Monday 8 December 2008

ரத்தமும் நண்பனும்

மகப்பேறு பிரிவு!!ராஜா மிராசுதார் மருத்துவமனை!!
பொதுவா ஆண் பயிற்சி மருத்துவர்களுக்கு மகப்பேறு
பிரிவு என்றால் ஜாலியா இருக்கும். ஏன்னா நான் நீன்னு
சான்சுக்கு பெண் மருத்துவர்களிடையே போட்டியிருப்பதால்
நாங்க ஸ்கூட் அடிக்க தோதா இருக்கும்!!!!ஒரு நாள்
இரவு 10 மணி இருக்கும்...ஒரு இளம் பெண் வயது
20தான் இருக்கும்,மாட்டு வண்டில கூட்டிட்டு வந்தாங்க.
முதல் குழந்தை பிரசவத்துக்கு! பெண்மருத்துவர் பார்த்தார்.
வயிரு இரண்டாக இரண்டு பக்கமும் சரிந்தார்ப்போல்
இருந்தது.
    பிரசவத்துக்கு கிராமத்தில் அனுபவமில்லா நர்ஸிடம்
ரொம்ப நேரம் செலவாகியிருந்த்தது.குழந்தை பெரிதாக‌
இருந்ததால் கர்ப்பப்பை சற்றே பிள்விபட்டு குழந்தை
கர்ப்பப்பையை விட்டு வயிற்றுக்குள் வர ஆரம்பித்து
விட்டது.இதனால வயிற்றுக்குள்ளேயே ரத்தம் நிறய‌
வெளியாகி அந்தப்பெண் மயக்கம் ஆகியிருந்தாள்.
நாடி குறைந்து கொண்டே இருந்தது...அந்தப்பெண் 
ஆபத்தான கட்டத்தில் இருந்தாள்.
    உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்!
இல்லாவிட்டால் பெண் உயிரைக்காப்பதே சிரமம்.
கூட வந்தவர்கள் கிராமத்து ஆட்கள் ஒரே சத்தம்.
உடனே ஆபரேசன் பண்ணி உயிரைக்காப்பாத்துன்னு
ரகளை.ரத்த பிரிவை சோதனை செய்து பார்த்தால்
ஒரு அரிய வகை ரத்தம்.ரத்த வங்கியில் இரண்டு
பாட்டில் இருந்தது.அதையும் போட்டாச்சு.பற்றவில்லை.
ஆபரேசனுக்கு மேலும் ரத்தம் தேவை.
    கூட வந்த சொந்தக்காரங்களைக் கூப்பிட்டு
ரத்தம் வேணும். டெஸ்ட் பண்ணுவம் வாங்க. 
ரத்தம் சேந்திச்சின்னா எடுப்போம்ன்னேன். கூட்டம்
மெதுவா கலைஞ்சி ஒருதனக்கூட காணோம்.
    பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்
பாக்கி.ரத்தம்ன்னவுடனே எல்லோரும் ஒடிட்டானுங்க.
அந்தப்பொண்ணு அப்பாவைக்கூப்பிட்டு சோதனை
பண்ணோம்.அதே குரூப் ரத்தம்!! அதற்குள்
அம்மாகாரி வந்து "அய்யோ அவர் ரத்தத்தை
எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய‌
வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.
ரத்தம் எடுக்க விடவேயில்லை.
    சரி எப்படியோ போங்க நான் போய் சாப்பிட்டு
வந்திற்றேனுட்டு நானும் நண்பனும் ஓட்டலுக்குப்
போயிட்டொம்.
     சாப்பிட்டு கொஞ்சம் அசத்தவே அவனும்
நானும் ரிடைரிங் ரூம் போய் கொஞ்ச நேரம்
தூங்கிட்டோம்.
      திடீர்னு முழிப்பு வந்து எழுந்து வார்டை
நோக்கி போனோம்.நண்பனோ "கேஸ் கோல்தான்
மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.
வார்டுக்கு போனோம்! கேஸ் ஆபரேஷன் முடின்சிச்சு
பிழைத்துக்கொண்டு விட்டது என்றார்கள்.
      ரத்தம் எப்படி கிடைத்த்து என்றேன்!!
உங்க நண்பர் உங்களைப்பார்க்க வந்தார். நீங்க இல்ல‌
அவர் ரத்தம் இந்த பிரிவுதானாம்.சரின்னு அவர்
கொடுத்து விட்டு அவசர வேலை நான் போகிறேன்னு
ஒரு சீட்டெழுதி கொடுத்திட்டுப்போனார்னு துண்டு
காகிதம் ஒன்றைத்தந்தார்கள்!!!
    பிரித்துப்பார்த்தேன்! என் வகுப்பு தோழன் ,
அன்பு நண்பன் கையெழுத்து" தேவா ஊர்ல அம்மாவுக்கு
உடம்பு சரியில்லை. நான் விழுப்புரம் போகிறேன்! 
அன்பரசன்!" என்று இருந்தது.
    டாக்டர் வந்தாங்க! எங்கப்பா போனீங்க ரெண்டு
பேரும்? பரவாயில்லை அப்ஸ்கான்ட்(தலைமறைவு)
ஆனாலும் உங்க நண்பனை அனுப்பி ரத்தம் கொடுக்
க ஏற்பாடு பண்ணீட்டீங்களே, வெரி குட்!! போய்
தூங்குங்க ரெண்டு பேரும்".... 
    மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றி
அன்பு

20 comments:

Unknown said...

என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!
செய்யுங்க!!

Unknown said...

என்ன நண்பரே சுத்த தமிழுக்கு மாறீட்டிக!!!!
செய்யுங்க!!

ஹரிணி அம்மா said...

Is this a real story?//

தேவன் மாயம் said...

thanks Kali!!!

யூர்கன் க்ருகியர் said...

மனுசன்னா இப்படி இருக்கணும்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பொண்ணோட அப்பா அம்மா,தம்பி,தங்கைதான்
பாக்கி.ரத்தம்ன்னவுடனே எல்லோரும் ஒடிட்டானுங்க.
அந்தப்பொண்ணு அப்பாவைக்கூப்பிட்டு சோதனை
பண்ணோம்.அதே குரூப் ரத்தம்!! அதற்குள்
அம்மாகாரி வந்து "அய்யோ அவர் ரத்தத்தை
எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய‌
வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.
ரத்தம் எடுக்க விடவேயில்லை.///




அப்பா எஸ்கேப் ஆனமாதிரி மாமன் மச்சான் அக்கா, அண்ணன், தம்பி தங்கை எல்லோரும் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவாங்களே! அதையும் போடுங்க சார்.

இதே மாதிரி கதைகளுக்கு

http://ruraldoctors.blogspot.com/ பக்கம் கூட இருக்கு

geevanathy said...

///"அய்யோ அவர் ரத்தத்தை
எடுக்காதிங்க தாங்க மாட்டாரு அவரு! காணி கரைய‌
வித்தாவது ரத்தம் வாங்கிப்போடுங்கன்னு ஒரே அழுகை.
ரத்தம் எடுக்க விடவேயில்லை.///

எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை இருக்கிறது . கூடிய அளவு முதன்முறை இரத்ததானம் செய்வதற்கு நிறைய ஊக்குவிக்க வேண்டி இருக்கிறது....அவசரத்துக்கு ஏலவே இரத்ததானம் செய்தவர்கள்தான் முன்வருகிறார்கள்...

தேவன் மாயம் said...

நண்பரே! நீங்கள் சொல்வது பொல‌
நிறைய எழுதலாம்!!!

நீங்க எழுதுங்க!!

எனக்கு ரெண்டு பதிவு போட்றதுக்குள்ள‌
தாவு தீந்து போவுது!!!!
(to Suresh)

தேவன் மாயம் said...

தங்கராஜ் அய்யா!!!
நீங்க சொல்றது போல‌
கஷ்டம் ரொம்ப இருக்கு!!!

அமர பாரதி said...

//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.// அந்த பெண் இறந்திருப்பாள் என்பதை இப்படி சொன்னீர்களா? அப்படி இல்லை என்று சொல்லுங்கள். ஆமாம் என்றால் மனது ரொம்ப வலிக்கிறது. மெல்லிய உணர்வுகளை இந்த அளவுக்கு பாழ்படுத்தியது எது?

நசரேயன் said...

தகவலோடு ௬டிய கதை நல்லா இருக்கு

தேவன் மாயம் said...

அமரபாரதி வருக!
உங்கள் சந்தேகத்துக்கு
தனியாக பதில்
தந்துள்ளேன்!!!
உங்கள் கருத்து
சரிதான்.

தேவன் மாயம் said...

நன்றி!
தகவலுடன் கூடியது
என்று கூறியது
சந்தோஷமாக‌
உள்ளது!
எழுத்துக்களின் மன நிறைவு
அதை பிறர் அங்கீகரிப்பதில்தான்
இருக்கிறது!!!!

தமிழ் அமுதன் said...

//கேஸ் கோல்தான் மச்சி" சரி போய் பார்ப்போம் வா என்றான்.// அந்த பெண் இறந்திருப்பாள் என்பதை இப்படி சொன்னீர்களா? அப்படி இல்லை என்று சொல்லுங்கள். ஆமாம் என்றால் மனது ரொம்ப வலிக்கிறது. மெல்லிய உணர்வுகளை இந்த அளவுக்கு பாழ்படுத்தியது எது?///


,,,,,,,,,,,,,,,,??/?

தேவன் மாயம் said...

ஜீவன் அமரபாரதியும் நீங்களும் ஒருவர்தானா!ஒரே போல் எழுதியுள்ளீர்கள்!
கேட்கும் உங்களுக்கே இப்படி இருந்தால் நேரடியாக "நான் பொளச்சுருவனா
டாக்டார்னு கேட்டுக்கிட்டு இருந்து, நம் கண் முன்னே மயங்கி இறக்கும்
காட்சிகளைக்காணும் எங்களுக்கு எப்படி இருக்கும்?
தேவா>

KARTHIK said...

//மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்" நன்றி
அன்பு.//

முதலில் மனிதாபிமானம்மிக்க உங்கள் நண்பர் அன்பு அவர்களுக்கு நன்றிகள்.

மருத்துவமனைகள்ல ரத்தம் வாங்கினாலும் கட்டணம் வசூளிக்குறாங்க.
நாம ரத்தம் கொடுத்தாலும் அதே கட்டணம்வசூளிக்குறாங்க.

அதுக்கு என்ன காரணம்.

நல்ல பதிவுங்க
இதுபோல தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

தேவன் மாயம் said...

நல்ல மறுமொழி!!!அரசு
மருத்துவமனைகளில்
ரத்தம் கொடுத்தால்
கட்டாயம் பணம் வசூலிக்க‌
மாட்டார்கள்!
தனியார் மமனைகளில்
ரத்தம் சேமிக்கும் பைக்கும்
அதை உறையாமல்
தடுக்கும் மருந்துக்கும்
பணம் வசூலிப்பார்கள்!!!
தேவா.

சந்தனமுல்லை said...

தினமும் ரத்தத்தைப் பார்த்து உயிர் அவ்வளவு மலிவாகத் தோன்றி விடுமா?
ஆனால் பயத்துடன் தான் படித்தேன்! நோபில் ப்ரொபெஷன் என்பது உண்மைதான் போல!

தேவன் மாயம் said...

சந்தனமுல்லை கூறியது...
தினமும் ரத்தத்தைப் பார்த்து உயிர் அவ்வளவு மலிவாகத் தோன்றி விடுமா?
ஆனால் பயத்துடன் தான் படித்தேன்! நோபில் ப்ரொபெஷன் என்பது உண்மைதான் போல!
நன்றி சந்தனமுல்லை!!!!
ஒவ்வொரு உயிரும்
விலைமதிப்பற்றதுதான்!!
தேவா!

Arasi Raj said...

எல்லாம் சரி....புருஷங்காரர் எங்க போனார்?

என்ன ஜென்மங்கள்...பெத்த பிள்ளைக்கு ரத்தம் குடுக்குறது என்னமோ உயிரைக் குடுக்குற மாதிரி ஒஅடுறாங்க

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory