நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிவிளையாடும் தஞ்சை மாநகரின் விடியாத ஒரு காலைப் பொழுது. மசமசவென்றிருந்த அந்த நேரம் திருவள்ளுவர் பேருந்து ஒன்று தன் பயணிகளை இறக்கி விட்டது.
அண்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டுமாத இயந்திரவியல் படிப்பில் ஃப்ளெமிஷ்,இங்கிலீஷ் பாண்டுகளைப் பாதிபடித்தும் படிக்காமலும்,
அண்ணா கல்லூரியின் ராகிங்கில் புகழ்பெற்ற “டு....கைக் கையில் பிடித்து முட்டிக்கால் போட்டு சீனியர்களுக்கு வணக்கம் சொல்லும்
” அந்தி நேரம் சந்திசாய,
அந்த மாமுனிவர்கள் தங்கள்
அடி .......... ....பிடுங்க..
.... ........... ............. ................”
என்ற பாடலை மட்டும் நன்கு மனப்பாடம் செய்திருந்த அவனும் அப்பொழுதுதான் புதிதாக வந்து இறங்கி அடுத்து என்ன செய்வது என்று அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தான்.
இராசராசன் முதல் புகழ்பெற்ற சோழ மன்னர்கள் உலாவந்த சோழப்பேரரசின் புகழ்பெற்ற தலைநகரான அந்தத் தஞ்சைதான் அவனுடைய எதிர்காலத்தை நிர்ண்யிக்கப் போகிறது என்ற சந்தோசத்துடன் பக்கத்திலிருந்த குழாயில் முகம் கழுவி விட்டு டீ ஒன்றை வாங்கிக் குடித்துவிட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு பஸ் எங்கே வரும் என்று விசாரித்து எதிரில் இருந்த நகரப் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.
( சாண்டில்யன் போல் வர்ணணையுடன் பெரிய தொடர்கதைகள் எழுத என் சக கதை எழுதும் பதிவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!)
அன்றுமுதல் தஞ்சையில் எங்கு உணவருந்தினாலும் பாண்டிய நாட்டில் இல்லாத ஒரு ஊறுகாய் அவனுக்குப் பரிமாறப்பட்டது. அதுதான் மாவடு இஞ்சி ஊறுகாய். மிக வித்தியாசமான சுவையுள்ள அந்த ஊறுகாய் செய்முறையை சாஷிகாவின் பதிவில் கண்டேன்.
என் நினைவுகள் பின்னோக்கிச்சென்றதன் விளைவே இதற்கு முந்தைய பத்தியில் இருக்கும் வர்ணனை!
மேலே குறிப்பிட்ட ராகிங் பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என் ராகிங் நினைவுகளை பதிவுகளாகப் போடும் உத்தேசமும் உண்டு. பாடல் தெரியாவிட்டால் பாடல் ஈமெயிலில் அனுப்பப்படும்!!!
இந்த நினைவுகளைத் தூண்டிவிட்ட சாஷிகாவுக்கு தண்டணை உடனடியாக எனக்கு ஒருபாட்டில் மாஇஞ்சி ஊறுகாய் பார்சல் அனுப்புவதே!
ஆயினும் இன்னும் நான் இடுகையின் முக்கிய பகுதிக்கு வரவில்லை. ஆம்! சாஷிகா எனக்கும் மீண்டும் ஒரு விருது அளித்துள்ளார்.
![[BrilliantWebBlogAward.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJAuSEVkTyoB4z2snYrEJZmXr5yylYtLdLqFeePMr2hVB-QfXjYPa7OUJi_8qCtxBJCRP4M1JlKPMh0hbjXCYzw5m2CnETMJL_38UShpApJQ_itrOD0elCEM6W2qdEURlvUTgkCVb9Ei_l/s1600/BrilliantWebBlogAward.jpg)
கண்டும் காணாததுபோல் நான் இருந்தாலும் அவர் என்னை விடுவதாயில்லை! பின்னூட்டங்களில் வந்து மிரட்டி விருதை ஏற்றுக் கொள்ளவைத்துவிட்டார். மிக்க நன்றி சாஷிகா!! ( இந்த நினைவுகளுக்கும் பதிவுக்கும் காரணமாக இருந்ததற்கும்!!).
இதோ அவர் இடுகையில் உள்ள மாஇஞ்சி ஊறுகாய்!
மாங்காய் இஞ்சி ஊறுகாய்
Labels: ஊறுகாய் - Sunday, 4 October 2009
தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை :
* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.
*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.
*இதை உடனே செய்து சாப்பிடலாம்.
பி.கு:
மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.
இந்த விருதை என் இனிய பதிவர்களுக்கு அளிக்கிறேன்!!
அன்பு உள்ளங்களே! வருக! விருதினைப் பெருக!