சிக்குன்குன்யா காய்ச்சல் என்பது தமிழகத்தில் மிக அதிகமாகப் பரவி வரும் நேரம் இது. பொதுவாக தினமும் கேள்விப்படும் சொல்லாக இருந்தாலும் இதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் உள்ளன.
1.காய்ச்சல் (இல்லாமலும் வரலாம்), மூட்டுக்களில் வலி, முகம் மற்றும் உடல் தோல் கருத்தல்.
2.பொதுவாக மூட்டுவலி, பாதங்கள், கணுக்கால்,கை, விரல்கள் ஆகியவற்றிலும் தோள்பட்டையிலும் வரும்.
3.இது இளையோருக்கு குறைந்த நாட்களும்(5-15), நடுத்தர வயதினருக்கு மாதக்கணக்கிலும்(1-2.5), முதியோருக்கு இன்னும் அதிக் நாட்களும் இருக்கும். கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதில்லை. மிகச்சிலருக்கு மூட்டுவலி 1 வருடத்தைத் தாண்டியும் இருக்கும்.
4.எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகளில் இதனைக் கண்டறியலாம். டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் போன்றவற்றிலிருந்து பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
5.வலி,காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து குளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிடலாம்.
6.கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. கை நீளச்சட்டை,முழு நீளக் கால் சட்டை அணிவது நலம்.
7.கொசு கடிக்காமல் இருக்க ஓடாமாஸ் போன்ற களிம்புகள் தடவலாம்.
8.தண்ணீர் வீட்டருகில் தேங்க விடக்கூடாது. பூந்தொட்டி, மீன் தொட்டிகளில் தண்ணீர் இருந்தல் வாரம் ஒருமுறை மாற்றிவிடவேண்டும்.
9.சிக்குன் குனியா வந்தவர்கள் கொசுக்கடி உடலில் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த நபரைக் கடித்த கொசு வேறு யாரையும் கடிப்பதன் மூலம் காய்ச்சல் பரவும்.
10.சிக்குன்குனியா வைரஸ் அமெரிக்காவின் ராணுவத்தில் உயிரியல் ஆயுதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் ரசாயன,உயிரியல் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.