Wednesday 28 March 2012

நீர்ச்சிறை!


இடமும் வலமுமாய்
கழிகிறதென்
செவ்வக வாழ்க்கை!

தனிமைச்சிறையில்
எப்போதும் இரைக்கான
எனது
காத்திருப்புகள்!

பசியையும்
அன்பையும்
சொல்லமுடியாததென்
நீர்ச்சிறையில்,

கழிகிறதென் காலம்
கண்ணாடி மீனாய்!

(வீட்டில் கண்ணாடித் தொட்டியில் விடப்பட்டிருந்த ஒற்றை அரோனா வாஸ்து மீனைப் பார்த்தபோது எழுதியது!!!)

10 comments:

priyamudanprabu said...

welcome back..:)

தேவன் மாயம் said...

Thank you Prabhu!

ராமலக்ஷ்மி said...

அருமை டாக்டர்.

வாஸ்து மீனுக்கு நன்றி, மீண்டும் எழுத வைத்ததற்கு:)!

சாய் ராம் said...

மீனைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருந்தால் இந்தக் கவிதை இன்னும் அதிக அர்த்தங்களை வாரி வழங்கி இருக்கும். உதாரணம் - 'தனிமை சிறையில் இரைக்கான காத்திருப்பு'

ஹேமா said...

வணக்கம் டாக்டர்.ரொம்பக் காலத்துக்கப்புறம்.சுகம்தானே !

உணர்வு மிகுந்த கவிதை.அருமை !

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி said...

அருமை டாக்டர்.

வாஸ்து மீனுக்கு நன்றி, மீண்டும் எழுத வைத்ததற்கு:)!//

மிக்க நன்றிங்க என் கவிதை படித்ததற்கும் கருத்துக்கும்!

தேவன் மாயம் said...

சாய் ராம் said...

மீனைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருந்தால் இந்தக் கவிதை இன்னும் அதிக அர்த்தங்களை வாரி வழங்கி இருக்கும். உதாரணம் - 'தனிமை சிறையில் இரைக்கான காத்திருப்பு'//

உண்மைதான் நண்பரே!

தேவன் மாயம் said...

ஹேமா said...

வணக்கம் டாக்டர்.ரொம்பக் காலத்துக்கப்புறம்.சுகம்தானே !

உணர்வு மிகுந்த கவிதை.அருமை !//
உணர்வு மிக்க கவிஞருக்கு நான் நலமே!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை அருமை..
கவிதை மிக நன்றாகவுள்ளது மருத்துவரே..

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அருமையாயிருக்கு..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory