Wednesday 29 July 2009

ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?

அன்பின் நண்பர்களே!!

என்னுடைய

பாலிவுட் நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும்

http://abidheva.blogspot.com/2009/07/blog-post_26.html

என்ற பதிவில் இவர்களைக் கல்யாணம் செய்பவன் என்ன பாவம் செய்தானோ என்று பின்னூட்டங்கள் இட்டிருந்தார்கள். அவர்களில் பலர் கதாநாயகிகள். சாதாரண முன்னணி நடிகைகளும் பலர் அதில் இருந்தனர். அதுக்கே இப்படியென்றால் கவர்ச்சியுலகில் கலக்கும் ராக்கி சவந்துக்குக் கல்யாணம்ங்கோ!!! எப்படி செய்தி?Rakhi Sawant

தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.
ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.
ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.
இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம். .

 

கொஞ்ச நாள் முன்பு இதே ராக்கி விருந்து நிகழ்ச்சி ஒன்றில்  நடனம் ஆடிய போது பாப் பாடகர் மியாசிங் இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

இதுபற்றி ராக்கி போலீசில் புகார் கொடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் நடித்த இந்தி டி.வி. தொடர் ஒன்றில் குளியல் காட்சி ஒன்றில் ஆபாசமாக நடித்து உள்ளார். அவர் குளிக்கும்போது அருகில் புத்தர் சிலை ஒன்று இருப்பது போல காட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மதத்தினர் போராட்டத்தில் குதித்தனர். மராட்டிய மாநிலம் அமராவதியில் புத்த மதத்தினர் ராக்கிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி எரித்தனர்.

இப்படி நடிக்கும் நடிகையைக் கல்யாணம் செய்ய 12515 பேர் போட்டியென்றால் என்ன சொல்வது?

அதுவும் சுயம்வரத்தைப் பற்றிக் கேட்கும்போது” இந்திய சரித்திரத்தில் சுயம்வரங்கள் நடக்கவில்லையா? சீதையே சுயம்வரம் நடத்தித்தானே திருமணம் செய்தார்”” என்று பதிலளித்துள்ளார் இந்த கலியுக சீதை!! எப்படி இருக்கு?

இதைப் படிக்கும்போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோமோ என்று தோன்றுகிறது. உணர்வு ரீதியாக நடிகர் நடிகைகளைக் கல்யாணம் செய்பவன் அவ்வளவுதான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் இந்திப்படவுலகில் அன்றைய ஹேமாமாலினியிலிருந்து, சல்மானுடன் மான் வேட்டை ஆடிய ரவீணா டாண்டன் வரை கல்யாணமாகி செட்டில் ஆகியுள்ளனர். இதை எவ்வாறு வடநாட்டில் வசிக்கும் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம்ம ஊரிலும் மீனாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ரம்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்!!!

சரி இதுபற்றி எழுதுங்கள் பின்னூட்டத்தில்!

ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக....என்று சொல்லப்பட்டது..

மாப்பிள்ளை கனடாவில் உள்ள Elesh Parujanwala என்ற தொழிலதிபர். ராக்கியாவில் இந்தியாவுக்கு ஒரு நன்மை என்னவென்றால் அவர் கணவராகப்போகும் நபர் தன் வியாபாரத்தை மும்பைக்கு மாற்றவுள்ளார். எப்படியோ ஒரு தொழிலதிபர் இந்தியா திரும்புவதில் சந்தோசமே!!

ஆனால் ராக்கி இதை இன்று மறுத்துள்ளார். ”சுயம்வரம்தான் நடத்தியுள்ளேன். ஆனால் என் இளவரசனை நன்கு புரிந்துகொண்ட பின்தான் திருமணம் “ என்று பல்டி அடித்துள்ளார்.

ஏற்கெனவே அபிஷேக் அவஸ்தியுடன் இருந்த காதல் பற்றிக் கேட்டால் அது முடிந்த கதை அதைப்பற்றிப் பேசவேண்டாம் என்கிறார் அம்மணி!!

நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்!!!

31 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக...//

அடடே....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக...//

விளம்பரதாரர் நிகழ்ச்சியாக வருகிறதா தலைவரே,,,

அப்துல்மாலிக் said...

//சுயம்வரம்தான் நடத்தியுள்ளேன். ஆனால் என் இளவரசனை நன்கு புரிந்துகொண்ட பின்தான் திருமணம் “ என்று பல்டி அடித்துள்ளார். //

இதுவும் ஒரு வகையான விளம்பரதேடல் தான் என்று எடுத்துக்கொள்ளலாமா தேவா சார்

இன்று நீங்க பதிவிடும் அளவிற்கு புகழ்வாய்ந்ததாக இருக்கே அதை சொன்னேன்

தினேஷ் said...

வாழ்க்கையிலே இதெல்லாம் சாதாரணமப்பா..

sakthi said...

நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்

அது சரி

நட்புடன் ஜமால் said...

"ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?"]]

இந்த சீரியல் எப்ப சார் ஆரம்பம் ஆகுது

ஆ.ஞானசேகரன் said...

///நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்!!!///

நல்ல அலசல்தான் போங்க தேவன் சார்

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக...//

அடடே....,///

வாங்க சுரேஷ்!!!

தேவன் மாயம் said...

UREஷ் (பழனியிலிருந்து) said...

//ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக...//

விளம்பரதாரர் நிகழ்ச்சியாக வருகிறதா தலைவரே,,,///

சினிமா கில்லாடியான நீங்களே இப்படிக்க்கேட்கலாமா?

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...

//சுயம்வரம்தான் நடத்தியுள்ளேன். ஆனால் என் இளவரசனை நன்கு புரிந்துகொண்ட பின்தான் திருமணம் “ என்று பல்டி அடித்துள்ளார். //

இதுவும் ஒரு வகையான விளம்பரதேடல் தான் என்று எடுத்துக்கொள்ளலாமா தேவா சார்

இன்று நீங்க பதிவிடும் அளவிற்கு புகழ்வாய்ந்ததாக இருக்கே அதை சொன்னேன்////

விளம்பரத்தேடலாகவும் இருக்கலாம்.

தேவன் மாயம் said...

சூரியன் said...

வாழ்க்கையிலே இதெல்லாம் சாதாரணமப்பா..
///

ரொம்பச்சரி!!

தேவன் மாயம் said...

sakthi said...

நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்

அது சரி///

நிங்க சொன்னா சரி!!

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

"ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?"]]

இந்த சீரியல் எப்ப சார் ஆரம்பம் ஆகுது//
ஆரம்பமாகி ரன்னிங்!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...

///நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்!!!///

நல்ல அலசல்தான் போங்க தேவன் சார்///

வாங்க ஞான்ஸ்!!

சொல்லரசன் said...

// ரம்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்!!!

சரி இதுபற்றி எழுதுங்கள் பின்னூட்டத்தில்!//


அப்படியா!!!!!!! உங்க பதிவுலக மன்மதன்கள்!( +18)பதிவை அவருக்கு அனுப்புங்கள்

ஈரோடு கதிர் said...

//இப்படி நடிக்கும் நடிகையைக் கல்யாணம் செய்ய 12515 பேர் போட்டியென்றால் என்ன சொல்வது? //

ஒன்னும் சொல்ல முடியாது

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
"ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?"]]

இந்த சீரியல் எப்ப சார் ஆரம்பம் ஆகுது
//

அது ஆரம்பிச்சு..முடிய போகுது ஜமால் அண்ணே !!!

இந்த சீரியல என்.டி.டி.வி இமாஜின்ல தினமும் பாக்கலன்னா எனக்கு தூக்கம் வராது.

டி.ஆர்,விஜயகாந்த் போன்றவர்களின் முழுநீள நகைச்சுவை படங்களை பார்ப்பது போல‌
ஒரு உணர்வு ராக்கியின் சீரியலை பார்ப்பவர்களுக்கு...


ரியாலிட்டி ஷோக்களின் தொல்லை இப்பல்லாம் தாங்க முடியல...

சச் கா சாம்னா பத்தியும் எழுதுங்க தேவா !!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ok ok.

ரெட்மகி said...

இவிங்க எப்பவுமே இப்படிதான் ,

தேவன் மாயம் said...

Blogger சொல்லரசன் said...

// ரம்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்!!!

சரி இதுபற்றி எழுதுங்கள் பின்னூட்டத்தில்!//


அப்படியா!!!!!!! உங்க பதிவுலக மன்மதன்கள்!( +18)பதிவை அவருக்கு அனுப்புங்கள்//

அது சரி!!

தேவன் மாயம் said...

Blogger கதிர் - ஈரோடு said...

//இப்படி நடிக்கும் நடிகையைக் கல்யாணம் செய்ய 12515 பேர் போட்டியென்றால் என்ன சொல்வது? //

ஒன்னும் சொல்ல முடியாது////

ஓகே!!!

தேவன் மாயம் said...

Delete
Blogger அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
"ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?"]]

இந்த சீரியல் எப்ப சார் ஆரம்பம் ஆகுது
//

அது ஆரம்பிச்சு..முடிய போகுது ஜமால் அண்ணே !!!

இந்த சீரியல என்.டி.டி.வி இமாஜின்ல தினமும் பாக்கலன்னா எனக்கு தூக்கம் வராது.

டி.ஆர்,விஜயகாந்த் போன்றவர்களின் முழுநீள நகைச்சுவை படங்களை பார்ப்பது போல‌
ஒரு உணர்வு ராக்கியின் சீரியலை பார்ப்பவர்களுக்கு...


ரியாலிட்டி ஷோக்களின் தொல்லை இப்பல்லாம் தாங்க முடியல...

சச் கா சாம்னா பத்தியும் எழுதுங்க தேவா !!!///

நமக்கு அவாளைத் தெரியாதே!!

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...

ok ok.///

ஒகே!!

தேவன் மாயம் said...

ரெட்மகி said...

இவிங்க எப்பவுமே இப்படிதான் //

அவிங்களா ..இவிங்களா!!

தேவன் மாயம் said...

ரெட்மகி said...

இவிங்க எப்பவுமே இப்படிதான் //

அவிங்களா ..இவிங்களா!!

"உழவன்" "Uzhavan" said...

ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் நடக்கிறது. இதிலென்ன ஆச்சரியப்பட இருக்கு :-))

தேவன் மாயம் said...

" உழவன் " " Uzhavan " said...
ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் நடக்கிறது. இதிலென்ன ஆச்சரியப்பட இருக்கு :-))///

ஓ அதுவேற இருக்கா!!!

அன்புடன் அருணா said...

///நாட்டு நிலைமையைச் சொன்னேன்!!
அதுசரி!!!!!

வழிப்போக்கன் said...

பொதுவாக இந்த மாதிரி சர்ச்சைகளில் மாட்டுபவர்களுக்கு தான் மவுசு அதிகம் என்பதையே இது காட்டுகிறது...

நல்ல வேளை 12,515வோடு நின்றதே என சந்தோஷப்பட வேண்டியது தான்...
:)))

S.A. நவாஸுதீன் said...

12,515 பேர்ல ஒருத்தர் ராக்கி கழுத்துல தாலி காட்டுவார். மீதி பேருக்கும் ராக்கி கிடைக்கும். ராக்கி கைய்யால ராக்கி கட்டிக்க வேண்டியதுதான்!

SUFFIX said...

உண்மையிலேயே உண்மை தானா?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory