Monday 8 March 2010

கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!

மவுனம் சூழ்ந்த
இரவொன்றில் பிரியங்கள்
மறைத்து நீயும், நானும்,

தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.

நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,


பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!

என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!

மெதுவாக
வெளியேறிச் சென்றாய்
உடைந்து
சில்லுகளாய்ச்
சிதறிக்கிடந்த
நம் காதலின் மேல்!





29 comments:

Chitra said...

அருமை.

தேவன் மாயம் said...

எல்லா பதிவிலும் முதல் வெட்டு சித்ராதானா!!

அகல்விளக்கு said...

அருமை அண்ணா.....

தேவன் மாயம் said...

நன்றி அகல்!!

பிரேமா மகள் said...

பின்னறீங்க...

தேவன் மாயம் said...

நன்றி பிரேமா மகள்!!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்

நட்புடன் ஜமால் said...

நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன]]


நல்லாயிருக்கு தேவா!

தேவன் மாயம் said...

நன்றி நண்டு!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
நீயும், நானும்,
தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன]]


நல்லாயிருக்கு தேவா!

ஓகே ஜமால்!!

மணிஜி said...

ரசித்தேன்

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி, அபாரம் கவிஞரே!!!

DREAMER said...

அருமை...

-
DREAMER

Rajeswari said...

very nice..rachithen

சிவாஜி சங்கர் said...

பிரியங்கள் மறைந்த இரவொன்றில் //
.......... :)

தமிழ் மதுரம் said...

பொங்கி வழிந்தோடியது
என் ரணத்தில்
வழிந்த உன் கண்ணீர்!//



வலிகள் தாங்கிய சோகத்தினூடாக ஆத்மார்த்தமான தேடலினை நோக்கி நகரும் கவிதை அருமை... மிக நீண்ட இடை வேளைக்குப் பிறகு தற்போது தான் வலையுலகம் நோக்கி எட்டிப் பார்க்க முடிகிறது... இனி அடிக்கடி வருவேன்..

அப்துல்மாலிக் said...

கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் அருமை

Jerry Eshananda said...

// என் குருதியை
அள்ளியெடுத்து
என் வர்ணங்கள்
படர்ந்த உன் உடலைக்
கழுவிக்கொண்டாய்!

வரிகள் அனைத்தும்,அர்த்தமும்,ஆழமும் பொதிந்தவை.

க.பாலாசி said...

பிரிவெனினும் தேநீர் சுவை இனிது....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை டாக்டர்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நிசப்தம் எரித்துகண வெளிச்சத்தில்உன்னை என்னில்ஆழச் சொருகினாய்,//

இதுக்கு என்ன அர்த்தம் ?
கண்டிப்பா நான் நெனக்கிறதா இருக்காது.

அன்புடன் அருணா said...

அடடா!!

பழமைபேசி said...

மருத்துவக் கவி வாழ்க!

Matangi Mawley said...

very nice.. well penned!

அப்பாதுரை said...

>>தவற விட்ட
குழந்தையாய் அலைகின்றன,
சமாதானத்துக்கான
சொற்கள்.

தாக்கும் உவமை.

கொல்லான் said...

//
நிசப்தம் எரித்து
கண வெளிச்சத்தில்
உன்னை என்னில்
ஆழச் சொருகினாய்,//

முன் பின் சைடு நவீனத்துவ இலக்கியமா இருக்கே?
உங்களின் புதிய பார்வை நன்று.

suneel krishnan said...

நல்ல வரிகள் டாக்டர் சார் ,
தவறாக எண்ண வேண்டாம் ,நீங்கள் காரைக்குடியா ?

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க மருத்துவரே. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

இராஜராஜேஸ்வரி said...

கொஞ்சம் தேநீர்-கொஞ்சம் கவிதை-கொஞ்சம் அழுகை-பிரிதல்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory