Showing posts with label தொற்றுநோய். Show all posts
Showing posts with label தொற்றுநோய். Show all posts

Saturday, 4 September 2010

தட்டம்மை(MEASLES)

தட்டம்மையும் வைரஸ் கிருமியால் வரும் தொற்று நோய்தான்.

தொற்றுவழிகள்:

  • தும்முதல்,இருமுதலால் எச்சில் தெரிக்கப்படுவதால்.
  • ஒரே வீட்டில் வசிப்போருக்கு
  • நேரடித் தொடர்பின் மூலம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளோருக்கு மிக எளிதில் பரவுகிறது.

நோய்காப்புக்காலம்:(INCUBATION PERIOD):

  • 6-19  நாட்கள்

நோய்க்குறிகள்:

  • நான்கு நாள் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல்,
  • கண் சிவத்தல், கண் கூசுதல்,
  • கொப்ளிக் புள்ளிகள்- வாயின் உட்புறம் சிறு  புள்ளிகள்.
  • கொப்ளிக் புள்ளிகளை வைத்து நாம் தட்டம்மை நோயை அறியலாம்.
  • அதன் பின் சிவந்த தடிப்புகள் ( RASHES ) முதலில் காதின் பின்புறமும் நெற்றியிலும் தோன்றும்.
  • அதன் பின் உடல் முழுவதிலும் புள்ளிகள் பரவும்.
  • இததடிப்புகள் மறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சல் குறைந்துவிடும்.

நோயின் பின் விளைவுகள் என்ன?

  • வயிற்றுப்போக்கு
  • நிமோனியாக் காய்ச்சல் (நுரையீரல் அழற்சி)
  • மூளைக் காய்ச்சல் (ENCEPHALITIS)
  • கண் கருவிழி பாதிப்பு (CORNEAL ULCER)

பொதுவாக பின் விளைவுகள் வயது வந்தோருக்கு இந்நோய் தாக்கும்போது அதிகம் காணப்படுகிறது.

தடுப்பூசி

  • MMR (MUMPS, MEASLES, RUBELLA) என்ற முத்தடுப்பூசியாக இது போடப்படுகிறது.
  • ஒன்றரை வயதில் முதல் முத்தடுப்பூசி போடப்படுகிறது.
  • இரண்டாவது ஊசி நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்காக நான்கிலிருந்து ஐந்து வயதுக்குள் போடப்படுகிறது.

இது மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆயினும் 1000 ல் 1 அல்லது 2 பேர் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, 3 November 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

 

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory