மதுரையில் பதிவர்கள் சந்தித்து சிறிது காலம் ஆகிவிட்டதே என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. சிறு சிறு சந்திப்புகள் நிகழ்ந்தாலும் நான் அவற்றில்
கலந்துகொள்ள(கொல்ல!!) இயலவில்லை.
தற்போது வேறு வழியில்லை! பதிவுலகில் நட்புக்கு மிகுந்த மரியாதை தருபவரும், பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதற்கு தன் இந்தியப் பயணத்தில் அதிக காலம் செலவிடுபவருமான... ஆம் ! வேறு யார்? திரு.இராகவன் அவர்களின் வருகிறார் என்றால் அதை விட முக்கிய வேலை என்ன? - சென்றுதான் ஆகவேண்டும் என்பது நான் இப்போது எடுத்த முடிவல்ல, போன வருடம் நான் அவரை மதுரையில சந்திக்க இயலாமல் போனபோதே எடுத்த் முடிவு!
சீனா ஐயா தன்னுடைய துணைவியார்அம்மா.செல்விஷங்கர்
அவர்களுடன்
வந்து சேர்ந்தார். ஸ்ரீதர்,பாலகுமார், மதுரை சரவணன், ஜெரி, தேனி
சுந்தர் ஆகியநண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
காரைக்குடியில் இருந்து நானும் கடைசியாக தருமி ஐயாவும்
வந்து சேர்ந்து
கொண்டார்.
அண்ணன் இராகவனுடன் பேசும்போது நீண்ட நாள்
நண்பருடன் பேசிய
உணர்வு ஏற்பட்டது. மிகுந்த அன்பு மிக்க சகோதரர் ஒருவர்
கிடைத்த
மகிழ்வு எனக்கு.( வலையுலகில் நிறையப்பேருக்கு அவர்
பாசமிகு அண்ணன்!! ).
கலகலப்பான பேச்சுடன் உணவுக்கு விடுதியின் மொட்டை
மாடிக்குச் சென்றோம்.
சைவ உணவு , அசைவ உணவு என்று இரு அணிகளாகப்
பிரிந்து களத்தில் இறங்கினோம்.
ரொட்டி,பிரியாணியை முதலில் கொண்டு வராமல்
வறுவல்மீன், கோழிடிக்கா, இறால் ஆகியவற்றை
( இது உணவக தந்திரமோ?) முதலில் கொண்டு வந்து
வைத்தான் விவரமான சர்வர்.
பசியுடன் ஒரு மரியாதைக்காக பிரியாணி வந்தவுடன்
சாப்பிடலாம் என்று பார்த்தால் மக்கள் அசுர வேகத்தில்
இயங்கி தட்டுகளை காலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பிறகென்ன! நானும் களத்தில் இறங்க
வேண்டியதாயிற்று.
உணவின் ஊடே தான் முன்பு உண்ட பழைய சாதம், தயிர்,
சின்ன வெங்காயத்தின் சுவையை இராகவன் நினைவு
கூர்ந்தார். ஆர்டர் செய்திருந்த வெண்ணெய் போன்ற
தயிர் சாதத்தையும் விடாது வழித்து அடித்தார்
( உணவை மிச்சம் வைக்கக் கூடாதில்ல!!)
ஜெரி ஈசானந்தா,இரா.நைஜீ, தருமி, சரவணன்
உணவு முடிந்து 9.45 போல் ”படம் எடுக்கும் படலம்”
ஆரம்பம்! அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள
சந்திப்பு இனிதே முடிந்தது.
மதுரை உணவகத்தில் இரா.நைஜீரியா கேட்ட வத்தக் குழம்பு மட்டும் கிடைக்கவில்லை( இராத்திரி 9.00 மணிக்கு
வத்தக்குழம்பு இல்லாமல் என்னய்யா ஸ்டார் ஹோட்டல் நடத்துறீங்க? என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை!!! . தலைவர் தொப்பையில்லாமல் வற்றிய வயிறுடன் சிக்ஸ் பேக்கில் இருக்க வத்தக் குழம்புதான் காரணமோ? அடுத்து
இந்த நைஜீரிய எக்ஸ்பிரஸ் செல்லும் ஊர்களில் சுவையான வத்தக்குழம்பு ஏற்பாடு செய்யுங்கள் மக்களே!!
இரவு 12.45க்கு காரைக்குடி வந்து உறங்கிப்போனேன்!!ஒளிப்படங்களைப்பார்க்கவும்!
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Friday, 23 July 2010
மதுரை பதிவர் சந்திப்பு- 20.07.2010
Wednesday, 7 October 2009
மதுரை பதிவர் சந்திப்பு-காணொளி!!
நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் அதனை எடுத்து செய்தல் சிறப்பு. அந்த வழியில் மதுரை பதிவர் சந்திப்பும் ஒரு சிறந்த குறிக்கோளுடன் ஆரம்பித்தது.பல வேலைகளின் காரணமாக என்னால் இந்தக் காணொளியை விரைவில் வெளியிட முடியவில்லை.
.
ஆம்! ”குட் டச்! பேட்டச்” என்று சென்னையில் நடத்தப்பட்ட அந்த சிறப்பு மிகுந்த நிகழ்வை மதுரையிலும் நடத்தலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவர் கூட்டம் கூட்டப்பட்டது!
மதுரை என்றாலேயே கூட்டத்திற்கான இடங்களை ஏற்பாடு செய்வது நம் அன்புப் பதிவர்” தருமி அய்யா” தான். இந்தமுறை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் முழுக் கல்லூரியுமே நம் கைக்கு வந்தார்ப் போல் இருந்தது.
கூட்டத்தில்
1.மருத்துவர் ஷாலினியையே வரவழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவர் சென்னையில் ஏற்கெனவே கலந்து கொண்டு சிறப்புச் செய்தவர் என்பதுவே காரணம்.
2.மூன்று வாரங்களுக்கு முன்பே அவருடைய அனுமதிபெறவேண்டும் என்பதால் இன்னும் தேதி முடிவு செய்யமுடியவில்லை.
3.சுய உதவிக் குழுக்கள், ட்ரஸ்டுகள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றை இதில் இதில் ஈடுபடுத்துவதா? என்று ஆரம்பித்த விவாதம், மதுரையில் உள்ள திருநங்கைகள் நடத்தும் ஒரு அமைப்பை பங்குபெறச் செய்யலாமா? என்பதுவரை சென்று ஒருவாறாக முதல் கூட்டம் பதிவர்கள் மட்டுமே நடத்துவது என்ற தீர்மானத்துடன் முடிந்தது.
4.இதன் பயனாளிகள் மாணவர்கள், குழந்தைகள்தான். அவர்களுக்கு நாம் நேரடியாகச் சொல்ல முடியாது. அவர்களின் பெற்றோர்களையும் நாம் சந்திக்கமுடியாது, ஆகையால் குழந்தைகளின் கட்டாய நேரடித்தொடர்பாளர்களான ஆசிரியர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
5.இதில் ஆர்வமுள்ள ஏனைய பிரிவினரையும் குறிப்பிட்ட அளவில் பங்குபெறச் செய்வது என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.
6.இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் ஒரு தனித் தளமாக ஏற்படுத்தி அனைவரும் படித்துப் பயன்பெற ஏற்பாடு செய்வது என்ற கருத்தும் சொல்லப்பட்டது. யார் இதைச் செய்வது? என்பதில் இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை. மதுரை பதிவர்கள் என்றில்லாமல் யார் முன் வந்தாலும் நல்லதுதான்.
7. பதிவர் திரு.தருமி அவர்களால் இடம் மட்டும் அமெரிக்கன் கல்லூரியில் உள்ள கான்பரன்ஸ் ஹால் என்று உறுதி செய்யப்பட்டது.
8.ஏற்கெனவே மதுரைப் பதிவர் குழு சென்னையில் உள்ள பதிவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இது சம்பந்தமான கருத்து உதவிகள், யோசனைகள் எல்லோரிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.
9.மதுரை மட்டுமல்லாது பிற அகுதிகளிலிருந்தும் நம் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் முன் கூட்டியே கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
1.தருமி-9952116112
2..சீனா-9840624293
3.தேவன்மாயம்- 9751299554--
4.கார்த்திகைபாண்டியன் -9842171138
5.ஸ்ரீதர்-9360688993
5.ஜெரி ஈசானந்தா-9791390002
சந்திப்பின் விபரம்:
மதுரையில் ...
பதிவர்கள் சந்திப்பு
நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை
காலம்: மாலை 4 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்
.
ஆம்! ”குட் டச்! பேட்டச்” என்று சென்னையில் நடத்தப்பட்ட அந்த சிறப்பு மிகுந்த நிகழ்வை மதுரையிலும் நடத்தலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவர் கூட்டம் கூட்டப்பட்டது!
மதுரை என்றாலேயே கூட்டத்திற்கான இடங்களை ஏற்பாடு செய்வது நம் அன்புப் பதிவர்” தருமி அய்யா” தான். இந்தமுறை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் முழுக் கல்லூரியுமே நம் கைக்கு வந்தார்ப் போல் இருந்தது.
கூட்டத்தில்
1.மருத்துவர் ஷாலினியையே வரவழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவர் சென்னையில் ஏற்கெனவே கலந்து கொண்டு சிறப்புச் செய்தவர் என்பதுவே காரணம்.
2.மூன்று வாரங்களுக்கு முன்பே அவருடைய அனுமதிபெறவேண்டும் என்பதால் இன்னும் தேதி முடிவு செய்யமுடியவில்லை.
3.சுய உதவிக் குழுக்கள், ட்ரஸ்டுகள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றை இதில் இதில் ஈடுபடுத்துவதா? என்று ஆரம்பித்த விவாதம், மதுரையில் உள்ள திருநங்கைகள் நடத்தும் ஒரு அமைப்பை பங்குபெறச் செய்யலாமா? என்பதுவரை சென்று ஒருவாறாக முதல் கூட்டம் பதிவர்கள் மட்டுமே நடத்துவது என்ற தீர்மானத்துடன் முடிந்தது.
4.இதன் பயனாளிகள் மாணவர்கள், குழந்தைகள்தான். அவர்களுக்கு நாம் நேரடியாகச் சொல்ல முடியாது. அவர்களின் பெற்றோர்களையும் நாம் சந்திக்கமுடியாது, ஆகையால் குழந்தைகளின் கட்டாய நேரடித்தொடர்பாளர்களான ஆசிரியர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
5.இதில் ஆர்வமுள்ள ஏனைய பிரிவினரையும் குறிப்பிட்ட அளவில் பங்குபெறச் செய்வது என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.
6.இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் ஒரு தனித் தளமாக ஏற்படுத்தி அனைவரும் படித்துப் பயன்பெற ஏற்பாடு செய்வது என்ற கருத்தும் சொல்லப்பட்டது. யார் இதைச் செய்வது? என்பதில் இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை. மதுரை பதிவர்கள் என்றில்லாமல் யார் முன் வந்தாலும் நல்லதுதான்.
7. பதிவர் திரு.தருமி அவர்களால் இடம் மட்டும் அமெரிக்கன் கல்லூரியில் உள்ள கான்பரன்ஸ் ஹால் என்று உறுதி செய்யப்பட்டது.
8.ஏற்கெனவே மதுரைப் பதிவர் குழு சென்னையில் உள்ள பதிவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் இது சம்பந்தமான கருத்து உதவிகள், யோசனைகள் எல்லோரிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.
9.மதுரை மட்டுமல்லாது பிற அகுதிகளிலிருந்தும் நம் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் முன் கூட்டியே கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
1.தருமி-9952116112
2..சீனா-9840624293
3.தேவன்மாயம்- 9751299554--
4.கார்த்திகைபாண்டியன் -9842171138
5.ஸ்ரீதர்-9360688993
5.ஜெரி ஈசானந்தா-9791390002
சந்திப்பின் விபரம்:
மதுரையில் ...
பதிவர்கள் சந்திப்பு
நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை
காலம்: மாலை 4 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்
Subscribe to:
Comments (Atom)