Showing posts with label சர்க்கரை நோய். Show all posts
Showing posts with label சர்க்கரை நோய். Show all posts

Saturday, 2 February 2013

சர்க்கரை நோய்- பரிசோதனை!


நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது இன்சுலின் குறைவதனால் ஏற்படுகிறது என்று அறிவோம்.
அதற்கு மாத்திரை வடிவிலும் ஊசி மருந்துகளின் வடிவிலும் சிகிச்சைகள் உள்ளன. சிலர் மாத்திரை மட்டும் சாப்பிட விரும்புவர். இன்சுலின் போடாமலேயே உணவுக் கட்டுப்பாட்டிலேயே நான் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வேன் என்றும் கூறுவார்கள்.
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் போட்டுக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே அவர்கள் மாத்திரை மட்டும் போதும் என்று மருத்துவரிடம் வாதாடுவார்கள்.
 டாக்டர் இன்சுலின் போடச் சொன்னார் ஆனால் நான் மாத்திரையில் அரை மாத்திரை கூட்டி சாப்பிட்டேன் இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை எதன் அடிப்படையில் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சை ரத்த்த்தில் சர்க்கரையின் அளவைப் பொறுத்ததா?
 என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
நீரிழிவு நோயாளியின் கணையம் எந்த அளவுக்கு வேலை செய்கிறதோ அதை வைத்துதான் நோயின் தீவிரம் அறியப் பட்டு அதற்கான சிகிச்சையும் தீர்மானிக்கப்படுகிறது.
மாத்திரை மருந்துகளின் அளவை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ முன் கணையம் எப்படி வேலை செய்கிறது, இன்சுலின் எவ்வளவு சுரக்கிறது என்று அறிந்து கொள்வதே சிறந்தது.

முதலில்
1.இன்சுலின் சுரப்பு இருக்கிறதா? இல்லையா?
2.குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா?
என்று  தெரிய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக இதைத் தெரிந்து கொள்ளும் பரிசோதனைகளில் ஒன்று சி-பெப்டைட் பரிசோதனை. இந்த சி-பெப்டைடானது ரத்த்த்தில் இன்சுலின் எவ்வளவு உள்ளதோ அதே அளவுதான் இந்த சி-பெப்டைடும் இருக்கும். பெரும்பாலும் சர்க்கரைக்கான இரத்தப் பரிசோதனைகளில் இதுவும் இருக்கும்.
1.சி பெப்டைட் உதவியுடன் நாம் நீரிழிவு நோய் முதல் வகையா அல்லது இரண்டாவது வகையா என்பதனை அறியலாம்.
2.நோயாளிகளின் சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதற்கான காரணம் அறிய.

நீரிழிவு நோய் முதல் வகையில் கணையம் இன்சுலினை சுரக்காது. அந்த நோயாளிகளில் சி.பெப்டைடு அளவு இரத்தத்தில் மிகக்குறைவாக இருக்கும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயில் சி.பெப்டைட் அளவு சரியாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.


Wednesday, 14 July 2010

சர்க்கரை நோய் ஏன் வருகிறது? முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!

சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.ஆயினும் சர்க்கரை நோய்
  • ஏன் சர்க்கரை நோய் வருகிறது?
  • என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..எனக்கு வருமா?
என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர். இதற்கு நாம் அறிவியல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இக்கட்டுரை இந்த நோய் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர் குடும்பத்தினருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக எழுதியுள்ளேன். இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்கள், இத்தகைய கட்டுரைகளின் தேவை பற்றி எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நீரிழிவு நோயைப் பொதுவாக  இரண்டு வகைப்படுத்தலாம்.
1.முதல்வகை நீரிழிவு நோய்
2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.
நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன. 
  • மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்கு வரலாம். அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம். தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும் அதிகம். 
  • உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவான உணவு 
  • உடல் எடை, கொழுப்பு அதிகம்
  • உடலுழைப்பற்ற வேலை
  • மன அழுத்தம்
  • மருந்துகளால் - வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சில மருந்துகள்   நீரிழிவு நோயைத் தூண்டுபவை.
  • கணையத்தில் கிருமித் தொற்று.
  • இரத்த அழுத்தம்
  • இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்
  • புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும். 

முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வகை நீரிழிவு( Type 1 Diabetes Mellitus)
இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)
இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.
இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.
நோய் வருவதைத் தடுக்க முடியாது.
நோய் வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்க முடியாது.
தடுக்கலாம்.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.
85% பேர் இந்த வகையினர்!
சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)
நடு வயதில் ஆரம்பிக்கும்.

இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம்.நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.
நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும். குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும். அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.  
.நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.
இன்சுலின் ஊசி அவசியம், தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும். ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும். 
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
 இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory