Saturday, 21 November 2009

கட்டுப்படுத்த முடியாத சக்கரையா?

100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.

மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.

ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.

உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)

அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?

உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.

ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?

1.உடல் எடை குறையாமல் இருப்போர் 2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர் 3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர் 4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர் 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர் 6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.

எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.

காலை டிபன்-150 கிராம்

மதியம்-250 கிராம் சாதம்,

இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்

மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும். அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

Wednesday, 18 November 2009

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? +18 !!

ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!
 நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் படங்களில் பார்ப்பதுபோல் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க தற்போது விவாகரத்து என்பது இளம் தம்பதியினரிடம் அதிகமாகிவருகிறது. வேலைக்குச் செல்லும் தம்பதியர்களில் இது மிகவும் அதிகம்!

விவாகரத்துக்கு சொல்லப்படும் காரணங்களில் பெண் பெரும்பாலும் வரதட்சிணை கேட்கிறான், அடிக்கிறான் போன்ற காரணங்களைப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

இரண்டுபேருக்கும் மனசு ஒத்துவரலைன்னு சொல்லுவதும் உண்டு.இதையும் மீறி பாலியல் சிக்கல்களும், உளவியல் பிரச்சினைகளும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் மேலோட்டமாக கண்டுபிடித்து திருத்துவது கஷ்டமான வேலை.

சரி, அதையெல்லாம் வல்லுனர்களிடம் விட்டுவிடுவோம். பொதுவா ஏதாவது புதுசா இருக்கா? புதுசுதான் ஆனா பழசு!

அதுதான் மணப் பிரச்சினை! மணப் பிரச்சினைன்னா.... உடல் மணப் பிரச்சினை!! இதென்ன பிரமாதம்ன்னு சொல்றீங்களா? நான் சொல்லலைங்க!! மலேசியா அரசாங்க்கமே சமீபத்தில் சொல்லியிருக்கு.

பொதுவாகவே ஒருவருக்கு தன் உடலின் மணம் அவருக்குத்தெரியாது. பக்கத்தில் இருப்போர் கதிதான் அதோகதி. பக்கத்தில் இருக்கும் நமக்கே இப்படின்னா கணவன் மனைவிக்கு எப்படியிருக்கும்?.

நிறையப் பெண்களுக்கு சினிமாத் தியேட்டருக்குள் சூழ்ந்திருக்கும் சிகரெட் புகை பிடிக்காது. குமட்டும். அந்தத் தொடர் புகைவண்டி ஆசாமியிடம் " அப்பா! வெளியே போய் ஊதிவிட்டு வாப்பான்னா" அவன் நம்மை ஒரு பார்வை பார்த்துட்டு வெளியே போவான். இல்லைன்னா சிகரெட்டை நசுக்குவான்.

இது இப்படின்னா வெளியூர் போகும்போது சில கார் டிரைவர்கள் அவசரத்தில் குளிக்காம வண்டியில் ஏறிவிடுவார்கள். காருக்குள்ளே நம்ம உட்கார முடியாது. இதெல்லாம் நல்லாத்தெரிந்தும் நம்மில் பலர் நம்ம உடல் மணத்தின்மேல் அக்கரை காட்டுவதில்லை.

சில பேர் நான் பவுடரே போடமாட்டேன்னு பெருமையா சொல்லிக் கொள்வார்கள். அதுல என் உடம்பில் கெட்ட மணமே வராதுன்னுவேறு!! தமிழ் நாட்டில் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போடுவதும் இதற்காகத்தான்( இது எல்லாருக்கும் தெரியும்). மலேசியாவில் நடந்த ஆராய்ச்சியில் பத்தில் மூன்று கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுதாம். அதற்குக் கூறப்படும் காரணங்களில் உடல் மணமும் ஒன்று.
பொதுவாக நான் பார்க்கும் புது மணத்தம்பதியினரிடம் பெண்ணிடமோ, ஆணிடமோ நல்ல மணம் இல்லாமல் இருப்பது கண்டால் உடனே  கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுறை கூறிவிடுவேன். ஏனெனில்  பெரும்பான்மையானவர்களுக்கு இது பற்றிய விழிப்புண்ர்வு இருக்காது.

சேர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல துவைத்த சட்டை அணிவதையும், உடலில் சென்ட் போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதையும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.தொள தொள உடைகளைவிட சரியான அளவுள்ள உடைகளே அவர்களுக்குப் பிடிக்குதாம்.

இதெல்லாம் எல்லோரும் செய்யலாம். கடைசியா ஒரு தம்பதியினர் சொன்னதுதான் ஆச்சரியம்!! ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் ரகசியம் என்று கூறியிருக்கிறார்கள். சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வதையே இன்னும் பலர் கடைப் பிடிப்பதில்லை. மனைவி அழகாக இல்லாத பலர் இன்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை. அப்படியிருக்கும்போது சேர்ந்து குளிப்பது என்பது எவ்வாறு சாத்தியம். மிகவும் மனமொத்த தம்பதியினர் மட்டுமே இந்த அளவு அன்னியோன்னியமாக இருக்க முடியும்.
உடல் மணத்தில்  அக்கறை காட்டுதல் மிகவும் நல்லது. இதற்கு வாசனைத்திரவியங்கள் விலை அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம். புரூட் போன்ற டியோடரண்டுகளில் 24 மணிநேரம் உடல் நறுமணம் தரும் ஸ்பிரேக்களை  விற்கின்றன. ஆனால் தற்போது வரும் பாண்ட்ஸ் பவுடரே போதும். குளித்தவுடன் ஏதாவது ஒரு பவுடரை உடலில்  தடவினாலே போதும்.

மக்களே!! எல்லாத்தையும் கடைப்பிடிங்க!! உடல் மணத்தில் தம்பதியினர் கவனம் செலுத்துங்க.
ஜோக் நம் நாட்டுக்கு தம்பதிகள் சேர்ந்து குளிப்பது தேவையா? என்கிறீர்களா? இருக்கிற மக்கள் தொகையில். நம்ம நாடு தாங்குமா?.. !!! ஹி.... ஹி... ஹி..!!!

Tuesday, 17 November 2009

மோசமானவைங்கள்ளேயே முக்கியமானவைங்க!!!

ஏர் இந்தியாவில் ஆப்பிரிக்காவில் இருந்து  வந்திறங்கிய நண்பனையும் அவன் நண்பர்களையும் என் நண்பர்கள் புடைசூழ வரவேற்றேன்.

வாடா மாப்பிள்ளை!! எப்படியிருக்கீங்க எல்லாம்? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.

அதுதான் பார்க்கிறாயே!! எப்படியிருக்காங்க நம்ம தோஸ்துங்கள்ளாம் பார்த்தியா?

அப்போதுதான் அவன் கூட வந்தவர்களைப் பார்த்தேன். எல்லாம் செம கெட்டப்பில் இருந்தார்கள்.  நமக்கு   ஆப்பிரிக்கா நண்பர்கள் அதிகம்!! நிறையப் பேரைத் தெரியும். இருந்தாலும் இவர்கள் போன முறை வந்தவர்கள்தான்.

கொடிய வியாதிகளில் ஆராய்ச்சி மாணவர்களான அவர்கள் இரண்டு குழுவாக இருந்தனர். இரண்டு குழுக்களிலும் நிறையப்பேர்  இளம் வயதினராகவும் நல்ல சக்திவாய்ந்தவர்களும்  இருந்தனர்.

இந்த இடத்தில் நாங்கள் யார் என்று கொஞ்சம்  சொல்லிவிடுகிறேன்.

நாங்கள் ஒன்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல!!! இது மட்டும் இப்போது போதும்.

சரி!! நீங்கள் வந்திறங்கியது அரசாங்கத்துக்குத் தெரியுமா?  பயணம் எப்படி? ஏர் இந்தியா எப்படி? அடுக்குக் கேள்விகள் சரமாகத் தொடுத்தேன். கொஞ்சம் தெரியும். ஆனால் இப்போது இந்தக்குழு வந்திருப்பது தெரியாது என்று நினைக்கிறேன்.

ஏர் இந்தியாவில் மழையினால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி ட்ராவல் ஓகேதாண்டா!!

சரி!! நீ ஏண்டா சோகமா இருக்கே!! ”எங்கேடா இந்தியாக் காரனுக்கு இந்தியாவில் எவன் பயப்படுகிறான். 

சரி வாங்க!! போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பிப்போம்!!

மனித உடலில்  புதுப் புது பிரச்சினைகளை உண்டாக்கும்  என் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன் நான்!!

இவர்கள் தாக்கிய மனிதர்களிடமிருந்து எனக்கும் ரத்தம் கிடைக்கும் அல்லவா!!! ..ஹி   ...ஹி   ..ஹி!!

பின்குறிப்பு:

1.ஏர் இந்தியா- இந்தியக் காற்று!

2.இரண்டு குழுக்கள்- 1.சிக்குன் குன்யா 2. டெங்கு கொசு வைரஸ் குழுக்கள்!!

3.நான் - சாதாக்காய்ச்சல் கொசு!!

சும்மா மொக்கையாக எழுதியது!! சீரியஸா அறிவியல் பூர்வமா சிந்தித்து மணடையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

படிச்சிட்டு சிரிச்சுட்டுப் போங்க!

நகைச்சுவை, மொக்கை 

Sunday, 15 November 2009

பிரேதப்பரிசோதன- நீரில் மூழ்கி இறப்பு!

 

சமீபத்தில் விஜய் டி.வி. "நடந்தது என்ன?" நிகழ்ச்சியில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து போராடும் ஒரு தந்தையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி வந்தது.

கல்யாணாமாகி சென்ற மகள் ஏரியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதை மறுத்தும் போஸ்ட்மார்ட்டம் பற்றி சந்தேகப்பட்டும் பல கேள்விகள், சந்தேகங்கள் அதில் சொல்லப்பட்டன.

தண்ணீரில் மூழ்கி இறந்தால் எப்படி இறப்பு ஏற்படும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. ஆனால் அவசியம்  நாம் இதைப்பற்றித் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் விளக்கங்களெல்லாம் தெரியாவிட்டாலும் சில அடிப்படை விசயங்கள் நமக்குத் தெரிய வேண்டும்.

நாம் அதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 150000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

பொதுவாக தண்ணீரில் மூழ்கிய 4-8 நிமிடத்தில் இறப்பு ஏற்படுகிறது.

பிரேதப்பரிசோதனையில் தண்ணீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கமுடியுமா?

நீரில் மூழ்கி இறந்த உடலில் பல வெளிப்புற உடல் மாற்றங்கள் இருக்கும். உதாரணமாக நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கி இருந்தால் கையில் தோலெல்லம் சுருங்கிக் காணப்படும். இதுபோன்று நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து முக்கியமானவைகளை மட்டும் பார்ப்போம்.

தண்ணீரில் மூழ்கிய உடலில்

1.மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியிருக்கும்.

2.கைகளில் செடி,கல் போன்றவை கெட்டியாகப் பிடித்து கை இறுக்கமாக மூடியிருக்கும்.

3.மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் நுரை காணப்படும்.

4.நுரையீரல் வீங்கி தண்ணீருடன் காணப்படும்.

5.தண்ணீர் இரைப்பை, குடலில் இருக்கும்.

6.ஏரி,குளத்தில் காணப்படும் டையடோம்ஸ் எனப்படும் நுண் தாவரங்கள் நுரையீரல் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும்.

இவற்றை வைத்துத்தான் பிரேதப் பா¢சோதனையில் நீரில் மூழ்கி இறந்ததைக் கண்டுபிடிக்கிறோம். சரி! அதுதான் இதை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்கிறீர்களே!! அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பிரச்சினை உள்ளது.

தண்ணீரில் மூழ்குபவர் வாய்வழியாகத் தண்ணீர், தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உறிஞ்சப்பட்டு நுரையீரல் வீங்கிக்காணப்படும். நுரையீரலில் நுரை,இரத்தத்துடன் அதிக அளவு நீர் இருக்கும்.  தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களிடம் 80%மேல் சொன்னது போல் நுரையீரல் வீக்கம் காணப்படும்.

தண்ணீரில் மூழ்குபவர் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுக்காகப் போராடி இறக்கும்போது மேல்சொன்ன நுரையீரல் மாற்றங்கள் இருக்கும்.

ஆனால் தண்ணீரில் மூழ்குபவர் வேறுவிதங்களிலும் இறக்க வாய்ப்பு உள்ளது

கீழ்க்கண்டவாறு இறப்பவர்களில் மேலே சொன்னதுபோல் நுரையீரல் மாற்றங்கள் இருக்காது.

1.குளிர்ந்த நீர் உடலில் பட்டவுடன் நரம்புகள் தூண்டப்பட்டு ஏற்படும் உடனடி மரணம்.

2.தண்ணீரில் விழுந்தவுடன் மயங்கி இறத்தல்.

3.தண்ணீரில் விழுந்தவுடன் கல், பாறை போன்ற பொருள்மீது தலைமோதி உடன் மரணம்.

ஆகிய மேலே சொல்லப்பட்டவிதத்தில் இருந்தால் பிரேதப் பரிசோதனையில் மாற்றங்களிருக்காது. ஆகையால் ஒருவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தண்ணீரில் விழுவதற்கு முன்பே இறந்தாரா என்று கண்டு பிடிப்பது பிரேதப் பரிசோதனையில் சிரமமாகிறது.

பிரேதப் பரிசோதனை முடிவுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தீவிர விசாரணை மூலமே இத்தகைய இறப்புக்களைக் கண்டுபிடிக்க முடியும்.

தண்ணீரில் மூழ்கி இறப்பதில் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் சாரத்தை  சுருக்கமாக  நான் இங்கு கொடுத்துள்ளேன்.

உங்கள் கேள்விகளைப் பொறுத்து விளக்கங்களைத் தருகிறேன். 

Thursday, 12 November 2009

தெற்கத்திக்கார்!! வடக்கத்திக்கார்!!!

தெற்கத்திக்கார், வடக்கத்திக்கார் - தலைப்பைப் பார்த்தவுடன் சிலருக்குப் புரிந்திருக்கும்!!

பலருக்கு இது என்னவென்றே தெரியாது!! சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்கும்போது எதையும் இயற்கையோடு சாப்பிட்டால் உடல் நலத்துக்குக் கெடுதல் குறைவு என்று.

சப்பாத்தி சாப்பிட்டும் நிறையப்பேர் சக்கரை குறையவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். காரணம் என்ன? தற்போது கோதுமை மாவு யாரும் கோதுமை வாங்கி அரைத்து உண்பது இல்லை. கோதுமை மாவாகவே பாக்கெட்டுகளில் வருகிறது. அதனையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டில் வரும் மாவில் கோதுமை உமியானது நீக்கப்படுகிறது. அதன் தோல்பகுதி நீக்கப்பட்டு வெறும் மாவுப்பகுதி சலிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. இது சலிக்கப்படாமல் வாங்கி அரைக்கும் கோதுமை  மாவைவிட அதிகமாக சக்கரையை உயர்த்தும்!! ஆகையால் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை ரொட்டியே நல்லது.

அதேபோல் கோதுமை தோசை எடை அதிகம். அது சக்கரையைக்கூட்டும். 

கிராமங்களில் பாலிஷ் செய்யப்படாத  நீளமான அரிசியில் சோறு வடிப்பார்கள். அதற்கு வெள்ளைக்கத்தரிக்காயில் குழம்பு வைத்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். அந்த நீளமான அரிசி வகையில் பிரபலமானவையே கார் அரிசி வகைகள். தற்போது நாம் சிறு பொன்னி வகை அரிசி உண்பதால் இந்தக் தெற்கத்தி, வடக்கத்திக்கார் வகைகள் நிறைய பயிரிடப்படுவதில்லை. அப்படிப் பயிரிட்டாலும் அவை கேரளாவுக்கு  நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. நாம் கர்நாடகா, ஆந்திரா பொன்னியை சாப்பிடுகிறோம்.

இந்த சின்ன தீட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டுப் பழகிய நாக்கு கார் அரிசியைச் சாப்பிடுமா? கேரளாக்காரர்களால் முடிகிறது, நம்மால் முடியவில்லை!!

Monday, 9 November 2009

கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

image

உன் கண்களில்

தெறிக்கும் மின்னலில்,

இன்று பெய்யவிருக்கும்

மழைக்கான குறிப்புகள்!

 

சாளரம் தாண்டி அடிக்கும்

கூதல் காற்றில்

வாடையில் கிளர்ந்தெழும்

உன் உடலின்

மணம்!

 

உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!

 

கூரையில் பெய்யும்

மழையின் சத்தத்தில்

நம் இதழ் சுரங்கள்

புணர்ந்து பிறக்கும்,

நமக்கு

மட்டுமேயான

உயிர் ராகம்!!

 

மறைந்தும் நிர்வாணமாயும்

மழையை

வரவேற்கும்

உன் உடல் பூமி.

 

ஓசை வலுத்த

ஒரு கணத்தில்

புதைந்து கிடந்த

ஆழங்களில் பெய்தது

சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை!!!

Saturday, 7 November 2009

அடிக்‌ஷன்! - குறுங்கதை!!

”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ !

”கூப்பிட்டா உடனே வரமாட்டீங்களே!”  மனைவியின் குரலில் கொஞ்சம் காரம் ஏற ஆரம்பித்திருந்தது!!

இதுதான் எச்சரிக்கை மணி!! இனியும் எழுந்து உள்ளே போகாவிட்டால்  அடுத்து ......கடுகு தாளிப்பது போல் பொரிய ஆரம்பித்து விடுவாள்.

ஏற்கெனவே எழுத உட்கார்ந்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிடிபடாத கடுப்பு வேறு ஸ்ரீக்கு!!

சரி ! மனைவியின் அடுத்த குரல் வருவதற்குள் ஹாலுக்குள் நுழைந்தான்.

ஹாலில் டி.வி.ஓடிக்கொண்டிருந்தது!! மூத்த மகன் கார்த்தியும், இளையவன் அன்புவும் “ ஜெட்டிக்ஸ்” ல் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கையில் கரண்டியுடன் கோபாவேசத்துடன்  நிற்கும் மனைவியைப் பார்த்தவுடன் ஸ்ரீக்கே கைகால் லேசாக நடுங்க ஆரம்பித்தது!!

”இப்பப் பாருங்க மணி 8 ஆகுது!! 6 மணிக்கு படிக்கிறேன்னு உட்கார்ந்த ரெண்டு பேரும் இன்னும் படித்து முட்டிக்கலை” டி.வி தான் பார்க்கிறாங்க!!

உங்கப்பா சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க!! நீங்க சொல்லுங்க”

ஹாலில் அப்பா ’சீனா’ ஈசி சேரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் பேப்பருக்குள் மூழ்கிவிட்டார்.

ஸ்ரீக்கு கட்டுரையை முடிக்க முடியாத எரிச்சல் வேறு!

”ஏண்டா! அம்மா சொன்னாக் கேக்க மாட்டிங்களா?” கோபத்துடன் கார்த்தியை ரெண்டு அப்பு அப்பினான. டி.வி.யை அணைத்தான்.

பசங்க ரெண்டு பேரும் பயத்துடன் புத்தகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு படிக்கும் பாவனையில் இருந்தார்கள்.

“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..”  கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’  ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!!

blogapedia

Blog Directory