Friday 11 September 2009

கொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

வானவெளியையும்
நட்சத்திரங்களையும்
தாண்டி
என் கண்ணீர் உன்னை
அடையும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!

32 comments:

Jerry Eshananda said...

டாக்டருக்கே "காதல் வைரஸ் தொத்திக்கிச்சு" வீட்ல எங்க ஊருக்கு போயிருக்காங்களா?

பாலா said...

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

யப்பப்பா அருமைங்கோ

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆன்ம வெளி இது புதுசு

ஆஹா

ஈரோடு கதிர் said...

//உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை! //

கிறங்கடிக்கும் வரிகள்

ஹேமா said...

காலையில் காதல் தேநீர் தித்திப்பாய்.வாழ்த்துக்கள்.

தேவா,இண்ணைக்கு வைத்தியசாலைக்குப் போறதா இல்லையா !

சிங்கக்குட்டி said...

நல்ல சுவை உங்கள் தேநீர்..நன்றி.

S.A. நவாஸுதீன் said...

கவிதை கலக்கலா இருக்கு தேவா சார்

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

டாக்டர். அசத்தல் போங்க

Anonymous said...

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!
ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!

இது தான் காதல் என்பதா?

ஆம் நாங்களும் விரும்புகிறோம் உங்கள் கவிதையை!!!

Unknown said...

//ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!


ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!//

அருமை..

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
டாக்டருக்கே "காதல் வைரஸ் தொத்திக்கிச்சு" வீட்ல எங்க ஊருக்கு போயிருக்காங்களா?

11 September 2009 23:04/

ஜெரி! இந்த வைரஸ் பாதிக்காத ஆள் யாரும் உண்டா!

தேவன் மாயம் said...

பாலா said...
ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

யப்பப்பா அருமைங்கோ

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆன்ம வெளி இது புதுசு

ஆஹா

11 September 2009 23:3//

பாலா! ரசிப்புக்கு ...நான் என்ன சொல்ல!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
//உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை! //

கிறங்கடிக்கும் வரிகள்

12 September 2009 00:01///

ஒரு கிறக்கத்தில் எழுதுவதுதான்!

தேவன் மாயம் said...

ஹேமா said...
காலையில் காதல் தேநீர் தித்திப்பாய்.வாழ்த்துக்கள்.

தேவா,இண்ணைக்கு வைத்தியசாலைக்குப் போறதா இல்லையா !

12 September 2009 00:04//

அதுக்கும் போய் வந்தாச்சு!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை கலக்கலா இருக்கு தேவா சார்

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

டாக்டர். அசத்தல் போங்க

12 September 2009 00:33//

வரிகள் வந்து விழுந்தது!

அகல்விளக்கு said...

//இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!//

அற்புதம்...

ஆழமான கவிதை...


காதல் செய்யாமல் இக்கவிதை வர வாய்ப்பே இல்லையே!!!

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
நல்ல சுவை உங்கள் தேநீர்..நன்றி//

சிங்கமே தேநீர் அருந்தியதா !

தேவன் மாயம் said...

தமிழரசி said...
இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!
ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!

இது தான் காதல் என்பதா?

ஆம் நாங்களும் விரும்புகிறோம் உங்கள் கவிதையை!!!

12 September 2009 00:46//
ஆம் நாங்களும் விரும்புகிறோம் உங்கள் கவிதையை!!!
//
அதானே பார்த்தேன்!

தேவன் மாயம் said...

Mrs.Faizakader said...
//ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!


ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!//

அருமை..

12 September 2009 01//

எப்படி ஓகேயா!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
//இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!//

அற்புதம்...

ஆழமான கவிதை...


காதல் செய்யாமல் இக்கவிதை வர வாய்ப்பே இல்லையே!!!

12 September 2009 03:05//

இப்பிடி ஒரு போட்டுக் கொடுத்தலா!

SUFFIX said...

உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிங்க டாக்டர்.

Unknown said...

Kavithai Arumai Anna.....
Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe....

Anonymous said...

அழகு...நானும் விரும்புகிறேன் இந்த கவிதையைய்... அழகான வார்த்தைகளில் அள்ளி கோர்த்து இருக்கிறீர்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//வானவெளியையும்
நட்சத்திரங்களையும்
தாண்டி
என் கண்ணீர் உன்னை
அடையும்வரை! //

கண்ணீர் மட்டுமே மிச்சம் காதலில்...

ரொம்ப ரசனையா எழுதுறீங்களே சார்...

அகல்விளக்கு said...

//Pradeepa said...

Kavithai Arumai Anna.....
Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe....
//

ரிவீட்டேய்.....

உஸ்ஸ்ஷ்ஷ்ஷ்யப்பா...

ரிப்பீட்டேய்.....

தேவன் மாயம் said...

ஷ‌ஃபிக்ஸ் said...
உண்மைய ரொம்பவே ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கிங்க டாக்டர்.

12 Septembe///

நன்றி ஷபிக்ஸ்!!

தேவன் மாயம் said...

Pradeepa said...
Kavithai Arumai Anna.....
Kathalil vizunthal Kavithai varum ennbarkal... Athu eduthanoe...//

இதேதான்!!

துபாய் ராஜா said...

அருமை.அருமை.காதல் வரிகள் அனைத்தும் இனிமை.இனிமை.

வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

இளமையில் காதல் - இளைஞ்ர்கள் தூள் கிளப்புகின்றனர் - கவிதைகளில்

நடுவயதில் காதல் - இவர்களும் இப்பொழுது கவிதை அருமையாக எழுத ஆரம்பித்து விட்டனர்.

நல்ல கவிதை - காதல் கவிதை - ஏன் ஒருதலைக் காதலா இது -

ரசித்தேன்

நல்வாழ்த்துகள் நண்பா தேவா

மங்களூர் சிவா said...

/
உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
/

கொலை கேஸ் ஆகீடப்போகுது டாக்டர்!
:))

மங்களூர் சிவா said...

கவிதை நல்லா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை! ]]

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆழமான கவிதை

சுந்தர் said...

ரொம்ப ஆழமான வரிகள் .., டச்சிங்கா இருக்கு !

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory