Showing posts with label thevanmayam. Show all posts
Showing posts with label thevanmayam. Show all posts

Sunday, 5 July 2009

கல்யாணம் என்றால்?

 

 

clip_image002[4]

இணை பிரி யாது வாழ்வோம்!

 

clip_image002[6]

இருவர் பாதையும் ஒரே வழியில்!!

clip_image002[8]

ஒருவரையொருவர் செல்லமாக்கூப்பிட்டுக்குவோம்!!!

clip_image002[10]

கடைக்கே ஒன்னாத்தான் போவோம்!!!!

clip_image002[12]

ஒரே டி.வி.சேனல்தான் பார்ப்போம்!!!!

clip_image002[14]

பிரச்சினைகளே பெருந்தன்மையுடன்

தீர்த்துக்கொள்வோம்!!!!

clip_image002[16]

ஆபீஸ் போகும் போது செருப்பு

எடுத்துக்கொடுத்து அனுப்புவேன்!!

clip_image002[18]

எப்பவுமே உன் நினைப்புதாண்டி!!!!

clip_image002[20]

நான் மட்டும் என்ன!

ராசாவை எண்ணி இந்த ரோசா

காத்திருக்கு!!! பூத்திருக்கு!!

வாடா மவனே!!!

தமிழ்த்துளி

தேவா!!

Wednesday, 1 July 2009

நான் ரஜினி கமலிடம் நிற்கமாட்டேன்!!

kamal_and_rajini_kamal-r01.jpg image by sathishcoumarரஜினி கமல் இருவரும் தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இருவரையும் வைத்துப் படம் எடுப்பது பற்றி பலரும் பேசிவருகிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள்.

ஆனால் யாருக்கும் இதுவரை அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆமா!! அது பெரிய விசயங்க.

ரஜினி கமல் இரண்டு பேரையும் வைத்து எடுக்கும் தயாரிப்பாளராகட்டும், இயக்குனராகட்டும் பெரும் பணம் சம்பாதிக்கப்போவது உறுதி. இது நம்ம நடிகர்களுக்குத் தெரியாதா என்ன? அதனால் இதில் பெரும் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் முயற்சி செய்து  வருகிறார்கள்.

கமலை வைத்து தசாவதாரமும், ரஜினியை வைத்து படையப்பாவும் தந்து வெற்றிகரமான் இயக்குனராக இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். இரண்டு பேரையும் சமாளித்துப் படம் பண்ணும் திறமையாளர்களில் இவர் முன்னணியில் உள்ளார்.

நல்ல கதையும் சந்தர்ப்பமும் அமைய வேண்டும் என்று இரு நடிகர்களும் தப்பித்துக்கொண்டுள்ள சமயத்தில் டைரக்டர்.ரவிக்குமாரிடம் இதைப்பற்றிக்கேட்ட போது” ரஜினி,கமல் இருவருக்கும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை.  யாராவது சரியானமுறையில் தூண்டிவிட்டால்தான் இது நடக்கும். அப்படியே நடக்கும்பட்சத்தில் அந்த பட்ஜெட் தாங்கக்கூடிய தயாரிப்பாளர்  வேண்டும்.”

”என்னைய விட்டு விடுங்க! நான் அவர்களிடம் போய் படம் செய்யுங்க என்று நிற்க மாட்டேன்.நான் ஏதோ பணம் பண்ண ஆசைப்பட்டு வருவதாக சொல்வார்கள்” என்று தப்பித்துவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். திரையுலகம் புத்துணர்ச்சி பெற இத்தகைய முயற்சிகள் தேவை. மலையாளப் பட உலகில் மம்முட்டி,மோகன்லால் எல்லாம் சேர்ந்து நடிப்பது சாதாரணம்!!

நம் தமிழ்ப் பட உலகில் இது சாத்தியப்படவில்லை!! ஏன்?

ரசிகர்களின் இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

தமிழ்த்துளி.தேவா.

Monday, 22 June 2009

என் கவிதைகள்!!

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!

அதில் உங்களுக்கான்

தூண்டில்கள் இல்லை!



ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!



ஒரு பைன் மரக்காட்டைக்

கடந்து செல்லும்

பயணி போல்

என் கவிதை

உங்களைக் கடந்து செல்லும்!



ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!



உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!



முகம் அறியாத

குயிலின் பாடல்போல்

கடந்து செல்லும்

இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!



தமிழ்த்துளி தேவன்மாயம்...

Saturday, 20 June 2009

சும்மா ஜாலியா!!

 

அழகிய படங்கள் சிலவற்றைப்பார்க்க நேர்ந்தது. படங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் இருந்தன. இதோ அவற்றை உங்களுக்காகத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்..

1.க்ளென் கேன்யான் -- அமெரிக்க அரிசோனா, வுடா பகுதியில் உள்ளது.கொலராடோ நதியோட்டத்தால் உருவாகியுள்ளது இந்த அழகிய இடம்.

2. எவ்வளவு கற்பனைத்திறனுடன் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பார்த்தீர்களா?

3. சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?.

4. எந்தப்புண்ணியவான் வரைந்தான் என்று தெரியவில்லை. இப்படி ஒரு வீட்டில் இருப்பது என்று யோசித்தேன். தலை சுத்துதுப்பா!!.

5.பார்க்கத்திகட்டாத நம் நாட்டு அற்புதம்.

நான் இந்தக் கோணத்தில் தாஜ்மஹாலைப் பார்த்தேன். சுட்டேன்.நீங்களும் ரசியுங்கள்.

6.பெண் பதிவர்களே! பார்த்தீர்களா? இந்த வார இறுதியில் உங்கள் உள்ளம் குளிரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்படம்....யாரும் என்னைத் திட்டவேண்டாம்.......

மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!!

7.உலகின் மிகச்சிறிய மனிதர்..ஹெ பிங்பிங் என்ற பெயருள்ள இந்தக் குட்டி மனிதர் ரஷ்யாவின் நீளக்கால் அழகி ஸ்வெட்லானாவின் கீழ்!! இவரின் ஊயரம் 74.61செ.மீ.!!!!!ஸ்வெட்லானாவின் கால் நீளம் 132செமீ!! இரண்டுமே கின்னஸ் சாதனைகள்!!

8.என்ன வெளையாடுறீங்களா! மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்! சீவி!!!

வார இறுதியை மகிழ்ச்சியாகக் கழியுங்கள் மக்களே!!

தமிழ்த்துளி தேவா...

-------------------------------------------------------------------------------

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory