Monday 23 February 2009

திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள்! நடக்குமா?

நடிகர்,கலைஞநடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலில் இறங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா, நடிகர் சங்கம் சார் பில் ராதாரவி உட்பட தயாரிப்பாளர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.இதில்தான் இப்படி ஒரு முடிவு பண்ணி இருக்காங்க!!

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் நஷ்டமடைந்தால் அந்தப் படத்தில் நடித்த நாயகன், நாயகி, இயக்குனர் மூவரும் அந்தப் படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து ஓராண்டிற்குள் அந்த தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் படம் நடித்து தர வேண்டும்.

சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது!

இதெல்லாம் நடக்குமா? சாமி!

சிறிய பட் ஜெட் படங்கள் வாரத்தில் இரண்டு படங்கள் மட் டுமே வெளியிடப்படும்.
பெரிய பட்ஜெட் படங் கள் ரிலீஸ் ஆன நாளிலிருந்து ஒரு வருடம் கழித் தும், சிறிய பட்ஜெட் படங்கள் ஆறு மாதத்திற்கு பிறகும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

படத்தை வினியோகஸ்தர்கள் இன்றி நேரடியாக ரிலீஸ் செய்தவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் விரும்பும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

"விசிடி' நேரடி ரிலீஸ் குறித்தும் சங்கத்துடன் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

நடிகர், நடிகைகள், இயக் குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அட்வான்ஸ் அடிப்படையில் தான் படங் கள் முடித்துக் கொடுக்க வேண்டும்.

அட் வான்ஸ் விவரங்களை தயாரிப் பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சங்கம் உதவும்.

கார்ப்பரேட் நிறுவனங் கள் படங்கள் தயாரிக்கும் போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள குறைந்தது மூன்று நேரடிப் படங்களையாவது தயாரித்துள்ள தயாரிப்பாளரின் பெயருடனும், அவரின் ஒப்புதலோடும் தான் படம் தயாரிக்க வேண்டும்.

அதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.

மேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா?

இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?

28 comments:

வேத்தியன் said...

நான் தான் பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)

தேவன் மாயம் said...

நான் தான் பர்ஷ்ட்டு.//

வாங்க!
நல்லாயிருக்கீங்களா?

வேத்தியன் said...

மேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா?//

அப்பிடி எதுவும் இல்லீங்க...
ஒரு முடிவு போடுறதும் அது சரிவராதுன்னு அப்புறம் அதை மாத்துறதும் சினமா உலகத்துல சாதாரணமப்பா...

தேவன் மாயம் said...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)///
அப்படியா/
இன்னைக்கு நிறைய
போட்டுவிட்டேன்!

வேத்தியன் said...

thevanmayam கூறியது...

நான் தான் பர்ஷ்ட்டு.//

வாங்க!
நல்லாயிருக்கீங்களா?//

நலம். நலமறிய ஆவல்...

வேத்தியன் said...

இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?//

பொறுத்திருந்து பாக்கலாம்...

தேவன் மாயம் said...

மேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா?//

அப்பிடி எதுவும் இல்லீங்க...
ஒரு முடிவு போடுறதும் அது சரிவராதுன்னு அப்புறம் அதை மாத்துறதும் சினமா உலகத்துல சாதாரணமப்பா..//

ஆமாங்க. பார்ப்போம்...//

வேத்தியன் said...

thevanmayam கூறியது...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)///
அப்படியா/
இன்னைக்கு நிறைய
போட்டுவிட்டேன்!//

அதெல்லாம் செல்லாது செல்லாது...
அது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...
:-)

தேவன் மாயம் said...

இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?//

பொறுத்திருந்து பாக்கலாம்..//

ஆமா பார்ப்போம்ம்

தேவன் மாயம் said...

thevanmayam கூறியது...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)///
அப்படியா/
இன்னைக்கு நிறைய
போட்டுவிட்டேன்!//

அதெல்லாம் செல்லாது செல்லாது...
அது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...
:-)///

நாளை மதியம் 2.30 தேநீர் உண்டு

வேத்தியன் said...

முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.//

ஆஹா ஆஹா...
போச்சு...
விஜயகாந்த், சிம்பு படம் எல்லாம் ஒரு தடவையே பாக்க முடியாதுன்னு தான் அதெல்லாம் தோக்குது.
சரின்னு விடாம திரும்பி நடிக்க போறாங்களா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்............

வேத்தியன் said...

thevanmayam கூறியது...

thevanmayam கூறியது...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)///
அப்படியா/
இன்னைக்கு நிறைய
போட்டுவிட்டேன்!//

அதெல்லாம் செல்லாது செல்லாது...
அது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...
:-)///

நாளை மதியம் 2.30 தேநீர் உண்டு//

எதுலயும் மாட்டிவுட்ற மாட்டீங்களே???
:-)

வேத்தியன் said...

கண்டிப்பா 2.30க்கு வரேன்...

தேவன் மாயம் said...

முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.//

ஆஹா ஆஹா...
போச்சு...
விஜயகாந்த், சிம்பு படம் எல்லாம் ஒரு தடவையே பாக்க முடியாதுன்னு தான் அதெல்லாம் தோக்குது.
சரின்னு விடாம திரும்பி நடிக்க போறாங்களா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்...///

ஆமா இது ஒரு பெரிய பிரச்சினைதான்.

வேத்தியன் said...

அதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.//

இப்ப கிடைக்குதில்ல போல????
மரியாதை குடுத்தா தானா திரும்பி கிடைக்கும்...

தேவன் மாயம் said...

hevanmayam கூறியது...

thevanmayam கூறியது...

அட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..
:-)///
அப்படியா/
இன்னைக்கு நிறைய
போட்டுவிட்டேன்!//

அதெல்லாம் செல்லாது செல்லாது...
அது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...
:-)///

நாளை மதியம் 2.30 தேநீர் உண்டு//

எதுலயும் மாட்டிவுட்ற மாட்டீங்களே???///

இன்னொரு தொடர் பதிவு இருக்கே!

வேத்தியன் said...

சரி சாரே...
நான் போயிட்டு அப்புறமா வரேன்.
ஓகே..
நாளை மதியம் 2.30க்கு வரேன்...

வேத்தியன் said...

இன்னொரு தொடர் பதிவா???
என்னான்னு இப்பவே சொன்னீங்கன்னா எழுத வசதியா இருக்குமே.....
சொல்லுங்க தேவா சாரே???

தேவன் மாயம் said...

இன்னொரு தொடர் பதிவா???
என்னான்னு இப்பவே சொன்னீங்கன்னா எழுத வசதியா இருக்குமே.....
சொல்லுங்க தேவா சாரே???///

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!!!

தேவன் மாயம் said...

நான் எழுதிவிட்டேன்///நாளை போடுவோம்!!

Anonymous said...

"இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?"

நடந்தா நீங்கென்ன ஓடிப்போவியளா தேவா ?

இராகவன் நைஜிரியா said...

தமிழ் திரைப்பட உலகம்...

இவங்க எல்லாம் கட்டுபாடு போடுவதோடு சரி.. அப்புறம் எல்லாம் காத்துல பறந்து போயிடும்.

சும்மா பொழுது போகாம, எதோ தீர்மானம் போட்டு இருக்காங்க..

இதெல்லாம் படிச்சு எங்களுக்கு தலை சுத்துமா... அதெல்லாம் சுத்தாது..

இது மாதிரி எதுவும் போடாம இருந்தாதான் தலை சுத்தும்

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam கூறியது...

நாளை மதியம் 2.30 தேநீர் உண்டு //

2.30 தேநீர் மட்டும்தனா... கொடுக்கறதுதான் கொடுக்கிறீங்க... முழுசா... கொடுங்களேன்

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா ...

மீ த 25 வது பின்னூட்டம்...


ஹா...ஹா....

அப்துல்மாலிக் said...

//முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென//

நல்ல லாபம் வந்தால்..... ரெண்டு மடங்கு சம்பளம் கொடுப்பாங்களா

அப்துல்மாலிக் said...

பெரிய நடிகர் என்றவுடன் கதை கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை கொட்ட வேண்டியது, அப்புறம் குத்துதே குடையுதே என்று நடிகர் சங்கத்தில் வழக்கு தொடுத்து பணத்தை திருப்பி கேட்பது, என்னய்யா நியாயம் இது?

இது ஒரு மாயை லாட்டரி உலகம், வந்தால் மலை இல்லையேல் .....

SASee said...

நீங்க ஒரு அலசல் புலியோ?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory