Wednesday, 1 July 2009

போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

 

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம் …

கீழ்வரும் தலைப்புகளில் எழுதவேண்டும்...

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  science@sgtamilbloggers.com
1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை
2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)
4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்
5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்
6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

 

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  literature@sgtamilbloggers.com
1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை
2) மொழி/நிலம் சார்ந்த அறிவு
3) திணையும், நிலமும்
4) தமிழர் இசை
5) குறளில் மேலாண்மை
6) சங்கம் மருவிய காதல் இன்று
7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு

படைப்புகள் இந்தத் தலைப்புகளில் எழுதவேண்டும்!மேலும் அறிய மணற்கேணி

என்ன மக்களே சிங்கப்பூர் செல்ல தயாரா?

தமிழ்த்துளி தேவா..

நான் ரஜினி கமலிடம் நிற்கமாட்டேன்!!

kamal_and_rajini_kamal-r01.jpg image by sathishcoumarரஜினி கமல் இருவரும் தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இருவரையும் வைத்துப் படம் எடுப்பது பற்றி பலரும் பேசிவருகிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள்.

ஆனால் யாருக்கும் இதுவரை அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆமா!! அது பெரிய விசயங்க.

ரஜினி கமல் இரண்டு பேரையும் வைத்து எடுக்கும் தயாரிப்பாளராகட்டும், இயக்குனராகட்டும் பெரும் பணம் சம்பாதிக்கப்போவது உறுதி. இது நம்ம நடிகர்களுக்குத் தெரியாதா என்ன? அதனால் இதில் பெரும் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் முயற்சி செய்து  வருகிறார்கள்.

கமலை வைத்து தசாவதாரமும், ரஜினியை வைத்து படையப்பாவும் தந்து வெற்றிகரமான் இயக்குனராக இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். இரண்டு பேரையும் சமாளித்துப் படம் பண்ணும் திறமையாளர்களில் இவர் முன்னணியில் உள்ளார்.

நல்ல கதையும் சந்தர்ப்பமும் அமைய வேண்டும் என்று இரு நடிகர்களும் தப்பித்துக்கொண்டுள்ள சமயத்தில் டைரக்டர்.ரவிக்குமாரிடம் இதைப்பற்றிக்கேட்ட போது” ரஜினி,கமல் இருவருக்கும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை.  யாராவது சரியானமுறையில் தூண்டிவிட்டால்தான் இது நடக்கும். அப்படியே நடக்கும்பட்சத்தில் அந்த பட்ஜெட் தாங்கக்கூடிய தயாரிப்பாளர்  வேண்டும்.”

”என்னைய விட்டு விடுங்க! நான் அவர்களிடம் போய் படம் செய்யுங்க என்று நிற்க மாட்டேன்.நான் ஏதோ பணம் பண்ண ஆசைப்பட்டு வருவதாக சொல்வார்கள்” என்று தப்பித்துவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். திரையுலகம் புத்துணர்ச்சி பெற இத்தகைய முயற்சிகள் தேவை. மலையாளப் பட உலகில் மம்முட்டி,மோகன்லால் எல்லாம் சேர்ந்து நடிப்பது சாதாரணம்!!

நம் தமிழ்ப் பட உலகில் இது சாத்தியப்படவில்லை!! ஏன்?

ரசிகர்களின் இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

தமிழ்த்துளி.தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory