Monday 3 May 2010

சிட்னியில ’சுறா’! த்ரிஷாவின் டாட்டூ!!

”சுறா படம் பார்த்து விட்டீர்களா?  படம் ஹிட்டா? “- இதே கேள்விதான் சுறா படம் ரிலீஸானதிலிருந்து. விஜய் படம் என்றாலே ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் பேனாவுடன் என் நண்பர்கள் தயாராக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்தப் படம் விஜய் மிகவும் எதிர் பார்க்கும் படம். இது கையைக் கடித்துவிட்டால்?

சரி மேட்டருக்கு வருவோம்.1935 ஏப்ரல் 8 ம் தேதி ஆஸ்திரேலியா சிட்னியில் ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் காணாமல் போய் விட்டார். அவர் காணாமல் போன 14 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்ட ஒரு சுறா மீன்  மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டது.  அந்த சுறா கடலில் ஒரு மனித கையை விழுங்கி இருந்தது, பிடிபட்ட பின் அதனை அது மீன் காட்சியகத்தில் கக்கி விட்டது.

அந்தக்கையானது உடலிலிருந்து ஒரு கூரான கத்தியால் அறுக்கப்பட்டது போல் காணப்பட்டது.

காணாமல் போன ஜேம்ஸ் ஸ்மித் ஒரு குத்துச்சண்டை வீரர். அவர்  புஜத்தில் இரு வீரர்கள் குத்துச்சண்டை போடுவது போல் பச்சை குத்தியிருந்தார்.

கையைப் பார்த்த அவர் மனைவியும் தம்பியும் அது ஸ்மித்தின் கைதான் என்பதை உறுதி செய்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டு கடலில் துண்டுகளாக அறுத்து வீசப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கொலை செய்தவன் உடலை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக துண்டங்களாக சுறாக்களுக்கு இரையாக்கினாலும் கடைசியில் கையில் குத்தப்பட்ட பச்சையால் உடல் யாருடையது என்று கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.

  • டிஸ்கி: பதிவுலக யூத்துகளுக்கு: 1.டாட்டூ மோகம் இளைஞர்களைப் பிடித்து ஆட்டுகின்றது என்றும் கண்ட இடங்களில் குத்திக் கொள்கிறார்கள் என்றும் பக்கத்து வீட்டு அம்பி ரொம்ப வருத்தப்பட்டான். அவன் கிடக்கிறான். யூ ராக் ரெமோ!!
  • 2.பொது அறிவுக் கேள்வி:த்ரிஷாவுக்கு எந்த இடத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது?  என்ன படம் பச்சை குத்தப்பட்டுள்ளது?

தேவா…

29 comments:

நட்புடன் ஜமால் said...

டிஸ்கி2: இப்படியெல்லாம் கேள்வி பதிலா

நடத்துங்க

-------------

சுறா கடிச்ச கை செறிமானம் ஆகலையா, மருத்துவ குறிப்பும் போடுங்களேன் ...

iniyavan said...

//அவர் காணாமல் போன 14 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்ட ஒரு சுறா மீன் பிடிக்கப்பட்டு மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டது//

டாக்டர்,

இரண்டாவதா வரும் - பிடிக்கப்பட்டு - நீக்கிடுங்க.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
டிஸ்கி2: இப்படியெல்லாம் கேள்வி பதிலா

நடத்துங்க///


சமாளிக்காதீங்க!!பதிலைச் சொல்லுங்க ஜமால்

தேவன் மாயம் said...

என். உலகநாதன் said...
//அவர் காணாமல் போன 14 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்ட ஒரு சுறா மீன் பிடிக்கப்பட்டு மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டது//

டாக்டர்,

இரண்டாவதா வரும் - பிடிக்கப்பட்டு - நீக்கிடுங்க.///


ஓகே!! நன்றி!!

Ahamed irshad said...

///பொது அறிவுக் கேள்வி:த்ரிஷாவுக்கு எந்த இடத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது? என்ன படம் பச்சை குத்தப்பட்டுள்ளது? ///

எனக்கு தெரியும்.அதை சொல்ல மாட்டேனே...

தேவன் மாயம் said...

அஹமது இர்ஷாத் said...
///பொது அறிவுக் கேள்வி:த்ரிஷாவுக்கு எந்த இடத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது? என்ன படம் பச்சை குத்தப்பட்டுள்ளது? ///

எனக்கு தெரியும்.அதை சொல்ல மாட்டேனே...///

அட தெரியாமத்தானே கேட்கிறேன்.. சொல்லுங்கப்பா?

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரே... இரண்டாவது கேள்விக்கான விடை எப்ப சொல்லுவீங்க. தனி இடுகையா போடுவீங்களா.. இல்ல இந்த இடுகையில் பின்னூட்டத்தில் பதில் சொல்லுவீங்களா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அடடே! சுறாவில் தொடங்கி த்ரிஷாவில் கதை முடியுதா? பலே , பலே!

ஹேமா said...

டாக்டர் கேள்வி பதில் நேரமா !

சௌந்தர் said...
This comment has been removed by the author.
Prasanna said...

இது வித்தியாசமான சுறா விமர்சனம் :)

அன்புடன் நான் said...

வியப்பான தகவலுக்கு நன்றிங்க....

திரிசாவின் தோள்பட்டைக்கு சற்றுகீழே (முன் பக்கமாக) மீனோ வண்ணத்து பூச்சியோ டாட்டூ குத்தப்பட்டுள்ளது

1. என் கண் பார்வை மிக தெளிவு....
2. எனக்கு ஞாபக சக்தி மிக அதிகம்...
3.பொது அறிவு மிக மிக அதிகம்......

நேசமித்ரன் said...

டாக்டர் சார் !

கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாமோ ?

:)

க.பாலாசி said...

நல்ல தகவல் பகிர்வு டாக்டர்...

மாதேவி said...

சுறா மீனுக்கு பச்சை குத்தலையா...

தமிழ் மதுரம் said...

வணக்கம் டொக்டர்: கன நாளா உங்களைக் காணேல்லை.... எப்பிடிச் சுகம்?

சுறா பற்றிய பதிவு அருமை....

மெல்பேணிலை சுறா ஒன்றும் பிடிக்கேல்லையோ?


திரிசாவைப் பார்த்தவங்களுக்குத் தான் அது தெரியும்.

Kiruthigan said...

நமக்கு பொது அறிவு கம்மிங்க..!
ஹி ஹி..
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_03.html

சௌந்தர் said...

http://rasikan-soundarapandian.blogspot.com/

Jerry Eshananda said...

த்ரிஷா என் கிட்ட சொன்ன விசயத்தை "நான் உங்க கிட்ட சொன்னது தப்பு தான்,"இப்ப த்ரிஷா என் கிட்ட போன் பண்ணி இந்த போஸ்ட டெலீட் பண்ண சொல்றாங்க ப்ளீஸ் டாக்டர்.

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த (உண்மையில் நடந்த) சுறா கதை
நல்லா இருக்கே!!

Chitra said...

Did you miss Trisha in the movie, "suraa"? ha,ha,ha,ha.....

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
மருத்துவரே... இரண்டாவது கேள்விக்கான விடை எப்ப சொல்லுவீங்க. தனி இடுகையா போடுவீங்களா.. இல்ல இந்த இடுகையில் பின்னூட்டத்தில் பதில் சொல்லுவீங்களா?///

உங்களுக்காகவே நாளை பதிவு உண்டு!!

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி said...
அடடே! சுறாவில் தொடங்கி த்ரிஷாவில் கதை முடியுதா? பலே , பலே!!!//

கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கிறீர்களே!!

chinnathambi said...

யூ டூ?????

david santos said...

Hello, my friend!
Thanks for your work and have a nice week.

Anonymous said...

trisha tatoo name is bossom. kazhuthukku keele.

Philosophy Prabhakaran said...

நல்ல புனைவு... கலக்கியிருக்கீங்க... ஆனா, நம்ம தலைவர் படம் பத்தி எழுதாம விட்டது ஏமாற்றம் அளிக்கிறது...

பனித்துளி சங்கர் said...

////////////2பொது அறிவுக் கேள்வி:த்ரிஷாவுக்கு எந்த இடத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது? என்ன படம் பச்சை குத்தப்பட்டுள்ளது? /////////

அண்ணே அவளவு போது அறிவு நமக்கு இல்லைங்க .
கலக்குங்க பகிர்வுக்கு நன்றி !

INDIA 2121 said...

SURA THOLLA THAANGA MUDIYALA
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory