இரண்டு நாட்களாக எதையுமே எழுதப் பிடிபடவில்லை! உண்மைதான். ஏதாவதொரு அலுவல் அல்லது சின்னப் பிரச்சினைகள் இருந்தால்கூட மனது அதை ஒட்டியே சிந்திக்கிறது. அதை முடித்தால்தான் அடுத்தவேலை செய்யமுடிகிறது.
பதிவுகள் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்று மனது சொல்கிறது. மொக்கையாக, ஜாலியாக எழுது என்று அதே மனதின் இன்னொரு பக்கம் சொல்கிறது.
அனேகமாக மனித மனமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். இதில் நம் மனதுக்கு, அறிவுக்கு தெரிந்த விசயங்களைக் கொண்டே நாம் பிடித்தது பிடிக்காதது என்று அபிப்பிராயப்படுகிறோம்.
அதே போல் ஒரு முக்கிய பிரமுகரை நாம் நேரில் சந்தித்துப் பேசிப் பழகி இருக்க மாட்டோம். உதராணம்: அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர். ஆனால் அவர்களின் செயல்களை நாம் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். அனைவரும் அனைத்துச்செய்திகளையும் படித்திருப்பது என்பது சாத்தியமான ஒன்று அல்ல.
பதிவர்களை எடுத்துக் கொண்டால் பிடித்தவர் என்று பலர் குறிப்பிட்டிருக்கும் பலரை நான் படித்ததே இல்லை. எல்லோரும் எல்லோருடைய பதிவுகளையும் படித்திருக்க முடியாது. அப்படியே படித்தாலும் பதிவரின் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்க முடியாது. இதுவே உண்மை. ஆகையால் பிடித்தது பிடிக்காததை படிக்கும் நண்பர்கள் சீரியசாக( இதற்கு இணையான தமிழ்ச்சொல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை!!) எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட வேண்டாம் என்று நான் உங்களிடம் சொல்லமுடியாது. ஏனெனில் பல நேரங்களில் உணர்வுபூர்வமான பதில்களும், எதிர்வினைகளும் ஒரு பதிவுக்கு ஒருவிதமான சுவையையும், சுவாரசியத்தையும் ஊட்டுவது உண்மைதான். அதுவே பலருடைய கருத்துக்களையும் நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது. ”உங்கள் பதிவு அருமை” என்று வரும் பின்னூட்டங்களைவிட இவற்றில் அதிகம்தானே!!
சரி..சரி.. கத்தி போட்டது போதும்! என்று பலர் முனுமுனுப்பது கேட்கிறது!!!
பதிவர் நண்பர் பீர் என்னை பிடித்ததும் பிடிக்காததும் எழுத அழைத்திருக்கிறார்.
என் பதிவுகளின் காட்டம் தாங்க முடியவில்லை அவரால்........
பீர் | Peer said... டாக்டர், பதிவுகள் ரொம்ப சீரியஸா போய்கிட்டிருக்கு...
வாங்க, ஷார்ட் கமர்ஸியல் ப்ரேக் எடுத்துக்கலாம். உங்களை ஒரு தொடர் பதவி விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்.
பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்
ஆயினும்
9.பிடித்த பதிவர் :இதில் பிடித்த பதிவு என்று இருக்க வேண்டும்.சமீபத்தில் டாக்டர் தேவன்மயம் எழுதிய விரிவான கட்டுரை பிடித்திருந்தது.
மிக்க நன்றி நண்பரே!! இத்தகைய பாராட்டுக்களே பதிவில் கிடைக்கும் மகிழ்ச்சி!!! வேறு என்ன வேண்டும் நமக்கு!!
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
இனி
1.அரசியல் தலைவர் :
அ.கலைஞரிடம்:
பிடித்தது: அரசு ஊழியர் மீது அன்பு காட்டுவது! ஏழைகளுக்கும் மருத்துவக்காப்பீடு அளித்தது.
பிடிக்காதது: ஈழத்தமிழர் விசயத்தில் விரைவான முடிவு எடுக்காதது!
ஆ. ஜெயலலிதாவிடம்:
பிடித்தது: மன உறுதி!
பிடிக்காதது: அரசு ஊழியர்கள்கள் மேல் அடக்குமுறையைப் பிரயோகித்தது, ஆடம்பரத்தை வெளிக்காட்டி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது!
2.எழுத்தாளர்
நான் படித்ததில் அசோகமித்திரன் - தண்ணீர்!
தி.ஜானகிராமன்: மரப்பசு
லா.ச.ரா: அபிதா
மனைவியின் மரணம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லா ப்ரூஸின் - அது ஒரு நிலாக் காலம்!
பிடிக்காதது: எவருமில்லை! எல்லோருடைய எழுத்துக்களிலும் ஏதாவதொரு சங்கதி இருந்துகொண்டே இருக்கிறது...
3.கவிஞர்
பிடித்தவர் :கமலாதாஸ்,
பழமலய், சுகிர்தராணி
பிடிக்காதவர்:
நான்!! தொடர்ந்து கவிதை எழுத முயற்சித்தும் வார்த்தைகளையும் கருவையும் கலக்க முடியாததால்!!!
4.இயக்குனர்
மகேந்திரன்: உதிரிப்பூக்கள்!
மணிரத்தினம்: நாயகன்
கமலஹாசன்: விருமாண்டி
5.நடிகர்
பிடித்தவர் :
சிவாஜி: மிகைநாடிய கலைஞனாக இருந்தாலும் ! பாசமலர், பாவமன்னிப்பு ..... இன்ன பிற!!
கமலஹாசன்: நாயகன், விருமாண்டி...
ரஜினி: இமயமலையின் இடுக்குக் குகைக்குள் நுழைந்தது ஒரு ஆச்சரியம்!
6.நடிகை
பிடித்தவர் : பத்மினி- தில்லானா மோகனாம்பாள்
ஷோபா: முள்ளும் மலரும், பசி
ஸ்ரீதேவி: மூன்றாம் பிறை
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதது: பிடிக்கவில்லை என்று எழுத!!( கலைஞர், ஜெ தவிர!!)
தொடர அழைப்பது
1.நேசமித்திரன் http://nesamithran.blogspot.com/2009/11/blog-post_04.html
2. அம்மா அப்பா-ஆ.ஞானசேகரன்
3.மேனகா சாத்தையா-.Mrs.Menagasathia.
4.ஹரிணிஅம்மா-http://www.hariniamma.blogspot.com/
5.கிரி -கிரி Blog
தமிழ்த்துளி தேவா