Tuesday 28 September 2010

டீன் ஸ்டார்-ஜஸ்டின் பீபர் !

image

சென்னையில் பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் கேளுங்கள, அவர்களின் மனதுக்குப் பிடித்த பாடகர்கள் யாரென்று?  ஜஸ்டின் பீபரின் பெயர் கட்டாயம் அதில் இருக்கும்.

ஜஸ்டின் பீபர் என்ற இந்தப் பெயர் ஆங்கிலப் பாடல் உலகில் பிரசித்தம். எனக்கோ உங்களுக்கோ பீபரைத் தெரியவில்லையெனில் நமக்கு வயதாகி விட்டது என்றுதான் அர்த்தம்! ஏனெனில் பீபர் பிறந்ததே கனடாவில் 1994ல் தான்.

தந்தையால் பிறந்தவுடன் கைவிடப்பட்ட தன் அம்மாவுக்கு 18 வயதில் பீபர் பிறந்து விட்டான். தந்தையால் கைவிடப்பட்டாலும் அவனுள் புதைந்திருந்த  வீரியம் அவனைக் கைவிடவில்லை. 12 வயதில் சின்ன இசைப்போட்டியில் கலந்து இரண்டாம் இடம் பெற்ற அவன் வீடியோக்களை அவன் அம்மா மேல்லெட் யூடியூபில் போட்டார். அப்புறமென்ன?

அவன் யூடியூப் வீடியோக்கள் ஸ்கூட்டர் பிரான் என்ற மார்க்கெட்டிங்க் மந்திரவாதியின் பார்வையில்பட 13 வயதில் அட்லாண்டா பறந்தான்.

image

அவன்  பாடிய முதல் பாட்டேOne Time" “ஒரு முறை”  கனடா டாப் 12 ல் வந்துவிட்டது. அதிர்ஷ்ட தேவதை அவசரகதியில் அவனைத் தழுவிக்கொள்ள பீபர் ஆங்கில இசையுலகின் இளவரசனாகிவிட்டான்.

2010ல் அவனுடைய பாடல்கள் உலகெங்கிலும் பெரும் வெற்றியைப் பெற்றன."Baby" பேபி என்ற அவனுடைய ஆல்பம் யூடியூபில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாகியது.

ஸ்டீவ் வொண்டருக்கு அடுத்து மிக இளம் வயதில் புகழின் உச்சியை அடைந்தது ஜஸ்டின்தான்!

புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்களைப்பற்றி பொய்ச்செய்திகள் பரப்பப்படுவது வாடிக்கை! ஜஸ்டினும் அதற்கு விலக்கல்ல!

அடிக்கடி ஜஸ்டின் இறந்துவிட்டதாகப் புரளிகள் கிளப்பிவிடப்பதும் அவற்றில் உண்டு!

 Justin Bieber Died - Biebs is Dead?

Is Justin Bieber dead? Did Fox News report Justin Bieber died?

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பாப் பாடல் உலகில் புகழின் உச்சியில் இருக்கும் ஜஸ்டின் பீபர் கண்டுபிடிக்கப்பட்டது யூடியூபில்தான்.

என்ன இளைஞர்களே! உங்கள் பாடல்களை யூடியூபில் ஏற்றத்தயாராகி விட்டீர்களா?

Saturday 25 September 2010

குழந்தை-தாய்ப்பால்-H1N1!

image

ஆறுமாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?                                                                                                

  • போடுவதில்லை.குழந்தைகளை நோய் தாக்காமல் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். கர்ப்பிணித் தாய்க்கு அளிக்கப்படும் தடுப்பூசியே பிறக்கும் குழந்தைக்குப் போதும். 

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்ட தாய் பாலூட்டலாமா?                                                                                           

  • பாலூட்டலாம். தாய்க்குப் போடும் தடுப்பூசி அவருக்கு வரும் நோயிலிருந்து காப்பதுடன் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கும் தடுப்பாற்றல் கிடைக்கிறது.

தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் பாலூட்டலாமா?

  • தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் தாயின் உடலில் அதற்கான எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கும். தாய்ப்பாலில் அந்த ஆன்டிபாடிகள் மட்டுமே இருக்கும். நோய்க்கிருமி வைரஸ் இருக்காது. ஆகையினால் தாய் நோயுற்றிருந்தாலும் பாலை சுத்தமான முறையில் சேகரித்து பாட்டிலின் மூலம் கொடுக்கலாம்.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து சாப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

  • தாய் நோயால் பாதிக்கப்பட்டால் குழந்தையை அவர் இருமுதல்,தும்முதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலம் நோய் பரவலாம். ஆகையினால் தாயின் பாலை சேகரித்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

  • குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். எந்த நிலையிலும் தாய்ப்பாலைப்போலச் சிறந்த உணவு குழந்தைக்கு வேறெதுவும் இல்லை!.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பன்றிக்காய்ச்சல் சாதாரண சளி வித்தியாசங்கள்!

அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

மேலும் படிக்க!

-----------------------------------------------------------------------------------------------============================================================                                                                                                                                  பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!                                                                                                                   பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.                                                                                          மேலும் படிக்க!                                                                                      

------------------------------------------------------------------------------------------------------------------------

Friday 24 September 2010

பன்றிக்காய்ச்சலிலிருந்து குழந்தைகளைக் காக்க!

Sleeve sneeze poster clip_image002

குழந்தைகளைப் பன்றிக்காய்ச்சலிலிருந்து காக்க என்ன செய்யலாம்? சில எளிய சுகாதார விசயங்க்ளை அவர்கள் கடைப்பிடித்தால் போதும்.

குழந்தைகளை அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவச் சொல்லவும்

  • விளையாடி விட்டு வரும் போது,
  • வெளியிலிருந்து வரும்போது,
  • கடைகளுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது
  • அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும்போது
  • எஸ்கலேட்டர், லிஃப்ட் ஆகியவற்றில் அதிகம் கிருமிகள் இருக்கும். அதில் உள்ள கைப்பிடிகள், கதவுகளில் நம் கை படும்போது நிச்சயம் கிருமிகள் நம் கையில் தொற்றும்.
  • ஆட்கள் கூடும் இடத்தில் யாரும் தும்மினாலோ, இருமினாலோ நம் குழந்தையின் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ளவும்.
  • குழந்தைகள் அவர்கள் தும்மும் போது  திசுத்தாள்  ( TISSUE PAPER ) இல்லையெனில் கைகளில் தும்மாமல் முழங்கைப்பகுதியில் தும்மவோ இருமவோ செய்யலாம்.
  • உங்கள் பகுதியில் பன்றிக்காய்ச்சல் முன்னரே பலருக்கு இருந்தால் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்ல வேண்டாம்.
  • உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், விடுதியில் குழந்தைகளுக்குத் தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகியிடம் பேசி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்.
  • உங்கள் பகுதியில்  இந்த வியாதி பரவுதல் பற்றி செய்திகளைத் தொடர்ந்து படித்து விழிப்புணர்வுடன் இருக்கவும்.
  • உங்கள் குழந்தைக்கு இந்த வியாதி பற்றி விளக்கமாகச் சொல்லவும். அதைத் தடுப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர்களுக்குப் புரிய வைக்கவும்.
  • கைகளால் மூக்கு,வாய்,கண் ஆகிய பகுதிகளை அடிக்கடி தொடக்கூடாது..
  • குழந்தைகளுக்குத் தனியாகத் துடைக்கும் துண்டு, சோப் ஆகியவற்றை வைக்கவும்.  
  • நல்ல சத்தான உணவு மிகவும் அவசியம்.
  • குழவ்தைகஃள் தவறாது உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

குழந்தைகளின் கைகளைக் கழுவ சோப்பு இல்லாவிட்டால் கைகழுவும் திரவம் வாங்கி பையில் வைத்திருக்கவும். அடிக்கடி அத்திரவத்தால் குழந்தைகளின் கைகளைத் துடைத்து விடவும்.

Thursday 23 September 2010

முட்டை உண்பவர் அறிய வேண்டியவை-5

முட்டை நம் உணவில் முக்கியமானது. கறி,மீன் விரும்பி உண்ணாதவர்கள் கூட முட்டையை விரும்பிச் சாப்பிடுவார்கள்!

முட்டையிலிருந்து கோழி வந்ததா? இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதெல்லாம் விஞஞானிகளின் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேலை. நமக்கு அது வேண்டாம்

கோழியால் பறவைக்காய்ச்சல் வந்தது! அது போல் முட்டையால் வியாதி எதுவும் வருமா? வரும்! அதைப் பற்றிக்கொஞ்சம் பார்ப்போம்.

நம் ஊரில் முட்டை வாங்கினால் கோழி முட்டையின் மேல் கோழியின் கழிவு அப்படியே ஒட்டியிருக்கும், பார்த்திருப்பீர்கள். நோயுள்ள கோழியின் கழிவில் உள்ள கிருமி  சரியாகக் கழுவாமல்  முட்டையை உடைப்பதால் முட்டைக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உடையாத முட்டையிலிருந்தும் நோய் பரவுமாம்.

  1. கோழிமுட்டையிலிருந்து நோய் எப்படிப் பரவுகிறது?                                                                                           அ. உடைந்த கோழி முட்டை மூலம், உடையாத முட்டையில் சிறு துவாரங்கள் உள்ளன- அவற்றின்மூலம் கிருமி உள்ளே சென்றிருந்தால்,  நோயுள்ள கோழியின் வயிற்றில் முட்டை உருவாகும் போதே!   
  2. நோய்க்கிருமியின் பெயர் என்ன?                                                                                                   சால்மனெல்லா  (Salmonella Enteritidis )
  3. சால்மனெல்லா நோயுள்ள கோழிமுட்டையால் என்ன விளைவுகள் ஏற்படும்?                                                                                             உண்ட 12-72 மணி நேரத்தில்  காய்ச்சல், வாந்தி,அடிக்கடி மலம் போதல், வயிற்று வலி ஏற்படும். 4 லிருந்து 7 நாட்களுக்கு இந்த வியாதி இருக்கும். சாதாரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்க்குப் போதும்.
  4. இந்த நோய் வராமல் காத்துக்கொள்வது எப்படி?                                                                                                   முட்டையை குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கவும். உடைந்த முட்டையை உண்ண வேண்டாம். முட்டையை நன்கு வேக வைத்துச் சாப்பிடவும். 2 மணி நேரத்துக்கு மேல் முட்டையை குளிர்பெட்டியிலிருந்து அறையில் வெளியில் வைக்க வேண்டாம்.  பச்சை முட்டை சாப்பிட வேண்டாம்.  
  5. சால்மனெல்லாவால் யார் யாருக்கு ஆபத்து?            குடலை முதலில் இது பாதிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் கலந்தால் ஆபத்து. குழந்தைகள், வயதானவர்கள், கல்லீரல் வியாதி உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இது கடுமையாக பாதிக்கும்.

____________________________________________________________

************************************************************************************************

  ஜிடாக்கில் ஒரு அசைவ சாட் !http://abidheva.blogspot.com/2010/08/blog-post_04.html

புதிய நண்பர் பிரதாப் ஜிடாக்கில் வந்தார். ம்துரை ஓட்டல் முட்டை வடியல் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் முட்டையின் பல்வேறு வகைகளைச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் படித்துப்பாருங்கள்! உங்க ஊர் முட்டையைப் பற்றிச் சொல்லுங்க!

Prathap: //இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள்//

சில இடங்களில் வழியல் என்பார்கள்

சென்னையில் ஒரு கடையில் ”டிங்டாங்” என்றார்கள்...

என்னடா என வாங்கிப்பார்த்தால் இது...

thevan: முட்டைதானே! எனக்கு சரியாகத்தெரியவில்லை

. மேலும் படிக்க!!

*************************************************************************************************

____________________________________________________________

Tuesday 21 September 2010

தசைநார்த் தேய்வு(Muscular Dystrophy)

        தசைநார்த் தேய்வு என்பது ஒரு மரபியல் நோயாகும். தசைநார்த்தேய்வு நோய் நரம்புகளைத் தாக்காமல் குறிப்பிட்ட தசைகளை மட்டும் படிப்படியாக செயலிழக்கச் செய்யும்.

  • தசை தொடர்ந்து பலமிழத்தல்
  • தசைப் புரதக் குறைபாடுகள்
  • தசைச் செல்கள் அழிவு – ஆகிய மூன்று முக்கிய குறைபாடுகள் இந்நோயில் காணப்படுகின்றன.

ஏறக்குறைய 30 வகைகள் இவற்றில் இருந்தாலும் இவை ஒன்பது முக்கிய வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன

Duchenne MD-டுஷென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி- டுஷன் தசை நார்த்தேய்வு இதில் முக்கியமானது.

Duchenne de Boulogne- டுஷென்-

1806-1875 – பிரென்சு நரம்பியல் நிபுணர்-

 clip_image002

நவீன நரம்பியல் மருத்துவ முன்னோடியான இவர் இந்நோய்

பற்றி முதலில் ஆராய்ந்து கூறினார். டுஷென் த.தே. தாயின் மரபணுவிலிருந்து ஆண் குழந்தைக்கு வருகிறது. ஆனால் தாய்க்கு இந்த வியாதியின் அறிகுறிகள் இருப்பதில்லை.

நோயின் அறிகுறிகள்:

  • தசைகள் வலுவிழப்பு விரைவில் சோர்வடைதல்
  • ஓடுதல், குதித்தல்,படிகளை ஏறுதலில் சிரமம்.
  • உடலை சம நிலைப்படுத்தி நிற்கவோ நடக்கவோ இயலாமை.
  • இந்த நோயில் தசைகள் சிறுத்துப் போதல் பலமிழந்து போதல் உடலில் இருபுறமும் சமமாக இருக்கும்.
  • இந்த நோய் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. 2-5 வயதில் இதன் அறிகுறிகள் தோன்றும் தசைகள் சிறுத்து, பலமிழந்து இருப்பதால் இவர்களால் நடக்க இயலாமல் விரைவில் சக்கர நாற்காலி உபயோகிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
  • டுஷென் த.தே. ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.
  • இதயம் நுரையீரலும் பாதிப்படைகிறது.
  • முதுகெலும்பு வளைந்து போவது (SCOLIOSIS) ம் ஏற்படுகிறது.
  • இதனால் மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் சுவாசக் கருவிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது.

பரிசோதனைகள்:

  1. எலக்ட்ரோமயோகிராபி பரிசோதனைகள்
  2. இரத்தத்தில் கிரியேட்டினின் கைனேஸ் அதிகமாக இருத்தல்.
  3. ஜீன் பரிசோதனைகள்.

ஆகியவற்றைக் கொண்டு இந்த நோயைக் கண்டறியலாம்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தியாவில் அதிக அளவில் (கால் மில்லியன்) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.

டிஸ்கி:    ஆக்சிலெரான் மருந்துக் கம்பெனி Acceleron Pharma  ACE-031 என்ற புதிய மருந்தை இந்த தசைனார்த்தேய்வு நோயாளிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. : இது ஆய்வு நிலையிலுள்ள மருந்து. தசை வளர்ச்சிக்கும், தசை வலிமைக்கும் உதவும் என்று நம்பப்படுகிறது.விலங்குகளில் இது தசை வளர்ச்சியை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது இரண்டாம் கட்ட ஆய்வில் உள்ளது.

Saturday 18 September 2010

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

நோய்க்குறிகள்

சாதாரண சளி பன்றிக்காய்ச்சல் 
.
காய்ச்சல் காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். 
.
இருமல் இருமலும் நல்ல சளியும் இருக்கும். சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். 
.
உடல் வலி உடல் வலி மிதமாக இருக்கும். கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். 
.
மூக்கடைப்பு மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். 
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம் குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. 
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வு உடல் சோர்வு குறைவாக இருக்கும். 
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல் தும்மல் சாதாரணமாகக் காணப்படும். 
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம். சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். 
.
தலைவலி சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். 
.
நெஞ்சில் பாரம்,வலி சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.
     

பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!

மேலும் பன்றிக்காய்ச்சல்பற்றி அறிய கீழுள்ள என் இடுகைகளைப் படிக்கவும்!

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !

Monday 13 September 2010

இவர் ஆசிரியர்!

image

தலைமை ஆசிரியர் திரு.கருப்பையா- இவர் புதுக்கோட்டை அருகில் நெடுவாசல் என்ற கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

இவரின் சாதனைகள் ஆச்சரியம் தருபவை! ஆம்! பாழடைந்த பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டியிருக்கிறார்.  பள்ளியில் செடிகளை வளர்த்து தோட்டம் அமைத்திருக்கிறார்.

இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா? 

பள்ளியில் கரும்பலகைகளை அகற்றிவிட்டு ப்ரொஜெட்க்டர்கள் வாங்கி பாடமே அதில்தான் நடத்தப்படுகிறது.

அது தவிர பத்து கணினிகள் இணைய இணைப்புடன் இயங்க்குகின்றன. டி.வி.டியில் பாட சி.டிக்கள் போட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். கணினியை இயக்குதல், பிரிண்ட் எடுத்தல் எல்லாம் மாணவர்கள் அவர்களே செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் இவர் பொறுப்பேற்ற 5 வருடங்களில் செய்திருக்கிறார்.

இதெல்லாம் செய்த இவர் தற்போது அதே மாவட்டத்தில் வேறு ஒரு பள்ளிக்கு மாறுதல் கேட்கிறார். ஏன்? அறிவொளி நகர் என்ற அந்த இடத்தில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

அங்குள்ள நரிக்குறவ இன மக்களின் பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைத்து, கல்வியின் பலனை அவர்களும் அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்பது இவரின் அடுத்த இலக்கு என்கிறார்!!

தனிமரம் தோப்பாகாது, நான் ஒருவன் நல்லது செய்தால் உலகமே மாறி விடுமா? என்று தத்துவம் பேசும் நம்மிடையே இவர் ஒரு சாதனையாளராக ஜொலிக்கிறார்.

இவர் போன்ற நல்லோர்கள் சிறந்த மாணவர்களை  உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கம்பியூட்டருக்கென தனியாக பணம் வாங்கிவிட்டு கம்பியூட்டர் பற்றி மேம்போக்காகப் பாடம் எடுத்து விட்டு ஏமாற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையில் அரசுப்பள்ளி மாணவர்களை கம்பியூட்டர் வல்லுனர்களாக உருவாக்கும் இவர் நிச்சயம் போற்றத்தகுந்தவர்தானே!

Saturday 11 September 2010

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.

2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

  • திடீர்க் காய்ச்சல்,
  • தலைவலி,
  • தசைவலி,
  • மூட்டுவலி,
  • கண் பகுதியில் வலி 
  • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
  • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
  • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
  • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?

  • அதிக காய்ச்சல்
  • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு

4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

  • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.

5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?

  • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
  • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை

6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?

  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்

Saturday 4 September 2010

தட்டம்மை(MEASLES)

தட்டம்மையும் வைரஸ் கிருமியால் வரும் தொற்று நோய்தான்.

தொற்றுவழிகள்:

  • தும்முதல்,இருமுதலால் எச்சில் தெரிக்கப்படுவதால்.
  • ஒரே வீட்டில் வசிப்போருக்கு
  • நேரடித் தொடர்பின் மூலம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளோருக்கு மிக எளிதில் பரவுகிறது.

நோய்காப்புக்காலம்:(INCUBATION PERIOD):

  • 6-19  நாட்கள்

நோய்க்குறிகள்:

  • நான்கு நாள் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல்,
  • கண் சிவத்தல், கண் கூசுதல்,
  • கொப்ளிக் புள்ளிகள்- வாயின் உட்புறம் சிறு  புள்ளிகள்.
  • கொப்ளிக் புள்ளிகளை வைத்து நாம் தட்டம்மை நோயை அறியலாம்.
  • அதன் பின் சிவந்த தடிப்புகள் ( RASHES ) முதலில் காதின் பின்புறமும் நெற்றியிலும் தோன்றும்.
  • அதன் பின் உடல் முழுவதிலும் புள்ளிகள் பரவும்.
  • இததடிப்புகள் மறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சல் குறைந்துவிடும்.

நோயின் பின் விளைவுகள் என்ன?

  • வயிற்றுப்போக்கு
  • நிமோனியாக் காய்ச்சல் (நுரையீரல் அழற்சி)
  • மூளைக் காய்ச்சல் (ENCEPHALITIS)
  • கண் கருவிழி பாதிப்பு (CORNEAL ULCER)

பொதுவாக பின் விளைவுகள் வயது வந்தோருக்கு இந்நோய் தாக்கும்போது அதிகம் காணப்படுகிறது.

தடுப்பூசி

  • MMR (MUMPS, MEASLES, RUBELLA) என்ற முத்தடுப்பூசியாக இது போடப்படுகிறது.
  • ஒன்றரை வயதில் முதல் முத்தடுப்பூசி போடப்படுகிறது.
  • இரண்டாவது ஊசி நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்காக நான்கிலிருந்து ஐந்து வயதுக்குள் போடப்படுகிறது.

இது மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆயினும் 1000 ல் 1 அல்லது 2 பேர் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday 1 September 2010

சின்னம்மை சில கேள்விகளும் விடைகளும்!

இதற்கு முந்தைய பதிவில் சின்னம்மை பற்றிய சில முக்கிய தகவல்களை எழுதி இருந்தேன். அதுபற்றி இன்னும் சிறிது விளக்கம் கேட்டிருந்தனர். குழந்தைகள் சம்பந்தமானது என்பதால் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது உபயோகமாக இருக்கும் என்பதாலேயே இதனை எழுதுகிறேன்.

என் முந்தைய பதிவு சின்னம்மை(CHICKEN POX)-5 

நான் என் குழ‌ந்தைக்கு ஒரு வ‌ய‌து இருக்கும் போது சின்ன‌ம்மைக்கான‌ த‌டுப்பூசி போட்டிருக்கிறேன். இது எவ்வ‌ள‌வு தூர‌ம் இந்த‌ நோயை அல்லது அத‌ன் க‌டுமையைத் த‌விர்க்கும் என்று விள‌க்க‌ முடியுமா?

பொதுவாக ஒரு வயது இருக்கும்போது போடுவது வழக்கமானதுதான்.

இந்தத் தடுப்பூசி எத்தனை வருடம் நோயிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கும் என்று இதுவரை அறுதியிட்டுச் சொல்லவில்லை. ஆனால் 10 வருடங்கள் வரை அதன் வீரியம் இருக்கும் என்றும் அதன் பிறகு அதன் தடுப்பாற்றல் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சக குழந்தைகளுக்கு வரும் சின்னம்மை நோயானது வீட்டிலுள்ளோர், மற்றும்  தொடர்பில் உள்ளோருக்கு எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுவதால் அதன் பின் தடுப்பூசி தேவைப்படுவதில்லை.

இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றால் ஒரு வயதிலிருந்து  12 வயதுவரை உள்ளோருக்கு ஒரு முறை தடுப்பூசியும், அதற்கு மேல்பட்ட வயதினருக்கு இரண்டு முறை அதாவது ஆறு முதல் பத்து வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

யாருக்கு இந்த ஊசி போடக்கூடாது?

  • அதிக காய்ச்சல்
  • கர்ப்பிணிகள்
  • புற்று நோய் சிகிச்சை பெறுவோர்
  • ஏமக்குறை நோய் (AIDS) உள்ளோர்
  • இரத்தம் ஏற்றப்பட்டோருக்கு மூன்று மாதம் வரை.

உலகம் முழுவதும் இத்தடுப்பூசி போடுகிறார்களா?

  • ஜப்பானில் போடப்படுகிறது.
  • அமெரிக்காவிலும் போடப்படுகிறது.
  • ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகப் போடப்படுவதில்லை.
  • ஆஸ்திரேலியா,கனடாவில் பெருமளவில் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
  • பொதுவாக உலகெங்கும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

இதன் நோய் தடுக்கும் திறன் எவ்வளவு?

  • நோயின் கொடிய விளைவுகளிலிருந்து 95% பாதுகாப்புத்தருகிறது.
  • 70-90 சதவிகிதம் நோய் வராமல் தடுக்கிறது.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory