Thursday 5 February 2009

எச்சரிக்கை காதலர்களே! உஷார்!

காதலர்களே உஷார்!!!

கண்ட இடங்களில் கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .வருகிற 14 ஆம் தேதி அல்லாக் காதலர்களும் அமுக்கி வாசிங்க.நாங்களுமா நீங்களுமான்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது.

எங்கேன்னு கேக்கறீங்களா?
நம்ம கலாச்சாரத்தலை நகரம் பெங்களூரூவில்தான்!!

என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது கிறிஸ்துவ பாணியில் செய்யப்படுவது.இந்தியர்கள் கடைப்பிடிக்கக் கூடாதுன்னும் சொல்லி இருக்காங்க.

சொன்னதோட நின்னா பரவாயில்லை.அவர்கள் அமைப்பு பொதுக்குழு கூடி
கலந்து முடிவு பண்ணி தீர்மானம் நிறைவேற்றி அவங்க அமைப்பு சார்பில் 5 குழு உருவாக்கி இருக்காங்க.

அந்த 5 குழுக்களும் வீடியோ காமிராவோட(பாருங்க வீடியோ செலவும் மிச்சம்),தாலிக்கயிறுகளுடன் சுத்துவாங்க.

அப்படியே காதலர்களை கையும் மெய்யுமா பிடித்து தாலியைக்கட்ட வைப்பாங்க! தாலி கட்டச்சொன்னாக் கூட பரவாயில்லை. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும் கூட்டிப்போய் பதிவும் பண்ணிக்குடுத்துவிடுவார்கள்(ஃஃஃபீஸ் அவங்களே கட்டிவிடுவாங்களேன்னு கேக்கிறீங்க அதானே! அது நேரில் போய் தெரிந்து கொள்க.)

கல்யாணம் பண்ணமுடியாம வருடக்கணக்கில் பீச்சுகளிலும், பார்க்குகளிலும் உருண்டு கிடக்கும் மக்கள் துணிந்து போகலாம்.கல்யாணம் பண்ணிவிட்டு அந்த அமைப்பிலேயும் சேந்துகிட்டீங்கன்னா வீட்டாளுங்க ஒன்னும் பண்ண முடியாது..

கண்ணாலே காதல் கவிதை படிச்சு(படிப்பை மறந்து) திரியும் சின்னப்பசங்களும்,தள்ளு முள்ளு கேசுகளும் மறந்தும் வீட்டை விட்டு வெளியே போயிடாதீங்க. அன்னைக்கு லீவைப்பொட்டுட்டு சமத்தா வீட்டில உக்காந்து டி.வி.பாருங்க

எச்சரிக்கை தேவா..

45 comments:

பழமைபேசி said...

Good one sir! Sorry for English!!

தேவன் மாயம் said...

பரவாயில்லைங்க!
வலையைக்
கலகுறீங்க..

pudugaithendral said...

ச்சும்மா சூப்பரா இருந்துச்சு.

தேவன் மாயம் said...

ச்சும்மா சூப்பரா இருந்துச்சு.//

நன்றி!!!வருகைக்கும் கருத்துக்கும்//

கிஷோர் said...

அடடா இந்த நேரம் பார்த்து இந்தியாவில இருக்க முடியாம போச்சே, நல்ல ஃபிகரா பாத்து கையில ரோஸோட பக்கத்துல போய் டைம் கேட்டாக்கூட கட்டிவச்சிருவாய்ங்க :)

ஆதவா said...

நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க... பேசாம அன்னிக்கி காதல் கவிதை எழுதிட்டு, காவியம் பாடிட்டு இருக்கவேண்டியதுதான்...

நட்புடன் ஜமால் said...

கடுமையான எச்சரிக்கையா இருக்கு போல.

ஆனாலும் நல்ல விடயம் தானே.

யாத்ரீகன் said...

Kishore.. sema idea :-))

RAMYA said...

தேவா என்ன நடக்குது இங்கே
எப்படி இப்படி எல்லாம் முக்கியமான
தகவல் எல்லாம் திரட்ட்றீங்க
எப்ப பெங்களூருக்கு கிளம்பறீங்க ??

RAMYA said...

//
கிஷோர் கூறியது...
அடடா இந்த நேரம் பார்த்து இந்தியாவில இருக்க முடியாம போச்சே, நல்ல ஃபிகரா பாத்து கையில ரோஸோட பக்கத்துல போய் டைம் கேட்டாக்கூட கட்டிவச்சிருவாய்ங்க :)
//

கிஷோர் அடுத்த விமானம் பிடிங்க
இன்னும் நாட்கள் இருக்கின்றன
அதுக்குள்ளே வந்துடலாம்
ரொம்ப கவலைப் படாதீங்க பா!!

RAMYA said...

//
ஆதவா கூறியது...
நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க... பேசாம அன்னிக்கி காதல் கவிதை எழுதிட்டு, காவியம் பாடிட்டு இருக்கவேண்டியதுதான்...
//

ஆதவா ரொம்ப சோகமா சொல்லி இருக்காரு.

தேவா கொஞ்சம் அவரை என்னான்னு கேளுங்க.

RAMYA said...

தேவா அசத்திப் போட்டுடீங்க போங்க
காதலர்கள் எல்லாருக்கும் இந்த Message
போய் சேரணுமே அதுக்கு என்ன பண்ணலாமா ??

தேவாவின் நேரம் என்று கூறி நம் சன் டிவிலே விளம்பரம் கொடுக்கலாமா?

RAMYA said...

நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!

வேத்தியன் said...

நல்ல விஷயம்...

தமிழ் அமுதன் said...

காதலர்கள் வீட்ட விட்டு ஓடாம, போலீஸ் ஸ்டேஷன் போகாம, கல்யாணம் பண்ணிக்க
அருமையான யோசனை!!

pudugaithendral said...

நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!//

விழுந்து புரண்டு (சிரிச்சேன்) கண்ணாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.

இராகவன் நைஜிரியா said...

தேவா...

வஞ்சகப் புகழ்ச்சி அணி இல்லையே இந்த பதிவு...

தேவன் மாயம் said...

அடடா இந்த நேரம் பார்த்து இந்தியாவில இருக்க முடியாம போச்சே, நல்ல ஃபிகரா பாத்து கையில ரோஸோட பக்கத்துல போய் டைம் கேட்டாக்கூட கட்டிவச்சிருவாய்ங்க :)///

உண்மைதாங்க!!

தேவன் மாயம் said...

நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க... பேசாம அன்னிக்கி காதல் கவிதை எழுதிட்டு, காவியம் பாடிட்டு இருக்கவேண்டியதுதான்...///

நல்ல முடிவு//

தேவன் மாயம் said...

கடுமையான எச்சரிக்கையா இருக்கு போல.

ஆனாலும் நல்ல விடயம் தானே.//

ஆமா ஆமா!!!

தேவன் மாயம் said...

Kishore.. sema idea :-))///

நல்ல வழிதான் இல்ல

தேவன் மாயம் said...

தேவா என்ன நடக்குது இங்கே
எப்படி இப்படி எல்லாம் முக்கியமான
தகவல் எல்லாம் திரட்ட்றீங்க
எப்ப பெங்களூருக்கு கிளம்பறீங்க ??///

பெங்களுர் பஸ்,ட்ரேயின் எல்லாம் ஃபுல்..

தேவன் மாயம் said...

ஆதவா கூறியது...
நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க... பேசாம அன்னிக்கி காதல் கவிதை எழுதிட்டு, காவியம் பாடிட்டு இருக்கவேண்டியதுதான்...
//

ஆதவா ரொம்ப சோகமா சொல்லி இருக்காரு.

தேவா கொஞ்சம் அவரை என்னான்னு கேளுங்க.//

ஏற்கெனவே மாட்டிக்கிட்டார் போல..

தேவன் மாயம் said...

தேவா அசத்திப் போட்டுடீங்க போங்க
காதலர்கள் எல்லாருக்கும் இந்த Message
போய் சேரணுமே அதுக்கு என்ன பண்ணலாமா ??

தேவாவின் நேரம் என்று கூறி நம் சன் டிவிலே விளம்பரம் கொடுக்கலாமா?//

kutungka... kutungka.....

தேவன் மாயம் said...

நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!///

ஆவியா வந்து பழிவாங்கிடுவேன்.. எல்லார் ப்ளாகையும் மறைய வைப்பேன்..

தேவன் மாயம் said...

நல்ல விஷயம்...///

இதா?

தேவன் மாயம் said...

நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!//

விழுந்து புரண்டு (சிரிச்சேன்) கண்ணாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.///


ஆவியா வந்து பழிவாங்கிடுவேன்.. எல்லார் ப்ளாகையும் மறைய வைப்பேன்..

தேவன் மாயம் said...

தேவா...

வஞ்சகப் புகழ்ச்சி அணி இல்லையே இந்த பதிவு...//


வஞ்சகப் புகழ்ச்சிதான்!
செய்தி உண்மை!
அந்த நாளில் ராம சேனா அமைப்பினர் கைது செய்யப்படுவர்..

புதியவன் said...

என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் நடக்குதா இங்க...?

Sinthu said...

உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?

தேவன் மாயம் said...

உங்களது ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்..
அடடா என்னை பற்றியும் எழுதியதுக்கு நன்றி ரம்யா..
உங்களால் நானும் ஒரு பிரபலமாக வாய்ப்பு இருக்கு போல..
மீண்டும் எனது நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா..//

வியா அக்கா!

எங்களோட ஒரு கை போடலாம்ல!
ரம்யா பாராட்டி இருக்காங்க!
வந்து கும்முங்க.

சி தயாளன் said...

நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம் இப்படி மினக்கெடுவாங்களா..இல்லையே..?

இவர்களை எல்லாம்......

உங்க நிலமை அப்படி..இஞ்ச காதலிக்க சொல்லி பாடமே எடுக்கிறாங்க...ஸ்கூலில்...:-)))

Jeevan said...

அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-
டிக்கதக்கது. மனசும் மனசும் இனைஞ்ச பிறகு இவனுங்க
என்னத்த...

தேவன் மாயம் said...

என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் நடக்குதா இங்க...?//

உண்மைய சொன்னா ஒத்துக்கமாட்டென்கிறீங்களே!

தேவன் மாயம் said...

உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?///

14 ஆம் தேதிதானே!
அதுக்குள்ள அரசாங்கம் ஒரு முடிவு
பண்ணிவிடுவாங்க..

தேவன் மாயம் said...

நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம் இப்படி மினக்கெடுவாங்களா..இல்லையே..?

இவர்களை எல்லாம்......

உங்க நிலமை அப்படி..இஞ்ச காதலிக்க சொல்லி பாடமே எடுக்கிறாங்க...ஸ்கூலில்...:-)))//

அய்யா! அப்படி ஒரு நாட்டிலா வாழுகிறீர்கள்!!!

தேவன் மாயம் said...

அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-
டிக்கதக்கது. மனசும் மனசும் இனைஞ்ச பிறகு இவனுங்க
என்னத்த...//

உண்மை புரியாத கொள்கைவாதிகள்!!

ஹேமா said...

தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வைத்தியரே!

ஹேமா said...

நாட்டில சின்னஞ்சிறுசுகளைச் சந்தோஷமாவே இருக்க விட மாட்டீங்களே!பொறாமை உங்களுக்கு.

பாருங்க தேவா பின்னுக்கு எத்தனை பேரு துதி பாடுறாங்க.ம்ம்ம்....

தேவன் மாயம் said...

தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வைத்தியரே!///

சும்மா! நம்ம ராமசேனா கொடுத்த பேதி மருந்து..

Anonymous said...

வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதிப்படுத்துவார்கள்

குடும்ப சூழல் அதாவது பையன் வீட்ல கல்யாணம் முடியாத அக்கா இருக்கும்போது எப்படி கல்யாணம் பண்ண முடியும்

பல காதல்ல சாதி ஏற்றத்தாழ்வும் ஒரு காரணம். அதனால தங்கை விதவையானாக் கூட பரவாயில்லன்னு மச்சானைக் கொல்லும் வழக்கம் நம்மிடையே இருக்கே...அப்படி ஒரு காதலர்கள கல்யாணம் பண்ண வச்சு அவங்கள அண்ணன் தம்பி நாளைக்கு வெட்ட வந்தா இந்த ராமசேனா வந்து காப்பாத்துமா

ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கிறாங்க நீங்க போகும்போது அதுவே உங்களுக்கு விகற்பமா படுது கல்யாணம் கட்டி வச்சுருவீங்களா

என்னக் கேட்டா பிப் 14 அன்னைக்கு பெங்களூரு பதிவு அலுவலக்த்துல சாட்சி கையெழுத்து போட வர்றவன எல்லாம் NSA ல போட அரசு நடவடிக்கை எடுக்கணும்னு உயர்நீதிமன்றத்துல கேஸ் போடலாம்...

இல்லன்னா இருக்கு அவங்க மாதிரியே உருட்டுக்கட்டய ஆணும் பெண்ணுமா ஜனநாயகத்துல நம்பிக்கை உள்ள எல்லாருமே சேர்ந்து அவிங்கள பெண்டு எடுக்கலாம்...

தேவன் மாயம் said...

வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதிப்படுத்துவார்கள்

குடும்ப சூழல் அதாவது பையன் வீட்ல கல்யாணம் முடியாத அக்கா இருக்கும்போது எப்படி கல்யாணம் பண்ண முடியும்

பல காதல்ல சாதி ஏற்றத்தாழ்வும் ஒரு காரணம். அதனால தங்கை விதவையானாக் கூட பரவாயில்லன்னு மச்சானைக் கொல்லும் வழக்கம் நம்மிடையே இருக்கே...அப்படி ஒரு காதலர்கள கல்யாணம் பண்ண வச்சு அவங்கள அண்ணன் தம்பி நாளைக்கு வெட்ட வந்தா இந்த ராமசேனா வந்து காப்பாத்துமா

ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கிறாங்க நீங்க போகும்போது அதுவே உங்களுக்கு விகற்பமா படுது கல்யாணம் கட்டி வச்சுருவீங்களா

என்னக் கேட்டா பிப் 14 அன்னைக்கு பெங்களூரு பதிவு அலுவலக்த்துல சாட்சி கையெழுத்து போட வர்றவன எல்லாம் NSA ல போட அரசு நடவடிக்கை எடுக்கணும்னு உயர்நீதிமன்றத்துல கேஸ் போடலாம்...

இல்லன்னா இருக்கு அவங்க மாதிரியே உருட்டுக்கட்டய ஆணும் பெண்ணுமா ஜனநாயகத்துல நம்பிக்கை உள்ள எல்லாருமே சேர்ந்து அவிங்கள பெண்டு எடுக்கலாம்...///

சரியா சொன்னீங்க!
உங்கள் கருத்துத்தான் என்னுதும்!!

ராஜ நடராஜன் said...

////
கிஷோர் கூறியது...
அடடா இந்த நேரம் பார்த்து இந்தியாவில இருக்க முடியாம போச்சே, நல்ல ஃபிகரா பாத்து கையில ரோஸோட பக்கத்துல போய் டைம் கேட்டாக்கூட கட்டிவச்சிருவாய்ங்க :)
//

ராம் சேனாக் கோமாளிகளை நினைச்சா சிரிப்பா வருது.அதுக்கு மேல் எதிர் அஸ்திரம் தொடுக்கும் கிஷோர் மாதிரி ஆட்களின் லூட்டிய நினச்சா சிரி...சிரி....சிரிப்பா வருது:)

முச்சந்திமுரளி said...

ஆஹா... ஸூப்பரு... எப்ப்டிதான் இப்பிடி எல்லாம் யோசிக்கிராங்களளோ.....

கலை அக்கா said...

//
என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.
///

தேவா தம்பி அருமையான கருத்துக்கள்
இந்திய கலாச்சாரத்தை பரப்ப புறப்பட்டு இருக்கும் அந்த அமைப்பு
உண்மையாக இருந்தால்
அந்த அமைப்பிற்கு ஒரு
ஒ போடுங்கள் !!!

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory