமாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது நம் கடமை. முகாம் நடுவில் ஒரு பையன் வந்தான்.யாரையோ கூட்டிக்கொண்டு வந்தான்.என்னன்னு கேட்டா அவனுக்கு ஊன சான்று கேட்டான்.சரி படிக்க யூஸ் ஆகும்தானே, ப்டிப்பு உதவித்தொகை வாங்கலாம்,கல்லூரில படிக்க உதவியா இருக்கும்னு சரிப்பான்னு போட்டுக்கொடுத்தேன். இப்ப்த்தான் ஜோக்கைக்கேளுங்கள். மருபடியும் வந்து இன்னொரு பாரம் கையெழுத்துப்போட்டுத்தாங்க என்றான்.யேன்டான்னு கேட்டா மாசாமாசம் 400 ரூபாய் உதவித்தொகை வேணும்கிறான்.நான் சொன்னேன்: ஊனம் கம்மியாத்தான் இருக்கு நீ படி,இல்ல லோன் வாங்கி தொழில் செய் என்றேன். அவன் கேக்கவே இல்லை,சிபாரிசுக்கு ஆளையெல்லாம் கூட்டி வந்தான். இதுபோல நிறய முகாம்ல நடக்குது. பசங்களுடய மனப்பான்யைபத்தி நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே!!!!!!

Tuesday 25 November 2008

எம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு கிடைத்து M D படிக்க ஒரு டாக்டர், தன்னுடன் படிக்கும் எம்பிபிஸ் முடித்து நீண்ட நாள் ஆகி 40 வயதைத்தாண்டிய சக டாக்டரிடம் வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது

சொல்கிரார்:

என்ன சார் வர வர நடத்துரது ஒன்னுமே புரிய மாட்டேங்குது!

வயதான டாக்டர்: எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...!!!!!

மருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மருத்துவர். இருவரும் தங்களிடம் நீண்ட நாள் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தின் கல்யாணத்திற்கு செல்கின்றனர்.

பெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம்: டாக்டர் அம்மவைத்தெரியுதாம்மா!

இவுங்கதான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க,நீ இவங்ககிட்டதான் பொறந்த!

இதய மருத்துவரைப்பார்த்து: டாக்டரைத்தெரியுதா! உன் தாத்தா அதாண்டி என் மாமனார் நெஞ்சுவலின்னு இவர் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போனோம்

ஒரு ஊசிதான் போட்டார், அதோட முடுஞ்சிருச்சு!!!! ரொம்ப ராசியான டாக்டர்.           

 

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory