Thursday 27 August 2009

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!

சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.

இஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.

நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

 மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:

அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

39 comments:

*இயற்கை ராஜி* said...

உபயோகமான பதிவு

நட்புடன் ஜமால் said...

சமையத்திற்கேற்ற சிறந்த பதிவு


நன்றி நண்பரே!

Jerry Eshananda said...

ரமலான் நேரத்தில் இனிப்பான செய்தி,படங்கள் சூப்பர்.

தேவன் மாயம் said...

இய‌ற்கை said...

உபயோகமான பதிவு//
நன்றி இயற்கை!!

தேவன் மாயம் said...

27 August 2009 07:06
Delete
Blogger நட்புடன் ஜமால் said...

சமையத்திற்கேற்ற சிறந்த பதிவு


நன்றி நண்பரே///

உபயோகப்பட்டால் நல்லது!

தேவன் மாயம் said...

Blogger jerry eshananda. said...

ரமலான் நேரத்தில் இனிப்பான செய்தி,படங்கள் சூப்பர்.//

ரமலான் வாழ்த்துக்கள்!!

Unknown said...

நன்றி.

மிகவும் உபயோகமான பதிவு.

:)

வழிப்போக்கன் said...

பயனுள்ள தகவல்..
பகிர்வுக்கு நன்றி..

Thamiz Priyan said...

நன்றி டாக்டர்!

தேவன் மாயம் said...

Mãstän said...

நன்றி.

மிகவும் உபயோகமான பதிவு.

:)///

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

வழிப்போக்கன் said...

பயனுள்ள தகவல்..
பகிர்வுக்கு நன்றி.///

வருகைக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

Blogger தமிழ் பிரியன் said...

நன்றி டாக்டர்!///

வருகைக்கு நன்றி!

சொல்லரசன் said...

காலத்திற்கேற்ற நல்லதொருபதிவு

Ashok D said...

கலக்கறிங்க சார்

sakthi said...

உபயோகமிக்க பதிவு டாக்டர்

அ.மு.செய்யது said...

டைமிங் க‌ட்டுரை !!!

நன்றி தேவா விளக்கத்திற்கு !!

என் த‌ந்தைக்கும் இந்த‌ ப‌திவை மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பி விட்டேன்.

அமர பாரதி said...

நல்ல உபயோகமான பதிவு தேவா. ஆனால் மாத்திரைகளின் பெயரைப் போடுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. பதிவைப் படிப்பவர்கள் தானே டாக்டராகி விடும் அபாயம் இருக்கிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவில் அருமையான தகவல்கள்

வால்பையன் said...

மருந்து தான் காப்பாத்துமா!?
கடவுள் காப்பாத்தமாட்டாரா!?

வால்பையன் said...

நம்பிக்கையாளர்கள் மன்னிக்கனும்!
என்புத்தி எங்க போனாலும் இப்படி தான்!

shahul said...

நல்ல உபயோகமான பதிவு.

நன்றி.

சாகுல்
ரியாத்

கலாட்டாப்பையன் said...

காலத்தினர் செய்த உதவி சிறிதெனினும்..........என்ற குறளுகேற்ப அருமையான பதிவு.உங்கள் வலைப்பூவில் இது எனது முதல் பின்னுட்டம்...இனி தொடரும்

\\மருந்து தான் காப்பாத்துமா!?
கடவுள் காப்பாத்தமாட்டாரா!?//

அந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......???

நட்புடன்
திருச்சிகாரன்.

பயனுள்ள தகவல்கள் said...

நோன்பு திறக்கம் போது மட்டும் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்

ஆ.ஞானசேகரன் said...

நல்லது,...

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
காலத்திற்கேற்ற நல்லதொருபதிவு
//

உபயோகம் இருந்தால் சரிதான்!!
----------------------------
27 August 2009 08:14


D.R.Ashok said...
கலக்கறிங்க சார்///

நன்றி அசோக்!
------------------------------

27 August 2009 08:27


sakthi said...
உபயோகமிக்க பதிவு டாக்டர்///

சக்தி நன்றி
-----------------------------

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said...
டைமிங் க‌ட்டுரை !!!

நன்றி தேவா விளக்கத்திற்கு !!

என் த‌ந்தைக்கும் இந்த‌ ப‌திவை மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பி விட்டேன்///

மிகுந்த மகிழ்ச்சி செய்யது!!

தேவன் மாயம் said...

அமர பாரதி said...
நல்ல உபயோகமான பதிவு தேவா. ஆனால் மாத்திரைகளின் பெயரைப் போடுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. பதிவைப் படிப்பவர்கள் தானே டாக்டராகி விடும் அபாயம் இருக்கிறது///

உண்மை!! அப்படி நடக்காது என நம்புவோம்!!

தேவன் மாயம் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதிவில் அருமையான தகவல்கள்
//

நன்றி ஸ்டார்ஜான்!!1
-------------------------
27 August 2009 10:19


வால்பையன் said...
மருந்து தான் காப்பாத்துமா!?
கடவுள் காப்பாத்தமாட்டாரா!?

27 August 2009 10:23


வால்பையன் said...
நம்பிக்கையாளர்கள் மன்னிக்கனும்!
என்புத்தி எங்க போனாலும் இப்படி தான்!
///

இதெல்லாம் தப்பா எடுக்கமாட்டாங்க வால்ஸ்!!!
------------------------------
27 August 2009 10:24

தேவன் மாயம் said...

shahul said...
நல்ல உபயோகமான பதிவு.

நன்றி.

சாகுல்
ரியா///

சாகுல் வருகைக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

திருச்சிகாரன் said...
காலத்தினர் செய்த உதவி சிறிதெனினும்..........என்ற குறளுகேற்ப அருமையான பதிவு.உங்கள் வலைப்பூவில் இது எனது முதல் பின்னுட்டம்...இனி தொடரும்

\\மருந்து தான் காப்பாத்துமா!?
கடவுள் காப்பாத்தமாட்டாரா!?//

அந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......???

நட்புடன்
திருச்சிகாரன்.
///

கருத்துக்களுக்கு நன்றிங்க........
----------------------
27 August 2009 14:16


SARFUDEEN said...
நோன்பு திறக்கம் போது மட்டும் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்///

அப்படியா!!
----------------------------

27 August 2009 16:11


ஆ.ஞானசேகரன் said...
நல்லது,...
///

நன்றி ஞான்ஸ்!!

--------------------------
27 August 2009 17:5

மேவி... said...

arumaiyana thagaval

வால்பையன் said...

//அந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......???//


அப்ப அந்த வரஸை கண்டுபிடித்ததும் கடவுள் தானே!
என்னாத்துக்கு வைரஸை கண்டுபிடிக்கணும், அப்புறம் மருந்து கண்டுபிடிக்க அறிவை கொடுக்கணும்!

ஆடு,மாடுக்கு கூட தான் வியாதி வருது, ஏன் கடவுள் அதுகெல்லாம் மருந்து கண்டுபிடிக்க அறிவை கொடுக்கல!

உமா said...

சர்க்கரை நோயைப்பற்றி மிக நல்ல இடுக்கைக்ள் இட்டிருக்கிறீர்கள் டாக்டர்.நன்றி.
வாழ்த்துக்கள்.

Unknown said...

மிகவும் பயனுள்ள பதிவு.

S.A. நவாஸுதீன் said...

நல்ல நேரத்தில் மிக நல்ல பதிவு. ரொம்ப நன்றி தேவா சார்

அப்துல்மாலிக் said...

நிறைய நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்டதுண்டு

இந்த பதிவு நிச்சயம் அவர்களுக்கு உபயோகப்படும்

நன்றிகள் பல‌

இல்யாஸ் said...

பயனுள்ள தகவல்... நன்றி வைத்தியர் ஐயா

அதிரை அபூபக்கர் said...

நோன்பு காலத்தின். பயனுள்ள தகவல்...

எம்.எம்.அப்துல்லா said...

thank u anna.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory