Saturday 1 August 2009

உண்மை நட்பு !

அன்பு நண்பர்களே!!

இனிய நட்பு நாள் வாழ்த்துக்கள்!!  நட்பு என்பது மிகச்சிறந்த ஒன்று. பள்ளியில் கிடைத்த நட்புகள் போடா! வாடா! என்று உரிமையுடன் தொடர்வதை நாம் இன்றும் காண்கிறோம்.

அதன் பிறகு கல்லூரியில் ஒரு நட்பு வட்டம். இந்த இரண்டு  நட்பு வட்டம் போல் அதன் பிறகு அமைவதில்லை.

ஆயினும் பள்ளி கல்லூரி நட்புக்கள் கால வெள்ளத்தில் வேலை தேடி, சொந்த ஊர் நோக்கி என பிரிந்து தனியனாய் நாம் திரியும் நிலையும் வருகிறது.

வேலை இடத்து நட்பு ஆழமாக அமைவது நம் அதிர்ஷ்டமே!! பெரும்பாலும் ஒரு வரையறைக்குள்தான் பழக முடிகிறது!!

“ சார் நலமா?” போன்ற வார்த்தைகள் ஆழ்ந்த நட்பிலிருந்து சற்று தூரத்திலேயே உள்ளன!!

பணியிடங்களில் பதவி, வயது ஆகியவற்றுக்கு மரியாதை கொடுத்தே பழக வேண்டியுள்ளது. ஒத்த ரசனையுள்ள நண்பர்கள் அமைவதும் வெகு அரிதே!!

தற்போது இணையத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதுவும் மதுரை இளம் பதிவர்கள் போடா வாடா என்று கூப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி வருகிறார்கள்.

பெண் பதிவர்களே துணிவுடன் ”பல்லை உடைத்துவிடுவேன்டா!!” என்று அன்புடன் கடிக்கும் அளவுக்கு நம் பதிவுலக இளைஞர்கள் நயமானவர்களாக இருப்பது மிகச் சிறப்பு.

இந்த அன்பு வட்டங்கள் பெருக வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

உண்மை நட்புக்கு ஒரு சிறு கதை:

கிரேக்க நாட்டில் சாக்ரடீஸ் ஒரு பெரிய மேதை என்பது அனைவருக்கும் தெரியும். அவரிடம் ஒருவர் வந்து “ உங்கள் நண்பரைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன்” என்று கூறினார்.

சாக்ரடீஸ் அவரை நோக்கி சற்றுப்பொறு செய்தியைச் சொல்லவேண்டுமென்றால்  அது என் 3 வடிகட்டி சோதனைகளைக் கடந்தாக வேண்டும்” என்று சொல்லி,

1.உண்மை: ”உனக்கு அந்தச் செய்தி உண்மை என்று 100% தெரியுமா?” என்றார். அவன் தெரியாது என்றான்.

2.தன்மை: அந்தச் செய்தி நல்ல செய்தியா? என்று கேட்டார். அதற்கும் அவன் இல்லை என்றான்.

3.பயன்: நீ என் நண்பரைப் பற்றிச் சொல்லும் செய்தி ஏதாவது ஒரு வகையில் எனக்கோ, எங்கள் நட்புக்கோ பயன் தருமா? - என்று கேட்டார். அதற்கும் அவன் இல்லை என்றான்.

சாக்ரடீஸ் கூறினார்:   நீ சொல்லப்போகும் செய்தி உண்மையில்லாத, தீய, பயனில்லாதது. அதை நீ என்னிடம் சொல்லவேண்டாம். நீ போகலாம் என்றாராம்.

எவ்வளவு அருமையான கதை. !!!

அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....

தமிழ்த்துளி தேவா.

27 comments:

சிநேகிதன் அக்பர் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தேவா.

S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்

sakthi said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

sakthi said...

அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....

repeating deva sir

அதிரை அபூபக்கர் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. திரு.தேவா அவர்களே

அப்துல்மாலிக் said...

//அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....

/

நானும் கூவிக்கிறேன்...

தொடரட்டும் நம் நட்பு

என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவுசெய்துக்கிறேன்

மாதேவி said...

"அன்பு வட்டங்கள் பெருக வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்".

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....//

நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழா

வெற்றி-[க்]-கதிரவன் said...

nadatthunga nadatthunga -:)

வழிப்போக்கன் said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்..
அருமையான பதிவு...

Unknown said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

ப்ரியமுடன் வசந்த் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மேவி... said...

வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள். தொடரட்டும் நமது நட்பு (பூ)!

குடந்தை அன்புமணி said...

சாக்ரடீஸ் சிறுகதை சூப்பரு!

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்..;-)))

சுந்தர் said...

நம்ம பக்கம் வராத நண்பருக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

vasu balaji said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Menaga Sathia said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இளைய கவி said...

ரொம்ப பீலிங்கா இருக்கு தல... நாங்க அல்லாம் உங்க கூட்டணிதான் எப்போதுமே. மெர்சலாகத தலிவா..

pudugaithendral said...

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

Blogger அக்பர் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தேவா.///

அகபர் வாங்க!!
--------------------------------

01 August 2009 23:38
Blogger S.A. நவாஸுதீன் said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்///

நன்றி நவாஸ்!!
---------------------------------

02 August 2009 00:17
Blogger நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.///

ஜமால் நன்றி
-----------------------------

02 August 2009 00:40
Blogger சிங்கக்குட்டி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்//

நன்றி!!
------------------------------

02 August 2009 01:01
Blogger sakthi said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

02 August 2009 01:47
Blogger sakthi said...

அன்பு நண்பர்களே என் பதிவுகளிலோ,பின்னூட்டங்களிலோ, சொற்களிலோ உங்கள் மனதைப் புண்படுத்தும்படி ஏதேனும் அமைந்திருந்தால் அதை மறந்து விடவும்.. நல்ல நட்புகள் தொடரட்டும்.....

repeating deva sir///

புது சக்தி கிடைத்தது...........

-----------------------------

02 August 2009 01:47
Blogger அதிரை அபூபக்கர் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. திரு.தேவா அவர்களே///

வாங்க அபு!!
-----------------------------

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory