Tuesday 23 February 2010

கொஞ்சம் தேநீர்- பொய்மையும்!

யாருமறியா ஆழங்களில்

வித விதமாய்ப் பொய்கள்,

 

சிறு பிரம்மனாய்,

அவற்றை ஒன்றிணைத்து

ஒப்பனைகளுடன் சுட்டெடுக்கிறேன்

அன்றன்றைய

என்னை!!!

 

உண்மையின்

கசப்பினை விட

அவை இனிமையானவை,

 

வக்கிரம் மறைத்து

உலாவரும் என்

பிம்பங்களுடனேயே

நீங்கள் கலந்து மகிழ்ந்தீர்கள்!

 

அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட

பிரதிகள்

அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென

எவருக்கும் போதுமானதாய்

இருந்தன,

 

அனைவருக்கும் பிடித்திருக்கிறது,

பொய்களால் ஆன

என்னை!!!

34 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வாவ், அட்டகாசம், அருமை மருத்துவரே.

தேவன் மாயம் said...

இடுகையை மறுபடியும் திருத்தி பிரசுரித்ததில் நண்பர் விதூஷின் கமெண்ட் டெலீட் ஆகிவிட்டது!! மன்னிக்கவும்!!

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...
வாவ், அட்டகாசம், அருமை மருத்துவரே.

///

நன்றி
நண்பரே!!

க.பாலாசி said...

அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...

க.பாலாசி said...

தமிழ்மணத்துல இணைக்கவில்லையா?

தேவன் மாயம் said...

தமிழ்மணத்துல இணைக்கவில்லையா///


தவறைத் திருத்தி பதிவிடும்போது பழைய இடுகை அழிந்துவிட்டது..

Ramesh said...

அருமை கலக்கல்.....தமிழ்மணத்தில் இணையுங்கோ

அன்புடன் நான் said...

கவிதையின் இறுதி வரிகள் மிக நேர்த்தி... பாராட்டுக்கள்... மருத்துவரே.

Vidhoosh said...

போனால் போகட்டும்.. மறுபடியும்...

///வாஹ்... தாஜ்....// :)

Radhakrishnan said...

என் நண்பி ஒருவர் எழுதிய வேடதாரி எனும் கவிதையினை போன்ற கரு. பொய்கள் எனத் தெரிந்து இருப்பதே உண்மைதான் மருத்துவரே. கவிதை அழகு.

Anonymous said...

class.............sir..

நட்புடன் ஜமால் said...

பொய்களால் ஆன “என்னை”

அருமையான உண்மை.

ஹேமா said...

டாக்டர் அசத்தல் பொய்யான கவிதை.
ஊசி போடறமாதிரியே இருக்கு !

மாதேவி said...

"அனைவருக்கும் பிடித்திருக்கிறது"
ம்.. ம்..ம்

ரோஸ்விக் said...

//அனைவருக்கும் பிடித்திருக்கிறது,

பொய்களால் ஆன

என்னை!!!//

இது தான் உண்மை. :-)

அருமை டாக்டர்... அருமை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கலக்குறீங்க.

Jerry Eshananda said...

தேவா,கொஞ்சம் தேநீர் புத்தகம் ரிலீஸ் எப்போ?

Jerry Eshananda said...

கவிதை உண்மையாய் இருக்கிறது தேவா,வார்த்தைகளில் ஆழம் தெரிகிறது.

தேவன் மாயம் said...

றமேஸ்-Ramesh said...
அருமை கலக்கல்.....தமிழ்மணத்தில் இணையுங்கோ

இணைக்கப் பெரும்பாடாகிவிட்டது!!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...
கவிதையின் இறுதி வரிகள் மிக நேர்த்தி... பாராட்டுக்கள்... மருத்துவரே.///

கவிதை அதில்தானே உள்ளது!! மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

V.Radhakrishnan said...
என் நண்பி ஒருவர் எழுதிய வேடதாரி எனும் கவிதையினை போன்ற கரு. பொய்கள் எனத் தெரிந்து இருப்பதே உண்மைதான் மருத்துவரே. கவிதை அழகு.//

பலர் தொட்டதைத்தான்...நாமும் தொடவேண்டியுள்ளது... மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
class.............sir..

///
நன்றி தமிழ்!!!
-------------------------------


நட்புடன் ஜமால் said...
பொய்களால் ஆன “என்னை”

அருமையான உண்மை.

///
ஜமால் !! பொய்கள் உண்மைதானே!!

தேவன் மாயம் said...

ஹேமா said...
டாக்டர் அசத்தல் பொய்யான கவிதை.
ஊசி போடறமாதிரியே இருக்கு !

///

சுருக்கென்று தைக்கிறதா?

தேவன் மாயம் said...

மாதேவி said...
"அனைவருக்கும் பிடித்திருக்கிறது"
ம்.. ம்..ம்

//

உங்களுக்கு???

தேவன் மாயம் said...

ரோஸ்விக் said...
//அனைவருக்கும் பிடித்திருக்கிறது,

பொய்களால் ஆன

என்னை!!!//

இது தான் உண்மை. :-)

அருமை டாக்டர்... அருமை.

//

ரோஸ்விக்!! நன்றி!!

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...
கலக்குறீங்க.

//

வாங்க ஸ்ரீ!

-------------------------------


ஜெரி ஈசானந்தா. said...
தேவா,கொஞ்சம் தேநீர் புத்தகம் ரிலீஸ் எப்போ?///

ஜெரி! ஐடியாவே இல்லை!!

---------------------------------




ஜெரி ஈசானந்தா. said...

கவிதை உண்மையாய் இருக்கிறது தேவா,வார்த்தைகளில் ஆழம் தெரிகிறது.
///

ஜெரி மிக்க நன்றி!!!

------------------------------

Chitra said...

அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட

பிரதிகள்

அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென

எவருக்கும் போதுமானதாய்

இருந்தன,



.........உண்மை. பொய்களில் ஒளிந்து இருந்திருக்கும் உண்மை. :-)

தேவன் மாயம் said...

Chitra said...
அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட

பிரதிகள்

அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென

எவருக்கும் போதுமானதாய்

இருந்தன,



.........உண்மை. பொய்களில் ஒளிந்து இருந்திருக்கும் உண்மை. :-)
///

ஆகா! கண்டுபிடித்துவிட்டீர்களே!!!

பழமைபேசி said...

//க.பாலாசி said...
அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...
//

மருத்துவக் கவிஞர்!

vidivelli said...

மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

தேவன் மாயம் said...

பழமைபேசி said...
//க.பாலாசி said...
அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...
//

மருத்துவக் கவிஞர்!

///

அதெல்லாம் ஒன்றுமில்லை...சும்மா.

தேவன் மாயம் said...

vidivelli said...
மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
///

நன்றி விடிவெள்ளி!!

சிவாஜி சங்கர் said...

அட அருமையா இருக்குங்க.... வாழ்த்துக்கள்..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

வாழ்வின் நிஜம் சொல்லும் கவிதை.!! ”சிறு பிரம்மனாய்..” நல்ல கற்பனை. பொய்களை கோர்த்து கட்டிய மாலைதான் பெரும்பாலும் விலை போகிறது..!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory