Thursday 11 February 2010

வீட்டில் ஜாலி!

விடுமுறை நாள் அது!
இன்னைக்காவது சண்டையில்லாமல் அதிகம் வாய் கொடுக்காமல்(மனைவியிடம்!!)அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்!

விடுமுறைன்னா நிறையப் பேருக்கு ஜாலியாக இருக்கும். நமக்கு அப்படி இல்லீங்க! வீட்டில் பெரிய சண்டைகள் வெடிக்கும் நாளே அதுதான் ( அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்!!)

கொஞ்சம் களைப்பாக இருப்பது போல் தோன்றியதால் சரி படுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். தலையணை கொஞ்சம் அழுக்காக இருப்பது போல் தெரிந்தது. “என்ன தலையணையெல்லாம் அழுக்காக இருப்பதுபோல் தெரியுதே” என்றேன்.

ஹாலில் இருந்த என் மனைவி ”இப்பத்தானே துவைக்கப்போட்டேன். அதுக்குள்ளே அழுக்காகிவிட்டதா? போடுகிற சட்டையைத்தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அழுக்காக்கிக் கொண்டு வருகிறீர்கள், அதைத் தொவைக்கவே வேலைக்காரி கோவப்படுறா, இதுல தலைகாணி உறையெல்லம் அடிக்கடி துவைக்கப்போட்டா சொல்லாமலேயே வேலையை விட்டு நின்று விடுவாள்.”
“போடுற சட்டை பேண்டுதான் அழுக்காகுதுன்னா தலையுமா அழுக்கா ஆகும் ? ஒழுங்காகக் குளித்தால்தானே?”
(அய்யா!! அம்மா!! நீங்களே சொல்லுங்க, தலைகாணி அழுக்காயிருக்கேன்னு ஒரு வார்த்தைதான் கேட்டேன், அதுக்கு இவ்வளவு அர்ச்சனையா?” சரி விடுங்க! எனக்கு நாக்குல சனி!!!)
அதுக்கு மேல் பேசினால் ஆபத்து என்று தெரியாதா என்ன? தூங்குவது போல் ஆக்டிங்க் கொடுத்தேன். அப்படியே தூங்கியும் விட்டேன்.

மறுநாள் மதியம் கண்ணயரலாமே என்று படுக்கையில் சாய்ந்தேன். அட! தலையணை உறையைக் காணோம்!!
”ஏம்மா! தலைகாணி உறை ஒன்னு குடு படுக்கணும்” என்றேன்.
தலைகாணி மேல் துண்டை விரிச்சுப்படுங்க- என்று பதில் வந்தது.
”ஒரு உறையாவது குடும்மா!” என்றேன்.

”நீங்கதானே அழுக்கா இருக்குன்னு சொன்னீங்க, அதுதான் எல்லாத் தலைகாணி உறையையும் துவைக்கப் போட்டுவிட்டேன் – சும்மா துண்டை தலைகணி மேலே போட்டுக்கிட்டுத்தூங்குங்க!!தலைகாணி உறை காய்ஞ்ச உடனே எடுத்துத் தருகிறேன்!”

”அட! துவைக்கப்போடும்போது பாதியை இன்றைக்குத் துவைத்துவிட்டு பின்னொருநாள் மிச்சத்தைத் துவைக்கலாம் இல்ல! என்றேன்” கோபத்தை அடக்கிக் கொண்டு.

”ஆமா! வேலைக்காரி தலைகாணி உறை துவைக்கிறதே பெரிய விசயம், இதுல பாதி மிச்சம் வச்சா மீதி என்னைக்கித் துவைப்பாளோ? உங்களுக்கு என்ன தெரியும் என் கஷ்டம்! படுத்துக்கிட்டே ஒன்னொன்னாக் கேப்பீங்க, நான் கொண்டாந்து தரணும்!! நீங்க ஆடுற ஆட்டத்துக்கு நான் ஆடுவேன்! வேலைக்காரி ஆடுவாளா?” --- பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!

இரண்டு நாள் கழித்து காலை:
சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டு ஹாலுக்கு வந்தேன். ஷூவை எடுத்து பிரஷால் தூசி தட்டினேன். மகனும் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

”அவனுக்கு ஸ்கூல் பஸ் வந்து விடும், உங்களுக்கு என்ன அவசரம்? அவன் ஷூவுக்கு கொஞ்சம் பாலீஷ் போடுங்க!! அவன் கருப்பு ஷூவைப் பாருங்க, கழுதைக் கலரில் இருக்கு! ஏண்டா? ஸ்கூலுக்குப் போறியா? இல்லை மாடு கீடு மேய்ச்சிட்டு வற்றியாடா? ” சுனாமி வேகத்தில் ஹாலுக்குள் பிரவேசித்தாள் என் மனைவி!

சரி! வாயை மூடிக்கொண்டு அவன் ஷுவுக்குப் பாலீஷ் போட்டேன்“அம்மா சாக்ஸ் எங்கேம்மா? என்றான் என் மகன்.

”வேலைக்கார அம்மாதான் நேத்து துவைக்கக் கொண்டு போனாங்க, நான் பார்க்கல. நீ தேடிப்பார் , எல்லாத்தையும் நான்தான் எடுத்துத் தரணுமா? துவைத்த துணியில் பார் என்றவுடன் அறைக்குள் ஓடி சாக்ஸுடன் வந்தான்.

இந்தாப்பா உன் சாக்ஸ் ( என்னிடம் நாலைந்து சாக்ஸுகள் இருந்தன!!) என்று ஒற்றை சாக்ஸாக நான்கு ஒற்றை சாக்ஸுக்களைத் தந்தான்.
ஏதாவது ஒரு கலரில் ஜோடியாக மாட்டுமா என்று பார்த்தேன். ஊகூம்! ஒன்றும் தேறவில்லை!

”என்ன இது எல்லாம் ஒத்தை சாக்ஸா இருக்கு” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன்.
”அட! என்ன இது! ஆமா!! பாதி சாக்ஸைத் துவைக்கச் சொன்னேன், வெலைக்காரி இப்படித் துவைத்து விட்டாளா?”

”நீங்கதானே பாதியை முதலில் துவைக்கச்சொல்லுன்னு சொன்னீங்க, அவ வந்தவுடன் நீங்களே கேளுங்க” சொல்லி விட்டு என் மனைவி கடகடவென்று தாங்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
அப்பா உன் புளூ கலர் சாக்ஸ் என்னுதோட மேட்சா இருக்கு குடு நான் போட்டுக்கிட்டுப் போறேன் என்று என்னுடைய ஒற்றை நீல சாக்ஸையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என் மகன்!!!

51 comments:

Rajan said...

ஜாலியானோ ஜிம்கானா !

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று!

Thamiz Priyan said...

நீங்க ரொம்ப சென்சிபிள் ஆளா இருக்கீங்க.. என்னை மாதிரி.. I Like it... ;-))

butterfly Surya said...

இதுக்கு தான் லீவு நாள்ல வீட்டிலேயே தங்க கூடாது.. ஜீட்..

தேவன் மாயம் said...

கண்ணகி --- நன்றி!!!

ராஜன் -----------இப்படி நிறைய ஜாலி இருக்குங்க!!

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நன்று!
///

நன்றிங்க!!

தேவன் மாயம் said...

தமிழ் பிரியன் said...
நீங்க ரொம்ப சென்சிபிள் ஆளா இருக்கீங்க.. என்னை மாதிரி.. I Like it... ;-))//

அடடா!!

தேவன் மாயம் said...

butterfly Surya said...
இதுக்கு தான் லீவு நாள்ல வீட்டிலேயே தங்க கூடாது.. ஜீட்.//

நல்ல யோசனை!!

Vidhoosh said...

ஏன் பட்டறை, புத்தக பரசுராமனு ஏதும் போறதில்லையா... திருமதியையும் அழைத்து போங்க... :)

தேவன் மாயம் said...

Vidhoosh said...
ஏன் பட்டறை, புத்தக பரசுராமனு ஏதும் போறதில்லையா... திருமதியையும் அழைத்து போங்க... :)///

இனிமேல்தான் புத்தகக் கண்காட்சி வரப்போகுது!!

மாதேவி said...

"வீட்டீல் ஜாலி" மீண்டும் வருமா? :)

தேவன் மாயம் said...

மாதேவி said...
"வீட்டீல் ஜாலி" மீண்டும் வருமா? :)
///

இது சும்மா!!! மிச்சமெல்லாம் முழுக்க ஜாலிதானே!!

Unknown said...

எங்க வீட்டிலும் சில நாட்களில் இப்படி தான் நடக்கும்.. ஜாலியாக தான் இருக்கும்...

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த பாதி சாக்ஸ், கிச்சு கிச்சு.

அகல்விளக்கு said...

செம ஜாலி போல.....

கேட்க சந்தோஷமாக இருக்கிறது...

(துன்பம் வேளையில சிரிங்க....)

பட் நீங்க ரொம்ப ரசிக்கிறீங்க....

:-)

நட்புடன் ஜமால் said...

4 நாள் லீவ்

இப்பொழுது முதல்

இங்கே மேட்டர் துவங்கிடிச்சி ...

தேவன் மாயம் said...

சிநேகிதி said...
எங்க வீட்டிலும் சில நாட்களில் இப்படி தான் நடக்கும்.. ஜாலியாக தான் இருக்கும்///

உண்மைதான்!! இது உரிமை!!

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...
அந்த பாதி சாக்ஸ், கிச்சு கிச்சு.//

சிரிச்சீங்களா!!!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
செம ஜாலி போல.....

கேட்க சந்தோஷமாக இருக்கிறது...

(துன்பம் வேளையில சிரிங்க....)

பட் நீங்க ரொம்ப ரசிக்கிறீங்க....

:-)//

இதெல்லாம் அனுபவித்து சிரிக்கவும், ரசிக்கவும்தான்...இதுதானே வாழ்க்கை!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
4 நாள் லீவ்

இப்பொழுது முதல்

இங்கே மேட்டர் துவங்கிடிச்சி ..//

ஓ!! ஆரம்பமா!! பதிவு போடுங்க!! உதவிக்கரம் நீட்டுவோம்!!

நட்புடன் ஜமால் said...

சரி விடுங்க! எனக்கு நாக்குல சனி!!!

நாக்குல வெள்ளி(இன்று வெள்ளி தானே)

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
சரி விடுங்க! எனக்கு நாக்குல சனி!!!

நாக்குல வெள்ளி(இன்று வெள்ளி தானே)
///
சமாளிங்க!!! இதுதானே ஆரம்பம்!!

நட்புடன் ஜமால் said...

பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!
]]

நெம்ப உசார் தான் நீங்க(ளும்)

எங்க தான் கத்துகுறோமோ போங்கோ

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!
]]

நெம்ப உசார் தான் நீங்க(ளும்)

எங்க தான் கத்துகுறோமோ போங்கோ
//

மீன் குட்டிகளுக்கு நீச்சல் கத்துத்தரணுமா என்ன?

நட்புடன் ஜமால் said...

சூப்பர் சூப்பர் தேவ்ஸ்

இப்படி எதுனா சிரிப்பா போட்டா

சிறப்பா இருக்கும்

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
சூப்பர் சூப்பர் தேவ்ஸ்

இப்படி எதுனா சிரிப்பா போட்டா

சிறப்பா இருக்கும்
//

போடுவோம் ஜமால்!! லீவு சந்தோசமாகக் கழிய வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

//அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்!//

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை :-)))))

மணிஜி said...

ஒரு ஊசியை போட்ற வேண்டியதுதானே!

தேவன் மாயம் said...

அமைதிச்சாரல் said...
//அமைதியாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்!//

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை :-)))))

உங்கள் கோவில் பதிவு அருமை!!

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
ஒரு ஊசியை போட்ற வேண்டியதுதானே!

//

ஹி! ஹி! ஹி!!!

சாந்தி மாரியப்பன் said...

இங்கேயும் நன்றியை சொல்லிக்கிறேன்.

அன்புடன் அருணா said...

ஹாஹாஹாஹா கலக்கல்ஸ்!

CS. Mohan Kumar said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.. ம்ம்.. என்ஜாய்

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மேடம் கொடுத்து வச்சவங்க அவ்ளோ பெரிய பாக்யசாலியா அவங்க.....எல்லாத்துக்கும் கொடுத்து வைக்கணும்.......

Rajan said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மேடம் கொடுத்து வச்சவங்க அவ்ளோ பெரிய பாக்யசாலியா அவங்க.....எல்லாத்துக்கும் கொடுத்து வைக்கணும்....... //


என்னங்க மேடம் இழுவை ஜாஸ்தியா இருக்கே !

Sridhar R said...

நல்ல எழுத்து நடை என்ஜாய் பண்ணுங்கோ

Menaga Sathia said...

போங்க மருத்துவரே சிரிச்சு சிரித்து வயிறு வலிக்குது....

pudugaithendral said...

வெரிகுட் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
:))))))))))))))

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))))))))))))))

Dr kalakkal -:)))

கண்மணி/kanmani said...

வீட்டுக்கு வீடு வாசப் படி:))))

நிலாமதி said...

எல்லோருடைய வீடிலும் தாங்க உங்க அம்மிணி கொஞ்சம்....ஜாஸ்தி. .

suvaiyaana suvai said...

interesting comedy!!

ஹேமா said...

நாலு நாள் லீவுன்ன அந்த நாலு சொக்ஸும் எப்போ தோய்ப்பாங்க.
அதுவரைக்கும் தொடருமா ஜாலி !

ம்ம்ம்...வீட்டுக்கு வீடுதான்.

அப்துல்மாலிக் said...

அட எல்லா குட்டையும் ஒன்னுதானா?

ரசிச்சேன், கடைசிலே உள்ள ட்விஸ்டையும் சேர்த்து

SUFFIX said...

வித்யாசமான Pillow Fight ஆவுல இருக்கு :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உண்மையைத் தானே எழுதினீர்கள் டாக்டர். நல்ல சுவாரசியமாக இருக்கிறது. தொடர் மாதிரி எழுதுங்கள். உங்கள் மனைவி என் டைப்.

அம்பிகா said...

\\அப்பா உன் புளூ கலர் சாக்ஸ் என்னுதோட மேட்சா இருக்கு குடு நான் போட்டுக்கிட்டுப் போறேன் என்று என்னுடைய ஒற்றை நீல சாக்ஸையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என் மகன்!!\\

இது ஜாலி தான்.

அன்பரசன் said...

உங்க நிலமையை நினைச்சா பரிதாபமா இருக்கு

Chitra said...

//////நீங்க ஆடுற ஆட்டத்துக்கு நான் ஆடுவேன்! வேலைக்காரி ஆடுவாளா?” --- பேச்சின் வேகம் அதிகரிப்பது கண்டு உசாராகி அமைதியானேன்!///////


........ha,ha,ha,ha......

Jerry Eshananda said...

இப்படி பிரச்சின வரும்னு தான் நானெல்லாம் சாக்ஸ்சே துவைக்குறது இல்ல.

Unknown said...

தமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory