Wednesday 26 August 2009

கொஞ்சம் தேநீர்-உனக்காக!!

கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!



விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!



உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்!!



கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !

26 comments:

அப்துல்மாலிக் said...

தேவா சார்

அந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா

அப்துல்மாலிக் said...

//கருமை வழிந்து பரவும்

இருளில்//

நல்ல சொல்லாடல்

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...

தேவா சார்

அந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா///

ஆமா அபு!!

அப்துல்மாலிக் said...

கவிதை முழுதையும் ரசிச்சேன்

good words

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...

//கருமை வழிந்து பரவும்

இருளில்//

நல்ல சொல்லாடல்//

நன்றி அபு

கார்ல்ஸ்பெர்க் said...

Present Sir!!

அண்ணா, கவிதைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.. அதனால அட்டன்டன்ஸ் மட்டும் தான் :)

கலகலப்ரியா said...

ரொம்ப அருமையா இருக்குங்க..!

ஆ.ஞானசேகரன் said...

மிக அழகு

Jerry Eshananda said...

பிரமிக்கிறேன் தேவா.

மேவி... said...

varigal alagau

நட்புடன் ஜமால் said...

ஏன் தேவா தே நீர் கொஞ்சாமல் கொஞ்சம் கடுமையாக இருக்கு ...

தேவன் மாயம் said...

கார்ல்ஸ்பெர்க் said...

Present Sir!!

அண்ணா, கவிதைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.. அதனால அட்டன்டன்ஸ் மட்டும் தான் :)///

முயற்சி செய்யலாமே கார்ல்ஸ்!!

தேவன் மாயம் said...

கலகலப்ரியா said...

ரொம்ப அருமையா இருக்குங்க..!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

தேவன் மாயம் said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

மிக அழகு//

நன்றி ஞான்ஸ்!!

வால்பையன் said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

தொரை பாட்டெல்லாம் பாடுறாரு!

குடந்தை அன்புமணி said...

ரொம்ப நாளாச்சு இப்படி தேவா சார் கடையில தேநீர் சாப்பிட்டு. ரொம்ப நல்லாருக்கு சார்.
ம்... நடக்கட்டும்...

sakthi said...

விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!

அழகிய சொல்லாடல் தேவா சார்

Anonymous said...

kavithai onnu ezhuthunganu solla nenaichen partha kavithaiye...

sogamum sugamey....kaathalil

Ashok D said...

ok.. rightuuuuu......

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான எளிமையான வரிகள்.வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

மீள்பதிவுன்னாலும் சும்மா மிரட்டலான பதிவு தேவா சார்.

ஆ.ஞானசேகரன் said...

///கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !
///

அருமை சார்

அ.மு.செய்யது said...

க‌விதை தாறுமாறு...இல‌க்கிய‌ ப‌த்திரிகைகளுக்கு எழுத‌ ட்ரை ப‌ண்ணுங்க‌ தேவா..!!!

ரெட்மகி said...

விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!

//
இது இதுதான்....

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

மங்களூர் சிவா said...

/
அபுஅஃப்ஸர் said...

தேவா சார்

அந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா
/

அதானே?
:))

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory