நேற்றிரவு
தொலைந்து போனவனைக்
கண்டேன்!!
தன் கூரிய
விருட்ச விரல்களால்
இரவைக் கிழித்துக்
கொண்டிருந்தான்.
கீழே நிழலாகக்
கிடந்த உடலகளினின்றும்
பீரிட்ட குருதி
அவன் கண்களூடாய்
வழிந்து கொண்டிருந்தது!
அவற்றின் அடங்காத
ஓலம்
வீங்கிப்போன அவன்
செவிப்பறைகளில்
அதிர்ந்து கொண்டிருந்தது.
புகையாய்க் கிளம்பிய
நர வீச்சம் தாளாமல்
அவன் நாசித்துவாரங்கள்
சிதறிக்கிடந்தன.
தன் முகம் காணச் சகியாது
உடலினின்றும்
தன் தலையைப்
பிய்த்தெடுத்தான்.
கைகளில் வழிந்த முகம்
என் முகத்தை
ஒத்திருக்க,
கிழிந்து கிடந்த
இரவின் ஊடாய்
அவனும் நானும்
மெதுவாகக் கரைந்து போனோம்.
30 comments:
ஆஆஆஆஆஆஆஆ !!!!
//புகையாய்க் கிளம்பிய நர வீச்சம் தாளாமல் அவன் நாசித்துவாரங்கள் சிதறிக்கிடந்தன//
டாக்டர்... பின்னிட்டீங்க... நல்லாயிருக்குங்க...
தொலைந்த இடம் கனவுங்களா..:-))
கவிதை அருமை தோழா....
கலக்கிட்டீங்க அண்ணா...
சார் எல்லாருக்கும் புரிந்திருக்கு எனக்கு புரியலையே?
Chitra said...
ஆஆஆஆஆஆஆஆ !!!!///
புரிந்ததா!!!
Nundhaa said...
nice//
நன்றி நுந்தா!!
க.பாலாசி said...
//புகையாய்க் கிளம்பிய நர வீச்சம் தாளாமல் அவன் நாசித்துவாரங்கள் சிதறிக்கிடந்தன//
டாக்டர்... பின்னிட்டீங்க... நல்லாயிருக்குங்க...
தொலைந்த இடம் கனவுங்களா..:-))///
நன்றி பாலாசி!!
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
கவிதை அருமை தோழா....///
நன்றி உலவு!!
அகல்விளக்கு said...
கலக்கிட்டீங்க அண்ணா...//
நன்றி விளக்கு!!
தமிழரசி said...
சார் எல்லாருக்கும் புரிந்திருக்கு எனக்கு புரியலையே?///
மீண்டும் படிங்க தமிழ்!!
// கைகளில் வழிந்த முகம்
என் முகத்தை
ஒத்திருக்க,
கிழிந்து கிடந்த
இரவின் ஊடாய்
அவனும் நானும்
மெதுவாகக் கரைந்து போனோம்.//
ஒரு நல்ல கவிஞர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அருமையாக வடித்துள்ளீர்கள்.
SASee said...
// கைகளில் வழிந்த முகம்
என் முகத்தை
ஒத்திருக்க,
கிழிந்து கிடந்த
இரவின் ஊடாய்
அவனும் நானும்
மெதுவாகக் கரைந்து போனோம்.//
ஒரு நல்ல கவிஞர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அருமையாக வடித்துள்ளீர்கள்.
//
வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி!!
அருமையா ஆனா பயமா இருக்கு.
ஆத்தாடி!!!!
டெரர்ராவுல இருக்கு.
:))
தம்பி நேசன் சொல்லுவார்... கவிதை எழுதும் வரைத்தான் அது படைப்பாளியின் கவலை... பின்னர் வாசகனின் எண்ணங்கள், புரிதலுக்கு எல்லையில்லை என்று..
அது இங்கு நிரூபிக்கப் பட்டு இருக்கின்றது.
கவிதை அழகா இருக்கு சார்
நான் ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டு இருக்கேன்.. சரியா தெரியலை
அமைதிச்சாரல் said...
அருமையா ஆனா பயமா இருக்கு.///
மிக்க நன்றி சாரல்!!
சைவகொத்துப்பரோட்டா said...
ஆத்தாடி!!!!
டெரர்ராவுல இருக்கு//
வாழ்க்கை இதைவிடட் டெரர்தானே!
mythees said...
:))///
நன்றி!
----------------------------
Blogger இராகவன் நைஜிரியா said...
தம்பி நேசன் சொல்லுவார்... கவிதை எழுதும் வரைத்தான் அது படைப்பாளியின் கவலை... பின்னர் வாசகனின் எண்ணங்கள், புரிதலுக்கு எல்லையில்லை என்று..
அது இங்கு நிரூபிக்கப் பட்டு இருக்கின்றது.
///
இதைப் படிக்கப் படிக்க புரியும்!!!
"உழவன்" "Uzhavan" said...
கவிதை அழகா இருக்கு சார்///
நன்றி உழவன்!!
பிரசன்னா said...
நான் ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டு இருக்கேன்.. சரியா தெரியலை//
நீங்கள் என்ன நினைத்தீர்களோ அது சரிதான்!
மிரட்டல் கவிதை,புத்தகம் ரிலீஸ் கன்பிர்ம்.
எனக்குப் புரியலையே
ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ் யப்பா !!!!!!!!!!!
ஆத்தாடி ராத்திரில வேற படிச்சுப்புட்டனே... ஒத்தையில போக பயமா இருக்கப்போது சார்... :-)
சார் ...கவிதை நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் குழப்பமா இருக்கு
ஏன் டாக்டர் இப்படி பயங்கரக் கனவு எல்லாம் வருகுது? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கோ? ha ha haa
Post a Comment