Showing posts with label ஆபீஸ். Show all posts
Showing posts with label ஆபீஸ். Show all posts

Tuesday, 16 June 2009

ஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்!!!

அலுவலகம் செல்லும் நம் மக்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.

1.காலை உணவைத் தவிர்த்தல்

காலையில் எழுந்து அவசரமா கிளம்பி ஒரு காபி அல்லது டீ மட்டும் குடித்துவிட்டு செல்பவரா நீங்கள்?

அலுவலகத்தில் எரிச்சல்,கடுப்பு,சரியா வேலை வேலை செய்யமுடியாமைதான் ஏற்படும்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்? உடலில் போதிய அளவு சக்தியின்மைதான். ஆங்கிலத்தில்

பிரேக்ஃபாஸ்ட் என்றால் பிரேக்கிங்க் தி ஃபாஸ்டிங்க் என்பார்கள்.அதாவது இரவு முழுக்க விரதம் இருந்து

காலையில் விரதம் முடிப்பது போல்!

காலையிலேயே உடலில் உண்ணாததால் சக்தி இருக்காது! மதியம் வருவதற்குள் மயக்கம்

வந்து விடும். என்ன செய்வீங்க? மதியம் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவீங்க. அதனால் என்ன

ஆகுமென்றால் உடலில் சர்க்கரை அளவு கூடி விடும். இதாலும் அசதி,தூக்கம்தான் வரும்.

என்ன செய்ய வேண்டும்: 1 கப் பால், கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸ் போல, ஒரு பழம் போதும்.

(தேவையென்றால் ஒரு முட்டை) என்று காலை உணவை முடிங்க!!

2.காபி,டீ: அளவுக்கு அதிகமா காபி,டீ சாப்பிடுவது. இது தொடர்ந்து குடிப்பவர்களுக்கு விடுவது

பெரிய சிரமமாக இருக்கும்.

காபி,டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எரிச்சல், சக்தியின்மை ஏற்படும். இரவில் தூக்கம் கூட மாறி

மறுநாள் சுறுச்றுப்பு இருக்காது. சாப்பாடுடன் சேர்த்து சாப்பிட்டால் காபி இரும்புச்சத்தை உடலில் சேர

விடாது. அதனால் சத்துக்குறைவு ஏற்படும்.

என்ன செய்யலாம்: அடிக்கடி குடிப்பதை விடமுடியவில்லையா? கொஞ்சமா குடியுங்கள்!

3.தண்ணீர்- நிறைய அலுவலகங்கள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் நமக்கு தாகம் அதிகம்

எடுக்காது.இதனால் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். உடலும் அதற்கேற்ப மாறிவிடும். இதனால்

சில வருடங்களில் மலச்சிக்கல், சரியாக செரிக்காமல் போவது, வாயுத்தொல்லை, தண்ணீர் உடலில்

குறைதல், தோல் மினுமினுப்பு குறைதல் ஆகியவை ஏற்படும்.

என்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.

அலுவலகம் முடிவதற்குள் ஒரு லிட்டரை முடித்துவிட வேண்டும். எவ்வளவு சுலபம் பாருங்க.

4.ரொம்ப பிஸியா?:மீட்டிங் மத்தியான நேரத்திலா? உங்களால் மதிய உணவு சாப்பிட

முடியவில்லையா! சரியான ஒரு நேரத்தை அதாவது 12.30-- 2.00 க்குள் தேர்ந்தெடுத்து அந்த

நேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள். இது அல்சர்,வாயுத்தொல்லை ஆகியவற்றிலிருந்து

உங்களைக்காப்பாற்றும். இது மேலும் அதிக உணவு உண்ணுதல், எடை அதிகரிப்பு ஆகியவற்றையும்

தடுக்கும்.

5.வார இறுதி: இந்த வார இறுதின்னாலே மக்களுக்கு குஷிதான்!! வாரம் முழுக்க கடின வேலை!!

வார இருதியில் கொண்டாட்டம்!!சூடான சோம பானங்கள், கெண்டகி சிக்கன் என்று அள்ளி

விளையாடுகிறீர்களா? கொஞ்சம் பொறுமை!! இந்த காம்பினேஷனெல்லாம் நீண்ட உடல் நலத்துக்கு

உதவாது. கொஞ்சம் அடக்கி வாசிங்க!!

என்ன செய்யலாம்: ஒவ்வொரு நாளுமே கொஞ்சம் வேலை முடிந்தவுடன் ரிலாக்ஸ் பண்ணவும்.

சின்ன மசாஜ்,விளையாட்டு, புத்தகம் .. என்று வார இறுதியை விட ஒவ்வொரு நாளும் ரிலாக்ஸ்

பண்ணிவிடுங்க!! அப்புறம் என்ன ஜாலிதானே!!

அன்பு மக்களே!! உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்!!

படித்து மகிழுங்கள்!!

தமிழ்மணத்தில் ஓட்டுப்போட மறந்திடாதீங்க!!!

தமிழ்த்துளி தேவா...
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory