நோபல் பரிசு என்பது ஒரு உயரிய பரிசாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்கப்பட வேண்டியவர்களுக்குக் கிடைத்ததா என்பது சில நேரங்களில் கேள்விக்குறிதான். ஏன் இப்படிச்சொல்கிறேன் என்றால் இன்று அணுவில் உள்ள உள் அணுத் துகள்களான போஸான் களை உடைத்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்துகள்களைக் கண்டுபிடிக்கும் சோதனை முதல்கட்ட வெற்றியடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.
ஹிக் போஸான் என்றழைக்கப்படும் இந்தப் பொருளுக்கு ’போஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது? யார் அந்த போஸ் என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.போஸான் என்கிற துகள்கள் இருப்பதைக் கணித்த அந்த மேதை இந்தியாவைச் சேர்ந்தவர்தான்.
அவரது முழுப்பெயர் சத்தியேந்திரநாத் போஸ்! கல்கத்தாவில் 1894ல் பிறந்தார். 1916 முதல் 1921 வரை கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1.போஸான்கள் என்பவை ஒரு வகை அணுத் துகள்கள். அவை போஸ் ஐன்ஸ்டீன் விதிகளுக்கு உட்பட்டவை.
2.அவற்றை அவர் 1924ல் கண்டுபிடித்துச்சொன்னபோது அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
(போஸின் Planck's Law and the Hypothesis of Light Quanta என்ற் கட்டுரையை அறிவியல் உலகம் தவறானது என்று ஏற்றுக் கொள்ளவில்லை!! )
2.ஆனால் அவருடைய பிளான்க்ஸ் குவாண்டம் ரேடியேஷன் விதி பற்றிய மேற்சொன்ன கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் புரிந்துகொள்ளப்பட்டது. அவர் அதை ஜெர்மனில் மொழிபெயர்த்து பிரசுரித்தார்.!!!
3.அதன் பிறகே அறிவியல் உலகம் அவர் சொன்ன துகள்கள் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டது.
4. 70 வருடங்கள் கழித்து 1995ல்தான் போஸான்கள் என்ற துகள்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டது!!
5.போஸின் தவறு என்று கருதப்பட்டது தற்போது போஸ் ஐன்ஸ்டீனின் விதி(Bose-Einstein statistics) என்று அழைக்கப்படுகிறது.
6.அந்த போஸான்களை உடைத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பொருளைக்( கடவுளின் துகள்) கண்டுபிடித்து விடலாம் என்கிறது அறிவியல்.
7.போஸின் கருத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
7.ஆனால் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றக் காரணமான மூல்ப் பொருளைக் கண்டு சொன்ன இந்திய மேதைக்கு இறுதிவரை நோபல் பரிசு (1974ல் அவர் இறந்தார்) கொடுக்கப்படவில்லை.
நோபல் மறுத்த போஸை இந்தியர்களும் மறந்து விட்டோம். 9.4 பில்லியன் செலவில் அணுக்கருவை உடைக்கும் இந்நாளில் போஸைப் பற்றிச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
மேலும் படிக்க: