Monday 18 January 2010

என் இரவுகள்!!

 

சூரியன் மறைந்ததும்

உருக்கொண்டது எனக்கான உலகம்.

பிரும்ம ராட்சதனின் கைகள் போல்

நீளும் அதன்

விரல்களில்

வித விதமான புனைவுகள்.

ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு

உருக்கொள்ளும் அதன் வசீகரத்தில்

பயம் அகன்ற குதூகலம்!

 

பள்ளியிலும், விளையாட்டினுள்ளும்

ஒளிந்திருந்தது,

என் அடுத்த இரவுக்கான

காத்திருத்தல்.

 

இரவுகளின் கருவெளிகளில்

சொல்லப்பட கதைகளின்

பூக்களையும், மலைகளையும்

நதிகளையும் சேகரித்து

ஒரு நந்தவனமாக்கினேன்!!

 

காலச்சரிவுகளில் எல்லாம்

மாறிப்போனாலும்

இன்னும் இரவுகளில்

விரல் பிடித்து

நுழைந்து விடுகிறேன்

எனக்கேயான அவ்வுலகில்!!

28 comments:

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.

அகல்விளக்கு said...

வாவ்..........

கவிதை ரொம்ப அழகா இருக்கு அண்ணா...

Unknown said...

நெஜமாவே கவித ரொம்ப நல்ல இருக்கு...

pudugaithendral said...

அளவான வார்த்தைகள்

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் தேவா

நட்புடன் ஜமால் said...

தலைப்பே ஒரு பி.நவீ தான்

அருமை தேவா


[[சொல்லப்பட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்]]

மாதேவி said...

[[சொல்லப்பட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்]]

இந்த வரிகள் எனக்கும் பிடித்தது.அழகான கவிதை.

தேவன் மாயம் said...

நன்றி சூர்யா,

அகல்விளக்கு,

பேனாமூடி,

புதுகை,


ஜமால்-- பின் நவீனத்துவமா? நீங்க சொன்னா சரிதான்!!

தேவன் மாயம் said...

மாதேவி நன்றிங்க!!

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை மிகவும் நன்றாகவுள்ளது மருத்துவரே..

Jerry Eshananda said...

முழு நேர கவிஞரே,பகுதி நேர மருத்துவரே வணக்கம்.

தேவன் மாயம் said...

நன்றி குணசீலன் !!

ஜெரி ! இது உங்களுக்கே ஓவராத்தெரியல!! ஹி! ஹி!!

Unknown said...

கவிதை மிகவும் அருமை

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு இரவுகளும் வாழ்ழ்கையை திரும்பிப்பார்க்க வைக்குது தேவா உங்க கவிதை

சைவகொத்துப்பரோட்டா said...

//இன்னும் இரவுகளில்

விரல் பிடித்து

நுழைந்து விடுகிறேன்

எனக்கேயான அவ்வுலகில்!!//



கவிதை... கவிதை.... அழகு.

Sinthu said...

உங்களால மட்டும் எப்பிடி அண்ணா........?
அழகான அருமையான பொருள் புதைந்த வரிகளோ?

sarvan said...

அருமை

காற்றில் எந்தன் கீதம் said...

//சொல்லப்பட்ட கதைகளின் பூக்களையும், மலைகளையும் நதிகளையும் சேகரித்து ஒரு நந்தவனமாக்கினேன்//
வசீகர வரிகள் அருமையான கவிதை டாக்டர்

சிங்கக்குட்டி said...

ரொம்ப அழகான கவிதைக்கு பாராட்டுக்கள் தேவா :-)

ஹேமா said...

கவிதை அருமை டாக்டர்.உங்கள் தொழிலுக்கு இப்படி ஒரு ரிலாக்ஸ் உலகம் கண்டிப்பாய்த் தேவை தேவா.

தேவன் மாயம் said...

Mrs.Faizakader - நன்றிங்க!!

சைவகொத்துப்பரோட்டா,-மிக்க நன்றி!,


அபு- ஒவ்வொரு இரவும் என்னை நினைத்துக்கொள்ளவும்!!


சிந்து- பாராட்டுக்கு நன்றிம்மா!!

சர்வன் - வருகைக்கு நன்றி!,

தேவன் மாயம் said...

காற்றில் கீதம்- வருகைக்கு நன்றி.


சிங்கக்குட்டி- தமிழ்மணம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

ஹேமா-கவிதாயினியே வருக.

"உழவன்" "Uzhavan" said...

//
பிரும்ம ராட்சதனின் கைகள் போல
நீளும் அதன
விரல்களில
வித விதமான புனைவுகள்//
 
:-)

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு.

Radhakrishnan said...

அழகான கவிதை, மிகவும் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் டாக்டர்

நல்லாயிருக்கு....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதையும் நீங்கள் உருவாக்கிய நந்தவனமும் அழகு. இனியென்ன ? அந்த நந்தவனத்தில் உலாவுவது தானே பாக்கி?

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை தேவா சார்..:-)))

அண்ணாமலையான் said...

அசத்தறீங்க.. தொடரட்டும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory