Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Saturday, 27 June 2009

பதிவுலக மன்மதன்கள்!( +18)

அன்பின் வலைமக்களே!!

பதிவுலகில் இவ்வளவு நாள் இருக்கிறோம். நண்பர்கள் கூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது போல் அவர்களுடைய பல சொந்தக்கதைகளையும் கேட்க நேரிடுகிறது. அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நான் கார்த்திகை பாண்டியின் தங்கை திருமணத்தில் கண்ட மன்மதன்கள் பற்றி இங்கு சொல்கிறேன். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணத்துக்குத் தயாராக உள்ளவர்கள். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!!இஃகி!இஃகி!!

கார்த்திகைபாண்டியன் தங்கை வீடியோ முதல் பாகம் பார்க்காதவர்கள் கீழே சுட்டியை தட்டிப் பார்க்கவும்!!

அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)

 

இந்தக் காணொளியை யூடியூபில் பார்க்க சுட்டிhttp://www.youtube.com/watch?v=SPkq8Q75KTw

1.Anbu Mathy

image

 

அன்பு என்ற அன்புமதி!!இவர்தான் மிக இளையவர். நல்ல குணம் முகத்திலேயே தெரியும். குசும்பு கொஞ்சம் உண்டு. சிரித்த முகத்துடன் இருக்கும் இவரை நீங்கள் வீடியோவில் காணுங்கள்..(அடிக்கடி போன் வருவதும் தனியாகப்போய் பேசுவதுமாக இருக்கிறார்!!..............பார்ப்போம்!!)

---------------------------------------------------------------------

2.ஆதவாகுழந்தை ஓவியம்!!

வயது:20

ஆதவா அருமையான இளைஞர்!! அமைதி! அமைதி! அமைதி!! ஆதவா என்றால் அமைதி.

கவிதைகளுக்குப் புகழ்பெற்ற இவர் திருப்பூரில் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறார்.

இவரைக் கைப்பிடிக்கும் பெண் அதிர்ஷ்டசாலிதான்.

வீடியோவில் இவரை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!

-------------------------------------------------------------------------

3.ஸ்ரீதர் http://sridharrangaraj.blogspot.com/

 

ஸ்ரீதர்

இவர்தான் ஸ்ரீதர். திருமணத்துக்கு தயாராக உள்ளவர். பார்த்தாலே மயக்கும் தோற்றம் கொண்டவர்.

கார்த்திக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்! ஜாதக ஸ்பெசலிஸ்ட்!

இவர் ஜாதகம் யார் கையிலோ?( சமையலும் தெரியுமாங்கோ!!)

-------------------------------------------------------------------

4.பாலகுமார்

பாலகுமார் சோலைஅழகுபுரம் 

என்ற தளத்தில் எழுதுகிறார்..

பாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார்.  வயது 24 இருக்குமா? தோற்றம் அவ்வளவுதான்.

நல்ல தெளிவான பேச்சு. தெளிவான சிந்தனை! 

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!என்ற இவருடைய பதிவைப் பாருங்கள்!!

இந்த வார கல்கி இதழில் இவருடைய கவிதை வந்துள்ளது.

இவரும் கால்கட்டுக்கு தயாராக உள்ளவர்!!

----------------------------------------------------------------------

5.கார்த்திகை பாண்டியன் -- சொல்லவே வேண்டாம். கல்யாண வீடியோவில் பாருங்க!! மாப்பிள்ளையும் ரெடியாக இருக்கிறார். பொண்ணு இருந்தா சொல்லுங்க. தங்கை திருமணம் முடிந்ததால் ரூட் கிளியர்!!

நம் மன்மதன்களை தொடர்ந்து செய்திகளை அவ்வப்போது தருகிறேன்!!

தமிழ்த்துளி தேவா..

-----------------------------------------------------------------

ஆதவாவுக்கு இன்று

பிறந்தநாளாம் !!! இப்போதான் தெரிந்தது!!!

வாழ்த்துவோம் நல்ல வளமான எதிகாலம் அமைய!!

--------------------------------------------------------------------

Thursday, 21 May 2009

பதிவர் சந்திப்பு மதுரை!!

அன்பு வலை மக்களே!

நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!

திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..

இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

cheena (சீனா) ஐயா..

வால்பையன்.............

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

கார்த்திகை பாண்டியன் 

தேவா ஆகிய நான்!

முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!

போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...

தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

தேவா @ தேவன்மாயம்- 97512 99554..

ஓட்டைக்குத்துங்க!!

சிறு மாற்றம்:

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, 13 May 2009

பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??

அன்பு நண்பர்களே!!!


நண்பர் ”மெல்போர்ன் கமல்” ஆஸ்திரேலியாவிலிருந்து திருச்சி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்!!

பதிவர் சந்திப்பும் நிகழ்ந்தது! ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நண்பர் “மெல்போர்ன் கமலுக்கு(மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு இன்று திருமண ரிஷப்சன்!!


மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!!
இல்லறம் என்னும் நல்லறம் காணும்
இனிய பதிவர் மெல்போர்ன் கமலே!!

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
மலர்களெல்லாம் நாட்களெனில்
பொன்மலராய் சில நாட்கள்..
சில நாளில் ஒருநாள் இன்று
ஆம்!!
உலகமெல்லாம் உனைவந்து
உளமுவந்து வாழ்த்திடவே-----
ஊன் தந்த பெற்றோரின்
உயர் உள்ளம் போற்றிடவே

உனைச் சார்ந்த எல்லோரின்
உளமெல்லாம் நிறைந்திடவே

ஒளி வீசும் எதிர்காலம்
உனக்கெனவே உணர்த்திடவே!!

இல்லாளோடு இணைந்து
இன்பத்தில் திளைத்திடவே

பொன்மலராய்ப் பூத்திட்ட
திருமணநாளாம் இன்னாளில்

உளம் கனிந்து வாழ்துகிறோம்!!
வாழிய பல்லாண்டு!!


நீங்களும் கமலுக்கு திருமண வாழ்த்துக்களைச் சொல்லலாமே!!

திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்து இறங்கி இப்பதிவினை இடுகிறேன்!!
விபரமான பதிவு நாளை !!!


Saturday, 2 May 2009

இந்த பதிவர் எழுதுவதெல்லாம் குப்பை !!!

எவ்வளவுதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும் நமக்குத்தெரியாத நிறைய விசயங்கள் இருக்குங்க. நாம் நிறைய எழுதுகிறோம். அதில் பாதி குப்பைதான்!! அப்படியெல்லாம் இல்லை என்கிறீரா? என்னைப்பொறுத்தவரை நான் எழுதுவதில் பாதி குப்பைதான்!!

சரி!! எழுதவந்த மேட்டரைப்பார்ப்போம்!!

உலகின் முக்கிய பிரச்சினைகளில் குப்பையினால் ஏற்படும் தீமைகளை எப்படி  தடுப்பது என்பதும் ஒன்று... குப்பையால் நிறைய பிரச்சினைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். குப்பையில் பொதுவாக மக்கும் குப்பை,மட்காத குப்பைன்னு இரண்டுவிதமா பிரிக்கிறாங்க. இரண்டையும் வேறுவேறு விதமாக நாம் சேகரித்து சுத்திகரிப்பு செய்கிறோம்.

குப்பையைப்பத்தி தெரியாத சில கருத்துக்களைப் பார்ப்போம்

1 கடலில் சேர்ந்துள்ள குப்பையின் அளவைக்கேட்டால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்! ஆம். 100 மில்லியன் டன் அளவு பிளாஸ்டிக் குப்பைகள் உலகின் கடல்பரப்பில் தேங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!!

2. இமயமலையைப் பார்ப்போம்! பனிபடர்ந்து அழகாகக் காட்சியளிக்கும் இமயமலை குப்பைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமய மலை ஏறும் மிகக்கடினமான பாதையெல்லாம் மலையேறுபவர்கள் சாப்பிட்டுப்போட்ட குப்பைகள்,கழிவுகள், தீர்ந்துபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றால் மாசுபட்டு உள்ளது. 29000 அடிக்குமேல் போனால் அங்கும் இங்கும் இறந்த மனித உடல்கள் காணப்படுமாம்!! இறந்த உடல்களை பனிப்பாறைகளிலிருந்து மீட்பது மிகக்கடினம் என்பதால் நிறைய உடல்கள் அங்கேயே விட்டு விடுவது வழக்கமாம்!

3.குப்பைகள் சாதாரணமாக எவ்வளவு நாட்களில் மண்ணோடு சேர்ந்து விசத்தன்மை இழக்கும்? கண்ணாடி பாட்டில்கள் --- 1 மில்லியன் வருடங்கள்.

ப்ளாஸ்டிக் கப்---500 வருடங்கள்

அலுமினிய டப்பா----200-500 வருடங்கள்

ப்ளாஸ்டிக் பைகள்---20 வருடங்கள்

சிகரெட் மிச்சம்--5 வருடங்கள்!!

4.குப்பைகளை நம் துப்புறவுப்பணியாளர்கள் ஊருக்கு வெளியில் சேமிப்பார்கள்!! அல்லது பெரிய அகலமான குழிகளைத்தோண்டி சேமிப்பார்கள். இதன் பக்கத்தில் வசிப்பது ஆபத்து! ஏனெனில் இதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியாகுதாம். இவை பக்கத்தில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றையும் மாசுபடுத்தும். இவற்றில் பல வாயுக்கள் புற்றுநோய் உருவாக்கும் என்று சொல்கிறார்கள்!!!

மக்களே வீடு, இடம் வாங்கும் போது கவனித்து வாங்கவும்!!

5.மேலே சொன்ன பிரச்சினைகளுக்கு விடிவு இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கு!!

டாக்டர்.லூயிஸ் என்பவர் ஒரு வழி கண்டு பிடித்துள்ளார்.  மின்னூட்டப்பட்ட ப்ளாஸ்மா காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது( பள்ளியில் படித்தமாதிரி இருக்கா?) சூரியனின் வெளிப்பகுதியை விட அதிகமான சூட்டை உருவாக்குமாம்?? இந்த வகை ப்ளாஸ்மா உலையில் குப்பைகளை எரித்தால் உருவாகும் வாயு பிற வாயுக்களைப்போல அதிகம் கேடு விளைவிக்காது. எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!

என்ன நண்பர்களே!! நாமும் அதிகம் குப்பை சேர்க்காமல் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்!!

தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டுப்போடுங்கள்!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory