எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று பொதுவாக சொல்லக்கேட்டிருப்போம்.
பித்துப் பிடித்தவன்பாடு கொடுமைதான்!. உண்மையில் தெருவோரங்க்களில் அனாதைகளாக குடும்பத்தவர்கள் கவனிக்காமல் அலையும் அவர்களைப் பார்க்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் உள்ளது!
அவர்களுக்கு உணவும் உறையுமிடமும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை!! போதுமான அளவு மனநோயாளிகளுக்கான காப்பகங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த இடுகையில் அதைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை. உண்மையில் பித்துப்பிடித்தவர்கள் ஒருபுறமிருக்க சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்து அதிலிருந்து தப்பிக்க பைத்தியம் போல் நடிக்கும் நபர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
இவர்களால் மருத்துவர்களுக்கும் தலைவலிதான். ஏனென்றால் இவர்களை உண்மையான பித்தனா? இல்லை பொய்ப்பித்தனா என்று கண்டுபிடிக்க பல நேரங்க்களில் மருத்துவரும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும்.
பொதுவாக உண்மைப்பித்தனுக்கும், பொய்ப்பித்தனுக்கும் என்ன என்ன வேறுபாடு இருக்கும் என்று பார்ப்போம்!
1.திடீரென்று தமிழ்சினிமாபோல் "நான் எங்கே இருக்கிறேன்?" ஆசாமிகளை நடைமுறையில் பார்ப்பதா¢து! உண்மையான பைத்தியம் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக முற்றிய நிலையை அடையும். திடீர்ப் பித்தர்கள் பெரும்பாலும் "பொய்ப்பித்தர்கள்"!!
2.உண்மையில் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதற்குக் காரணம் இருக்காது( காதல் பைத்தியங்கள் இந்தக் கட்டுக்குள் அடங்க்காது!.) பொய்யாக நடிப்பவர்கள் பைத்தியமாக நடிப்பதற்கு காரணம் ஏதாவது இருக்கும். பல நேரங்க்களில் கி¡¢மினல் குற்றமாக இருக்கும்!
3.உண்மையான பித்தர்களின் பரம்பரையில் யாருக்காவது பைத்தியம் பிடித்திருப்பது, அல்லது மிகப்பொ¢ய நஷ்டம் என்று ஏதாவது இருக்கும். ஆனால் சூப்பர் ஆக்டிங்க் கொடுக்கும் கி¡¢மினல்களிடம் இதெல்லாம் இருக்காது!
4.உண்மையில் மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிட்டவர்களிடம் அறிகுறிகள் 24 மணி நேரமும் சீராக ஒரேபோல் இருக்கும். ஆனால் பித்தனாக நடிக்கும் ஆசாமிகள் ஆட்களைக் கண்டவுடன் ஓவர் "குணா கமல்" ஆக்டிங்க் கொடுப்பார்கள்,
5.உண்மையில் பித்துப் பிடித்தவர்களின் முகம் வித்தியாசமாக இருக்கும். வெறுமையான பார்வை காணப்படும். ஆனால் சீட்டிங்க்க் ஆசாமிகளின் முக பாவம் மாறிக் கொண்டே இருக்கும். வலுக்கட்டாயமாக முகத்தைப் பல கோணங்க்களில் வைத்துக்கொள்வார்கள்!
6.இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை உண்மையான பைத்திய நிலையில் இருக்கும். பொய்யாய் நடிப்பவர்கள் தூங்காமல் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கஷ்டம்.
7.உண்மைப் பித்தர் சோறு,தண்ணி தூக்கமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க்குவர். ஆனால் நம்ம ஆள் சில நாளிலேயே சோர்வாகிப் படுத்துவிடுவார்.
8.உண்மைப் பித்தன் அழுக்காகவும், சுத்தபத்தமில்லாமல் இருப்பான். ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.
9.உண்மைப் பித்தனின் தோல்,உதடுகள் வரண்டு, சொரசொரப்பாக இருக்கும். பொய்யாய் நடிப்பவருக்கு அப்படி இருக்காது
10.உண்மைப் பித்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் சோதிக்கலாம். கண்டுக்க மாட்டான். பொய்யாய் நடிப்பவன் அப்படியில்லாமல் அடிக்கடி சோதித்தால் எ¡¢ச்சல்படுவான், கோபப்படுவான்.
இதெல்லாம் பொதுவாக காணப்படும் அம்சங்கள்!! இதை வைத்து நாம் பித்தன் உண்மையில் பாதிக்கப்பட்டவனா அல்லது நடிகனா என்று கண்டுபிடித்துவிடலாம்!!