Tuesday, 27 April 2010

ஜெஸ்வந்தி!!

பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில்நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான்அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.”

என்று என் மீது இரக்கப்பட்டு அன்புடன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.

இந்த அன்பு விருதை நான் நால்வருக்கு அளிக்க வேண்டும்.

1. சொல்லும்படியாக ஒன்றுமில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள விரும்புவது தமிழ்பற்றுள்ள தமிழர்களில் ஒருவன் என்று சொல்லும் அன்பு நண்பன் பிரவீன்

தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..! என்ற அவர் தளத்தில் அவர் படைப்புக்களைப் பாருங்கள்!

My Photo

2.ஹரிணிஅம்மா  சில கவிதைகள் மட்டும் எழுதும் இவரது தளத்தையும் பாருங்கள்.

My Photo

3.அசை போடுவது! சீனா ! வலைச்சரம் நடத்தும் மார்க்கண்டேயன் இவர்.

My Photo

4.ஜெரி ஈசானந்தா- ஒருமை 

அவரவர்களுக்கான உலகம்,அதில் அவரவர்களுக்கான பயணம்,இதில் நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே  என்று சொல்லும் ஜெரி கோபக்காரப்பதிவர்.

My Photo

இன்னும் நண்பர்கள் மீதமிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் விருது தரலாம் என்பதால் இந்த விருதை மேல் கண்ட நால்வருக்கும் அளிக்கிறேன்.

தமிழ்த்துளி தேவா.

Friday, 16 April 2010

அன்றாடம் சூழல் மாசு குறைக்க-

உலக வெப்பமயமாதல், அதிக எரிசக்தி உபயோகித்தல், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியவை தற்போது மிகப் பெரும் பிரச்சினைகளாக  உருவெடுத்துள்ளன. பெரிய தொழிற்சாலைகள், வாகனங்கள் இவற்றால்தான் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாமல்   இதில் நம் பங்கு என்ன? என்று யோசித்து ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று சில யோசனைகள் கீழே தொகுத்துள்ளேன்.
1.குளிக்கும் போது ஷவர் உபயோகித்தால் நல்ல நவீன ஷவர் வாங்கி உபயோகிக்கவும். இதனால் தண்ணீர் 60% குறைகிறதாம்.
2.பினைல் போன்றவை தவிர்த்து பேகிங் சோடா, உப்பு,வினிகர் போன்றவை கொண்டு வீட்டைத் தூய்மைப் படுத்தலாம்.
3.எனர்ஜி ஸ்டார் முத்திரையுள்ள மின் சாதனங்களை உபயோகித்தல் மிகவும் நல்லது.
4.வீட்டில் செடிகள் நிறைய தொட்டிகளில் வளர்க்கலாம்.
5.கம்பியூட்டரை எப்போதும் ஆனில் வைத்திருக்கக் கூடாது. அணைத்து வைத்துத் தேவைப்படும்போது உபயோகித்தால் நிறைய மின்சாரம் மிச்சமாகும்.
6.15 நிமிடத்துக்கு மேல் அறையைவிட்டு வெளியில் வந்தால் மின் விளக்குகளை அணைத்துவிடவும்.
7.கம்பியூட்டருக்கு எல்.சி.டி. மானிட்டர் மாற்றவும். சி.ஆர்.டி மானிட்டரைல் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரம் இதற்குப்போதுமானது.
8.மின் விளக்குகளை சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி மின் விளக்குக்களாக மாற்றவும்.
9.தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டாம். 86% பாட்டில்கள் நிலத்தில் போடப்பட்டு நிலத்தைப் பாழ்படுத்துகின்றன.
10.குளிர்ந்த நீரில் துணி துவைக்கவும்.  மிஷினில் துவைத்தால் 85% சக்தி விரயம் ஏற்படுகிறதாம்.
இவற்றுடன் உங்கள் குழந்தைகளுக்கு சக்தியை சேமிக்கவும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவும் கற்றுக்கொடுங்கள்.
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory