Saturday 27 February 2010

கொஞ்சம் தேநீர்- நெஞ்சினில்!!

மஞ்சளும் சிகப்புமாய்ப்

பூத்து நிற்கும்

பூவரச மரம்,

 

ஆணியடித்து சுவரில்

வரிசையாய் மாட்டப்பட்ட

அரிவாள்கள்,

 

கள்ளிவேலி கட்டிய

தோட்டத்தின் மூலையில்

கயிறில்லாத

ராட்டினத்துடன் கேணி,

 

பாதி பறித்த

இலைகளுடன்

துளிர்த்து நிற்கும்

தண்டங்கீரையின்

அடித்தண்டுகள்!

 

எங்கேனும் இவற்றைக்

காணும் போதெல்லாம்

வந்து போகும்

அப்பச்சியின் முகம்!!!

19 comments:

அகல்விளக்கு said...

Wow.......

Super Anna...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

அழகான கவிதை..!! கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்கிறது.

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி....

அப்பச்சி முகம் பார்க்கையில்

Chitra said...

அப்பச்சியின் முகம்!!!

........அழகிய கிராமிய மணம் வீசும் கவிதை.

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
Wow.......

Super Anna...///

நன்றி அகல்விளக்கு!!

தேவன் மாயம் said...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...
அழகான கவிதை..!! கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்கிறது.

///

பழைய நினைவுகளைச் சொல்லும்போது ஒரு திருப்தி வருகிறது!!

தேவன் மாயம் said...

ஈரோடு கதிர் said...
நெகிழ்ச்சி....

அப்பச்சி முகம் பார்க்கையில்//

நன்றி கதிர்!!
===============================


Chitra said...
அப்பச்சியின் முகம்!!!

........அழகிய கிராமிய மணம் வீசும் கவிதை.

//
சித்ராவுக்கு நன்றி!!

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கிராமத்து நினைவுகள். இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கு எதுவும் ஈடாகாது.

தேவன் மாயம் said...

அமைதிச்சாரல் said...
அருமையான கிராமத்து நினைவுகள். இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கு எதுவும் ஈடாகாது.///

உண்மைதான் நண்பரே!!

அப்துல்மாலிக் said...

ஒரு நினைவூட்டல் அருமை தேவா

அன்பரசன் said...

கலக்கிட்டீங்க..
சூப்பர்

Jerry Eshananda said...

நெஞ்சில் ஆணி அடித்து மாட்டி உள்ளீர்கள் அப்பச்சியின் முகத்தை.

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
ஒரு நினைவூட்டல் அருமை தேவா///

திடீரென்று வந்த நினைவை எழுதினேன்!!

தேவன் மாயம் said...

அன்பரசன் said...
கலக்கிட்டீங்க..
சூப்பர்

//

உங்கள் கவிதையை தமிழ்மணத்தில் போடலியே!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
நெஞ்சில் ஆணி அடித்து மாட்டி உள்ளீர்கள் அப்பச்சியின் முகத்தை.///

ஜெரி!!மறவாத நினைவுகள்!!

மதுரை சரவணன் said...

பச்சியின் முகம் நல்லா இருக்கு. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

என்னையும் கற்பனை செய்ய தூண்டியது நினைவுகள்....

சைவகொத்துப்பரோட்டா said...

மலரும் நினைவுகள், அழகு.

நட்புடன் ஜமால் said...

கேணி - எவ்வளவு அழகான காலங்கள் அவை.

எனக்கும் வந்து போகுது ஆச்சிமாவின் முகம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory