Monday 30 April 2012

டெங்கு காய்ச்சல்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.
1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?
டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.
2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
  • திடீர்க் காய்ச்சல்,
  • தலைவலி,
  • தசைவலி,
  • மூட்டுவலி,
  • கண் பகுதியில் வலி 
  • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
  • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
  • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
  • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்
3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?
  • அதிக காய்ச்சல்
  • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு
4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?
  • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.
5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?
  • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
  • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை
6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?
  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்

Monday 9 April 2012

பன்றிக்காய்ச்சல் தெரிந்துகொள்ள வேண்டியவை!

 
பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் தினசரிகளில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பன்றிக்காய்ச்சல் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்வது மிக அவசியம்.
பன்றிக்காய்ச்சல் எப்படிப்பரவுகிறது? அதிலிருந்து நம்மையும் நம் குழந்தைகள், உறவினர்களைக் காத்துக்கொள்வது எப்படி என்று இந்தப்பதிவில் பார்ப்போம்.

1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2. எப்படிப் பரவுகிறது?
சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.
         1.இருமல்
         2.தும்மல்
         3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல்         கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.

3.இதன் அறிகுறிகள் என்ன?
  காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.
சிகருக்கு வாந்தி,பேதி வரலாம்.  

4.நோயின் வீரியம் ?
நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.
கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்
அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.
ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.
இ.கர்ப்பிணிகள்
ஈ.நீரிழிவு நோயாளிகள்
உ.இதய நோயாளிகள்
ஊ.ஆஸ்துமா
எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

5.நோய் பரவும் காலம்?
நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.
6.காத்துக்கொள்வது எப்படி?
அ. மூக்கு வாய் பகுதையை  இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .
ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.
இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள். 
ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.
உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும்   வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.
ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள்  கழுவவும்.

7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:
அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்
ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.
இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.
உ.அதிக வாந்தி
ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது
எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.
ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.

8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:
அ. மூச்சுவிடச்சிரமம்.
ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்
இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்
ஈ.நிற்காத வாந்தி
உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்

9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?
தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.

10.இந்த கிருமி எப்போது அழியும்?
75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.
மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.

11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?
சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.

12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?
குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.

13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?
சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.

14.முடிவாக சில குறிப்புகள்
1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.
2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.
3.தண்ணீர் நிறைய அருந்தவும்.
4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.
5.மது அருந்தவேண்டாம்.
6.உடற்பயிற்சி செய்யவும்.
7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்.

தேவன் மாயம்.

Thursday 5 April 2012

மறுபடியும் பன்றிக்காய்ச்சல்!


பன்றிக்காய்ச்சல் சென்னையில் மறுபடியும் பரவுவதாகச் செய்திகள்  வருகின்றன. மேலும் பரிசோதனையிலும் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் பன்றிக்காயச்சல். வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களால்தான் பரவுகிறது என்று சொல்கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாயமாக மருத்துவமனைகளில் பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 11 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளனர் மேலும். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆகையினால் இம்முறை அதிக பயம் தேவையில்லை என்றாலும் பன்றிக்காய்ச்சல் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
பன்றிக்காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை கீழே தொகுத்துள்ளேன். பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் ஒவ்வொருமுறை தாக்கும்போதும் நோய் அறிகுறிகள், நோயின் வீரியம் ஆகியவை 100% ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
நோய்க்குறிகள்
சாதாரண சளி
பன்றிக்காய்ச்சல்
.
காய்ச்சல்
காய்ச்சல் பெரும்பாலும் குறைவு.
80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
.
இருமல்
இருமலும் நல்ல சளியும் இருக்கும்.
சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.
.
உடல் வலி
உடல் வலி மிதமாக இருக்கும்.
கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
.
மூக்கடைப்பு
மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம்
குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வு
உடல் சோர்வு குறைவாக இருக்கும்.
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல்
தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம்.
சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும்.
இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
.
தலைவலி
சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது.
பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
.
நெஞ்சில் பாரம்,வலி
சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது.
பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.



பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள சில வித்தியாசங்கள்தான் இவை!
நோய் வரும் முன் நோய் பற்றி அறிதல் நல்லதுதானே!!
தமிழ்த்துளி தேவன்மாயம்.
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory